Friday, September 6, 2019

சந்திராயன்-2


Chandrayaan 2
சந்திராயன்-2-ன் சிறப்பு
நிலவில் வாழ முடியுமா என்பதே கேள்வி. ஆம் முடியும் என்று முயற்சித்துள்ளனர். முதன்முதலில் நிலவில் இறங்கியது “சர்வேயர் 7”. இது அமெரிக்காவின் நாசாவின் தயாரிப்பு. இது 1968 ஜனவரி 10-ம் தேதி இறங்கியது.
பொதுவாக எல்லா விண்கலங்களுமே நிலவின் மத்தியப் பகுதியிலேயே இறங்கி உள்ளது. ஏனென்றால் அதுவே பாதுகாப்பானது என்பதால். நிலவின் வட கோள் அல்லது தென்கோள் எனச் சொல்லப்படும் பகுதியில் விண்கலங்களை இதுவரை இறக்கிப் பார்க்கவில்லை. இந்தப் பகுதி மிகவும் குளிர் நிறைந்த பகுதி என்பதால. இங்கு சுமார் மைனஸ் 230 டிகிரி செல்சியஸ்க்கும் கீழே குளிர் இருக்குமாம். இங்கு ஒரு பொருளைப் போட்டால், போட்ட வினாடியே விரைத்துவிடும். சூரியனின் வெப்பமோ வெளிச்சமோ இங்கு பார்க்கவே முடியாதாம். மேலும் பெரிய பள்ளத்தாக்குகள் நிறைந்த பகுதியாம். எனவே இங்கு விண்கலங்களை இறக்குவது என்பது சிம்ம சொப்பனம். அதற்குறிய சூரிய வெளிச்சம் கிடைக்காமல் மின்கலங்கள் வேலை செய்யாது. தொலைத் தொடர்பும் துண்டிக்கபடும் அபாயமும் உள்ளது.
ஆனாலும் துணிந்து இந்தியாவின் சந்திராயன் நிலவின் தென்பகுதியில் இறங்கி உள்ளது. நிலவின் மத்தியில் இருக்கும் நடுக்கோட்டிலிருந்து தெற்கே 70 டிகிரி தள்ளி இறங்கி உள்ளது. இதுவரை எந்த நாடும் இவ்வளவு தென்பகுதியில் இறக்கிதில்லையாம். இதுவே ஒரு ஆச்சரியமான வெற்றி தானாம்.
இதுவரை மொத்தம் 28 முறை விண்கலங்கள் நிலவில் இறங்கி உள்ளன. 29-வது விண்கலமாக இந்தியாவின் சந்திராயன்-2 என்ற விண்கலம் நிலவில் இறங்கி இருப்பது, அதுவும் தென்கோடியில் குளிர் நிறைந்த, வெளிச்சமே இல்லாத பகுதியில் இறங்கி இருப்பது அல்லது இறக்கி இருப்பது ஒரு சவாலான செயல்தானாம்.
சைனா நாடு சேன்ஸ்-4 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. அது நிலவின் மத்தியக் கோட்டிலிருந்து தெற்கே 45 டிகிரியில் இறக்கியது. ஆனால் இந்தியாவின் சந்திராயன்-2 தெற்கே 70 டிகிரியில் இறங்கி சாதனை படைத்துள்ளதாம்.
இங்கிருந்து அதாவது பூமியில் இருந்து சுமார் 100,000 (நூறாயிரம்) மைல்கள் தொலைவில் நிலவு உள்ளது. செவ்வாய் கிரகமோ, இங்கிருந்து 100 மில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ளது. புளுட்டோ கிரகமோ ஒரு பில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ளது.
அமெரிக்காவின் நாசா மையம், 1997-ல் பாத்பைன்டர் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது. அதைத் தொடர்ந்து அது, இரட்டை விண்கலங்களையும் பின்னர் 2004-ல் அனுப்பியது. ஸ்பிரிட், ஆப்பர்சுனிட்டி. அதைத் தொடர்ந்து 2007-ல் போனிக்ஸ் என்ற விண்கலத்தை அனுப்பியது. அதைத் தொடர்ந்து 2012-ல் க்யூரியாசிட்டி என்ற விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பியது.
இந்த விண்கலங்கள், நம்மூர் விமானத்தை விட 10 மடங்கு வேகத்தில் செல்லக்கூடியதாம். அவை மீண்டும் திரும்பி பூமிக்கு வரும்போது, வந்த அதே வேகத்தில், தன்னை நிறுத்திக் கொண்டு, ஆடாமல் அசையாமல் பூமியில் பூப்போல இறங்க வேண்டுமாம். இவை அனைத்தும் மனிதனின் துணை இல்லாமல் கம்யூட்டர் உத்தரவுக்கு கீழ்படிந்து இயங்க வேண்டுமாம். கரணம் தப்பினால் மரணம் என்பது போன்ற விளையாட்டுத்தான் இது.
இவ்வளவும் ஏதற்காக என்ற கேள்வி எழத்தான் செய்யும். மனிதன் தன்னை மேம்படுத்திக் கொள்ள நினைக்கிறான். இருக்கும் இடத்திலேயே, யார் வம்பு தும்புக்கும் போகாமல் வாழ்ந்தும் விடலாம். வாழ்க்கையையே ஒரு போராட்டமாக வாழவும் செய்யலாம். நிலவில் குடித்தனம் போகப் போகிறானாம் மனிதன். தேவையே கண்டுபிடிப்புகளுக்கு தந்தை.
நிலவில் வாழ்வதற்கு நீர் வேண்டும். நிலவில் நீர் இருக்கிறதா இல்லையா, கிடைக்குமா, கிடைக்காதா? இந்த கேள்விக்குப் பதில் தெரிய வேண்டும். நீர் இருந்தால், ஆக்‌சிஜனை உருவாக்கிவிடலாம். உயிர் காத்தும் நீரும் இருந்தால் போதுமே! மனிதன் வாழ்ந்து விடலாமே.
இறைவன் பூமியில் மனிதனைப் பிறக்க வைக்கிறான். அவனோ, மற்றொரு கிரகத்தில் வாழ நினைக்கிறான்.
நிலவுக்குச் செல்லும் விண்கலத்தைக் கண்டுபிடித்தான். இது மூன்று நாட்களில் நிலவை அடையும். மூன்றுநாள் பயணம்தான். ஆனால் செவ்வாய் கிரகத்துக்குச் செல்ல வேண்டும் என்றால் சுற்றி சுற்றிச் செல்ல வேண்டுமாம். நிலவின் தூரத்தை விட 1000 மடங்கு தூரம் உடையது. செவ்வாய் கிரகத்துக்குச் செல்ல சுமார் ஒரு ஆண்டு தேவைப்படுமாம்.
எனவே நிலவில் வாழும் ஆசை அவனை விடவில்லை. சோதனையில் வெற்றியும் பெற்று விட்டான். இனி நிலவிலும் மனிதன் வாழ்வான்.
**