Wednesday, April 9, 2014

அம்பலத்து அமர சேகரனே!

அம்பலத்து அமர சேகரனே!
தனதன்நல் தோழா, சங்கரா, சூல
பாணியே, தாணுவே, சிவனே,
கனகநல் தூணே, கற்பகக் கொழுந்தே,
கண்கள் மூன்றுடையதோர் கரும்பே,
அனகனே குமர விநாயக கனக
அம்பலத்து அமரசே கரனே,
உனகழல் இணையென் நெஞ்சினுள் இனிதாத்
தொண்டனேன் நுகருமா நுகரே. -- (திருமாளிகைத் தேவர் திருவிசைப்பா)


"குபேரனது நண்பனே, நன்மை செய்பவனே, சூலத்தை கையிலே ஏந்தியவனே, அழிவற்றவனே. சிவனே, நல்ல பொற்தூண்போல் என்னைத் தாங்கிப் பற்றுக் கோடாயிருப்பவனே, கற்பகத் தளிரே, மூன்று கண்களையுடைய கரும்பு போன்ற இனியவனே, தூய்மையானவனே விநாயகனுக்கும் முருகனுக்கும் தந்தையே பொன்னம்பலத்திலே ஆடும்  தேவர் தலைவ, தொண்டனாகிய நான் உன் திருவடிகள் இரண்டையும் எனது நெஞ்சினுள்ளே இனிமையாக அனுபவிக்குமாறு நீ திருவருள் புரிவாயாக.


No comments:

Post a Comment