Friday, April 25, 2014

கார்டியன் முடிச்சு (Gordian Knot)

கார்டியன் முடிச்சு (Gordian Knot)
கிரேக்க புராணங்களில் கூறப்பட்டுள்ள கார்டியன் முடிச்சு என்பது ப்ரிகியா தேசத்து அரசன் கோர்டியஸ் என்பவனால் போட்டுவைக்கப்பட்ட முடிச்சாகும்.

கோர்டியஸ் அரசன் ஆவதற்கு முன், அவன் ஒரு சாதாரண குடியானவனாக இருந்தான். ஒருநாள் அவன் தன் மாட்டுவண்டியை ஓட்டிக் கொண்டு முதல்முறையாக ப்ரிகியா நகரத்துக்கு வருகிறான். அவ்வாறு நகரத்துக்குள் நுழையும்போது தெய்வ வாய்மொழிப்படி (அசரீரி வாக்குப்படி) அவனை அந்த நகரத்து மக்கள் மன்னனாக ஏற்றுக் கொண்டனர். கோர்டியஸ், தன் நன்றிக் கடனாக, அவனின் மாட்டுவண்டியை சீயஸ் (Zeus) என்ற கடவுளுக்கு அர்பணித்து விட்டான். அப்போது அந்த வண்டியின் நுகத்தடியைச் சேர்த்து  அந்த நுகத்தடிக் கயிறால் ஒரு 'முடிச்சு' போட்டுவிட்டான். அந்த முடிச்சானது கடும் சிக்கல்கள் கொண்ட ஒரு நூதன முடிச்சு. 'அந்த முடிச்சை அவிழ்ப்பவர், ஆசியாவுக்கு மகுடாதிபதி ஆவார்' என்றும் சொல்லிச் சென்றான்.

எவ்வளவோ பேர் அந்த முடிச்சை அவிழ்க்க முனைந்து தோற்றுப் போயினர். வெகுகாலமாக அந்த வண்டி அந்த இடத்திலேயே இருக்கிறது. இருந்தும் அந்த முடிச்சை அவிழ்க்க யாராலும் முடியவில்லை.

அங்கு வந்த மாவீரன் அலெக்ஸாண்டர் இதனைக் கேள்விப்பட்டு அந்த வண்டியின் முன் வந்து நின்றான். அந்த முடிச்சை நிதானமாகப் பார்த்தான். ஏதோ நினைத்துக் கொண்டவனாக, தன் உடைவாளை உருவி, ஒரே வீச்சில் அந்த முடிச்சை இரண்டாக வெட்டினான். கயிறு சிதறியது.

(குழப்பமான விஷயங்களுக்கு இந்த முடிச்சை உதாரணமாகக்  காட்டி 'கார்டியன் முடிச்சுப் போன்ற குழப்பம்' என்பர்.)
Gordian Knot: A knot tied by Gordius, king of Phrygia, held to be capable of being untied only by the future ruler of Asia, and cut by Alexander the Great with his sword. (in 1579)
(நன்றி; திரு அ.முத்துலிங்கம் அவர்களின் வம்சவிருத்தி சிறுகதை தொகுப்பிலிருந்து)


No comments:

Post a Comment