Thursday, April 17, 2014

திரிசங்கு சொர்க்கம்

திரிசங்கு சொர்க்கம்;

மனித உடலோடுதான் சொர்க்கத்தை அனுபவிக்க முடியுமா? அல்லது உடலை விட்டுப் பிறந்த ஆன்மா சொர்க்கத்தை அனுபவிக்கு முடியுமா?

அரிசந்திரனின் தந்தை திரிசங்குவுக்கு இந்த சந்தேகம் இருந்ததா? இவர் இந்த மனித உடலுடனேயே சொர்க்கம் சென்று அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். எனவே அவரின் குலகுருவான வசிஷ்டரிடம் சென்று கேட்டுக் கொண்டார். அவரோ அவ்வாறு செல்லக் கூடாது என்றும் உடம்பில் இருந்து உயிர் பிறந்த பின், ஆன்மா மட்டுமே சொர்க்கத்துக்கு செல்ல வேண்டும் என்றும் அதனால் நீ உன் உடம்புடன் சொர்க்கம் செல்ல அனுமதி மாட்டேன் என்றும சொல்லிவிட்டார். வசிஷ்டரின் வார்த்தையில்  திருப்திபடாத திரிசங்கு, வசிஷ்டரின் மகனிடம் சென்று தன் விருப்பத்தை தெரிவித்தார். அவரோ, நீ குருவின் வார்த்தையை கேட்க மறுத்து என்னிடம் ஏன் வந்தாய்? என்று திட்டிவிட்டார்.

ஒருவழியாக, கடைசியில் விசுவாமித்திரிடம் சென்று தன் விருப்பதைத் தெரிவித்தார்.

விசுவாமித்திர் இந்த திரிசங்குவின் விருப்பத்தை நிறைவேற்று வதற்காகவே மேலுலகில் உள்ள சொர்கத்துக்கும், பூமிக்கும் இடையில் ஒரு தனி சொர்க்கத்தை ஏற்படுத்தி   அதற்கு 'திரிசங்கு சொர்க்கம்' என்றும் பெயரிட்டு அதை திரிசங்குவுக்கு மட்டும் கொடுத்தார். அந்த திரிசங்கு சொர்க்கத்தில், திரிசங்கு மன்னர் தன் உடம்போடு சென்றாராம்.


திரிசங்கு சொர்க்கம் பூலோகத்துக்கு மேலே, ஆனால் மேலே உள்ள சொர்க்கலோகத்துக்கு கீழே, இரண்டும் கெட்டான் நிலையில் (பூமியிலும் இல்லாமல், உண்மைச் சொர்க்கத்திலும் இல்லாமல், இடையில்) ஏற்படுத்தியதால் இது 'திரிசங்கு சொர்க்கம்' என்று வழங்கப்பட்டு வருகிறது. 

No comments:

Post a Comment