Thursday, January 28, 2021

சத்வத்சிங் சானே பாஸ்போர்ட் வழக்கு 1967

 Satwat Singh Sawheny case

January 28, 2021

சத்வத்சிங் சானே வழக்கு 1967 AIR 1836 : 1967 SCR (2) 525

சத்வத்சிங் சானே என்பவர் இந்திய குடிமகன். இவர் ஆட்டோமோபைல் பாகங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். எனவே வியாபார விஷயமாக அடிக்கடி வெளிநாடு செல்வது வழக்கம். 1958ல் இருந்து இவர் இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கிறார். 1965-ல் வேறு ஒரு பார்ஸ்போர்ட் வாங்கி உள்ளார். அது 1967 வரை செல்லுபடியாகும் நிலையில் உள்ளது. ஆனால் 1966-ல் இவரின் இரண்டு பாஸ்பர்ட்டுகளையும் அரசிடம் ஒப்படைக்கும்படி பாஸ்போர்ட் அதிகாரி இவருக்கு கடிதம் அனுப்புகிறார்.

இப்படி பாஸ்பர்ட்டை முடக்குவது அவரின் அடிப்படை உரிமைகளை மீறிவதாகும் என்றும்இந்திய அரசியல் சாசன சட்டத்தின் பிரிவுகள் 21, 14 இவைகளை மீறுவதாகவும் உள்ளதாக வழக்குப் போடுகிறார். அவரின் வக்கீல்  சோலி சொராப்ஜி.

ஆனால் அரசு வக்கீல், “பாஸ்போர்ட் என்பது அரசின் பத்திரம். அது அரசு கொடுக்கும் சலுகை. அதை ஒரு உரிமையாக எடுத்துக் கொள்ள முடியாது. பிரயாணம் செய்வது அடிப்படை உரிமை ஆகாது” என்கிறார். 

இந்திய பாஸ்போர்ட் சட்டம் 1920 பிரிவு 3-ன்படி இதை முறைப்படுத்த அரசுக்கு அதிகாரம் உண்டு. இந்தியாவை விட்டு வெளியேறுபவர் முறையான பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அவரை தடை செய்ய அரசுக்கு அதிகாரம் உண்டு. 

இந்த பாஸ்போர்ட் முறையே 20-ம் நூற்றாண்டில்தான் ஆரம்பம் ஆனது. அதுவும் முதலாம் உலகப்போர் முடிந்த காலத்தில்தான் இந்த பாஸ்போர்ட் முறையை பல நாடுகள் கொண்டு வந்தன. யாராவது வேற்று நாட்டவர் அவர் நாட்டுக்கள் நுழைந்தால்அவரின் நாட்டின் அரசு கொடுத்த பாஸ்போர்ட் பத்திரம் கட்டாயம் என்று முறைப்படுத்தியது. அதைக் கொண்டு அவர் எந்த நாட்டின் குடிமகன் என்ற கண்டுகொள்ள முடியும் என்பதற்காக ஏற்படுத்திய முறையாகும். அந்த பாஸ்போர்ட்டை கொடுத்த நாடு, “எங்களின் குடிமகனுக்கு உங்கள் நாட்டில் தகுந்த பாதுகாப்பை கொடுக்கவும்” என்று மற்ற நாடுகளுக்கு கொடுக்கப்பட்ட அனுமதிச் சீட்டுத்தான் இந்த பாஸ்போர்ட் என்று இங்கிலாந்து சட்டம் சொல்கிறது. அதே போலவே மற்ற நாடுகளின் பாஸ்போர்ட் விதிமுறைகளும் இருக்கும். எனவேதான் பாஸ்போர்ட்டை “ஒரு அரசியல் பத்திரம்”  (Political Documentஎன்பர்.

அமெரிக்க சுப்ரீம் கோர்ட் Kent vs Dulles என்ற வழக்கில், இருவர் பாஸ்போர்ட் கேட்கும்போதுஅவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர்கள் இல்லை என்று உறுதிமொழி கொடுக்கத் தவறினார்கள் என்பதால் அவர்களுக்கு அமெரிக்க அரசு பாஸ்போர்ட் கொடுக்க மறுத்தது. அதை எதிர்த்து அந்த வழக்கு. அதில்பாஸ்போர்ட் என்பது ஒரு நாட்டின் குடிமகன் என்றும்அவர் வேறு நாட்டுக்கு சென்று தன் நாட்டுக்கு திரும்பும் போதுஅவர் இந்த நாட்டின் குடிமகன் என்பதை உறுதி செய்து கொள்ளவும் வழங்கும் அரசு பத்திரம் என்று விளக்கம் சொல்லி உள்ளது.

ஆகஇந்த வழக்கில்ஒரு இந்திய குடிமகன் வெளிநாட்டுக்குச் செல்வது என்பது அவரின் அடிப்படை உரிமையா (Is it a Fundamental right to travel abroad?) என்ற கேள்வி மட்டுமே உள்ளது.

இந்திய சுப்ரீம் கோர்ட் கோபாலன் வழக்கில்ஒரு இந்திய குடிமகன் வெளிநாட்டுக்கு செல்வதை தடை செய்யும் சட்டம் எதுவும் இந்திய அரசு அதுவரை ஏற்படுத்தி வைக்கவில்லை என்று சொல்லியுள்ளது.

தனிமனித சுதந்திரம் என்பது அவன் எங்கு வேண்டுமானாலும் போய் வருவது. அமெரிக்க சுப்ரீம் கோர்ட் ஒரு வழக்கில், “வெளிநாடு செல்வது என்பது உரிமை இல்லை என்றும்அது ஒரு சலுகை” என்றும் சொல்லியுள்ளது. ஆனாலும் அவ்வாறு செல்வதை சட்டத்தின் மூலமே தடை செய்ய முடியும் என்றும் சொல்லியுள்ளது.

இங்கிலாந்து நாட்டில், “வெளிநாடு செல்வது என்பது தனிமனிதனின் சுதந்திரமும் கூட” என்று சொல்லியுள்ளது. இதை 1915 முதல் மேக்ன கார்ட்டா சட்டம் பிரிவு 42 ஐ காட்டி சொல்லியுள்ளது.

தனி மனித சுதந்திரம் என்றால் என்னஅவன் விருப்பம்போல எந்த திசையிலும் திரும்பலாம்செல்லலாம். அதில் அவனின் விருப்பம் இருக்க வேண்டும். அதற்கு தடை இருக்க கூடாது. ஆனால் இது வெளிநாடு செல்வதையும் குறிக்குமா என்பதும் ஒரு கேள்வி. உள்நாட்டில் வேண்டுமானால் தடையில்லாமல் சென்று வரலாம். இதுதான் அரசியல் சாசனம் கொடுத்த அடிப்படை உரிமை. 

சென்னை ஐகோர்ட் வி.ஜி.ராவ் என்ற வழக்கில் (நீதிபதி ராஜமன்னார் மற்றும் நீதிபதி வெங்கட்ராம ஐயர்) மனுதாரரின் பாஸ்போர்ட்டில் ரஷ்யா செல்வதற்கும் சேர்த்த அனுமதி வழங்கும்படி கேட்கிறார். மறுப்பது அவரின் அடிப்படை உரிமையை பாதிக்கிறது என்கிறார். அவ்வாறு அவரை தடை செய்ய முடியாது என்று தீர்ப்பு உள்ளது.

டில்லி ஐகோர்ட் ரவீந்திரநாத் மாலிக் என்ற வழக்கில்வெளிநாடு செல்வதும்திரும்பி வருவதும்அரசியல் சாசன சட்டம் பிரிவு 21-ல் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமை இல்லை என்று தீர்ப்பு கூறியுள்ளது.

இந்தியாவைப் பொறுத்த மட்டில்முதலாம் உலகப் போருக்கு முன்னர் இந்த பாஸ்போர்ட் முறை இருக்கவில்லை. இந்திய பாஸ்போர்ட் விதிமுறைகள் 1917 கொண்டு வரப்பட்டது. அதன்படிபாஸ்போர்ட் என்பது இந்தியாவை விட்டு வெளியே செல்வதற்கும்வெளியே சென்றவர் இந்தியாவுக்குள் நுழைவதற்க்கும் ஆக இரண்டுக்கும் ஆன அனுமதி பத்திரம் என்று சொல்லியுள்ளது. இந்திய பாஸ்போர்ட் சட்டம் 1920 மட்டும் தான் அப்போதைய சட்டமாக இருந்தது. பின்னர் இந்திய பாஸ்போர்ட் விதிமுறைகள் 1950 கொண்டுவரப் பட்டது. அதில் பாஸ்போர்ட் கொடுப்பதுவிசா கொடுப்பது போன்ற விதிமுறைகள் கொண்டுவரப் பட்டன. இந்தியாவை விட்டு வெளியேற பாஸ்போர்ட் அவசியம். வேறு நாட்டில் நுழைய விசா அவசியம். மறுபடியும் இந்தியாவுக்கு திரும்பி வர பாஸ்போர்ட் அவசியம்.

எனவே இந்த வழக்கில்வெளிநாடு செல்வது என்பது தனிமனித அடிப்படை உரிமைகளில் ஒன்று என்று ஏற்க முடியாது என்றும் அது ஒரு வகை சலுகையே என்றும் தீர்ப்பு கூறி விட்டது.

**

Monday, January 11, 2021

கோர்ட் டிகிரியை பதிவு செய்ய வேண்டியது அவசியமா

 கோர்ட் டிகிரியை பதிவு செய்ய வேண்டியது அவசியமா

 

இராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள மண்டபம் பகுதியில் உள்ள கடற்கரைப் பகுதியில்ஒரு சமுதாய மீனவர்கள் தொடர்ந்து மீன் பிடித்து வந்தார்கள். அங்கு கடலில் உள்ள  ஒரு சிறு நிலப் பகுதியில்  (Foreshore) அப்படி பிடித்த மீன்களை காய வைப்பதும்குவித்து வைப்பதும்கனோ (Canoe) என்னும் சிறு படகையும்பெரும் படகையும் (boatஅங்கு நிறுத்தி வைப்பதும்மீன் பிடி வலைகளை காய வைப்பதும் போன்ற வேலைகளை தொடர்ந்து செய்து வந்தார்கள்.

 

அதை அந்த நிலப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆட்சேபனை செய்தார்கள். எனவே அதை எதிர்த்து 1920-ல் இராமநாதபுரம் சப் கோர்ட்டில் சிவில் வழக்குப் போட்டார்கள். அந்த வழக்கில் 1930-ல் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டு (Compromise Decree ) அதை ஒட்டி கோர்ட் டிகிரி கொடுத்தது. இந்த சமாதான டிகிரியில்அவர்கள் 21 வருடங்களுக்கு தொடர்ந்து மீன் பிடிக்கவும்அந்த நிலத்தை குத்தகையாக வைத்துக் கொள்ளவும்அதற்காக வருடம் ரூ.7500 கொடுக்க வேண்டும் என்றும், 21 வருட முடிவில் அந்த கடலில் உள்ள நிலப் பகுதியை (Foreshore) திரும்ப ஒப்படைத்து விட வேண்டும் என்றும், முடிவு செய்து அதை ஒட்டி கோர்ட் சமாதான டிகிரியாக தீர்ப்புக் கொடுத்தது. 

 

இந்த வழக்கில் அவர்கள் கேட்டது அந்த நிலத்தை உபயோகப்படுத்த உரிமை கோரினர். ஆனால் சமாதான டிகிரியில்வழக்குக்குச் சம்பந்தமில்லாமல்அந்த நிலப்பகுதியை குத்தகை உரிமை கேட்டுஅதற்கு ஒப்புக் கொண்டுஅந்த டிகிரியை வாங்கி உள்ளார்கள்.

 

பின்னர் சில ஆண்டுகள் கழித்துதொடர்ந்து அந்த ஒப்புக்கொண்ட குத்தகைத் தொகையைக் கொடுக்கவில்லை என்பதால்அவர்கள் மீது சமாதான கோர்ட் டிகிரியை வைத்து வழக்குப் போட்டார்கள். ஆனால்அந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள்இந்த கோர்ட் சமாதான டிகிரியை (தீர்ப்பை) பத்திரமாக பதிவு செய்யாததால் அதைக் கொண்டு வழக்குப் போட முடியாது என்று வாதம் செய்தார்கள். 

 

சொத்துரிமைச் சட்டம் 1882

பொதுவாக சொத்துக்களை விற்பனைமற்றும் பரிமாற்றம் செய்யும் போதுஅதை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று சொத்துரிமைச் சட்டம் 1882-ல் பிரிவு 17(1)-ல் சொல்லியுள்ளது.

அதன்படி கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய பத்திரங்கள் எவை என்று சொத்துரிமைச் சட்டம் பிரிவு 17(1)-ல் சொல்லியுள்ளது:

1.     Sec.17(1)(a) சொத்தின் தானப் பத்திரம். (Gift deed)

2. Sec.17(1)(b) சொத்தின் உரிமைகளை மாற்றும் பத்திரம் (கிரயம்அடமானம்போன்றவைகள்). (Sale deed, Mortgage deed etc)

3.     Sec.17(1)(c) சொத்தின் உரிமைகளை மாற்றிக் கொடுத்த பத்திரத்தில் கொடுக்க வேண்டிய பணத்தை பெறும் போது எழுதிக் கொள்ளும் பத்திரம். (Receipt of money acknowledged in respect of immovable property).

4.     Sec.17(1)(d) சொத்தின் குத்தகைப் பத்திரம். (Lease deeds).

5.     Sec.17(1)(e) சொத்தின் பேரில் வாங்கிய டிகிரியை வேறு ஒருவருக்கு மாற்றிக் கொடுக்கும் அசைமெண்ட் பத்திரம் (Assignment deed of Court decree regarding immovable property).

 

மேலும்மேற்சொன்னவற்றுக்கு விதிவிலக்காக எந்த எந்த பத்திரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டியதில்லை என்று சொத்துரிமைச் சட்டம் பிரிவு 17(2)-ல் சொல்லியுள்ளது. அவை:

 

அதில் எல்லாக் கோர்ட் டிகிரிகைளையும் (சொத்து சம்மந்தபட்ட டிகிரி உட்பட) கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லி உள்ளது. 

 

ஆனாலும் அதிலும் ஒரு விதிவிலக்காகஅந்த வழக்கில் சம்பந்தம் இல்லாத சொத்தைப் பற்றி ஒரு டிகிரியை கோர்ட் கொடுத்தாலும்அல்லது பார்ட்டிகளின் வழக்குக்கு சம்பந்தம் இல்லாத சொத்தைப் பற்றி ஒரு டிகிரியை (சமாதான டிகிரி உட்பட) பெற்றிருந்தால்அப்படிப்பட்ட டிகிரியை கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று விளக்கியுள்ளது.

 

வழக்கில் சம்பந்தப்பட்ட சொத்தின் டிகிரி – பதிவு அவசியம் இல்லை:

அதாவதுவழக்கில் சம்மந்தபட்ட சொத்தாக இருந்தால்அப்படிப்பட்ட டிகிரியை (சமாதான டிகிரி உட்பட) பத்திரமாக பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று பிரிவு 17(2)-ல் சொல்லியுள்ளது.

 

வழக்கில் சம்பந்தம் இல்லாத சொத்தின் டிகிரி – பதிவு அவசியம்:

 

ஆனால்வழக்கில் சம்பந்தமில்லாத ஒரு சொத்தைஅந்த வழக்கில் ஒரு டிகிரியாக (சமாதான டிகிரி உட்பட) பெற்றிருந்தால்அந்த டிகிரியை கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெளிவு படுத்தியுள்ளது. 

 

எனவே இந்த வழக்கில்மீனவர்கள் பெற்ற சமாதான டிகிரி என்பது வழக்குச் சொத்து (கடலுக்குள் இருக்கும் ஒரு நிலப்பகுதி -Foreshore) பற்றியே உள்ளது. எனவே அதை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என்று வழக்குப் போட்டவர்களின் வாதம்.

 

ஆனால்இந்த விதிவிலக்கு என்பதுபிரிவு 17(1)(b) & 17(1)(c) வகை சொத்து மாற்றங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று சொல்லி உள்ளது. அப்படிப் பார்த்தால்குத்தகை உரிமை (Lease) என்பது பிரிவு 17(1)(d)-ல்வருகிறது. அதற்கு இந்த விதிவிலக்குப் பொருந்தாது என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

இந்த சொத்து மாற்றுச் சட்டம் 1882-ஐ, 1929-ல் திருத்தம் செய்து திருத்தல் சட்டம் கொண்டு வந்தார்கள். அதன்படியும்இந்த பிரிவு 17(1)(d)- (Lease) அந்த விதிவிலக்குக்குள் கொண்டு வரவில்லை.

 

எனவேமுடிவாக:

வழக்கில் உள்ள சொத்துக்களைப் பொறுத்து டிகிரி வாங்கி இருந்தால், (சமாதான டிகிரி உட்பட)அதை பத்திரமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று தெள்ளத் தெளிவாகிறது.

 

ஆனால்அந்த வழக்கில் சம்மந்தமில்லாத சொத்தைப் பொறுத்து அந்த வழக்கில் ஒரு டிகிரி வாங்கி இருந்தால், (சமாதான டிகிரி உட்பட)அதை கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று விதிவிலக்கில் சொல்லி உள்ளது.

 

ஆனாலும்அப்படி வழக்குக்கு சம்பந்தமில்லாத சொத்து என்பது பிரிவு 17(b) & 17(c) க்கு மட்டுமே பொருந்தும்குத்தகை சம்மந்தப்பட்ட டிகிரி வழக்கின் சொத்துக்கு சம்மந்தப்படாத சொத்தாக இருந்தாலும்அதை கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றே சட்டம் சொல்கிறது. 

 

பிரைவி கவுன்சில் வழக்கான Hemanta Kumari Debi vs Midnapore Zamindari Co, AIR 1919 PC 79 என்ற வழக்கில் தீர்ப்பாகபிரிவு 17(1)(b) & (c) இவைகளுக்கு மட்டுமே என்று சொல்லியுள்ளதால்குத்தகை என்பது இதில் வராது என்பதால்அந்த டிகிரியை கட்டாயம் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றே தீர்ப்பு கூறியுள்ளது.

 

A lease is, of course, a non-testamentary instrument which operates to create a right in immovable property; but inasmuch as leases are dealt with separately in a later clause the rules of construction of statutes preclude the respondent calling in aid Clause (b).

 

எனவே இந்த வழக்கில் அந்த சமாதான டிகிரிகுத்தகை சம்மந்தப்பட்டு இருப்பதால்அதை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என்று தீர்ப்புச் சொல்லியுள்ளது.

 

E.S.Kasim Marakkayar and others vs P.R.M.K.Muhammad Abdul Rahiman, dated 25 January 1944, AIR 1944 Mad 273.

**

 

 

வக்ப் பொதுக் கொடை எது


வக்ப் பொதுக் கொடை எது

 

மிர்சா முகமத் அலி நமாசி (ஷியா முகமதிய பிரிவைச் சேர்ந்தவர்) என்பவர் 1930-ல் தனது சொத்துக்களைப் பொறுத்து ஒரு செட்டில்மெண்ட் பத்திரம் எழுதி வைக்கிறார். அதில் கீழ்கண்ட தானதருமங்களைச் செய்யும்படி சொல்லியுள்ளார்.

1)      வசதியில்லாத தனது உறவினர்களுக்கு உதவவும், (30%)

2)     மொகரம் பண்டிகைமற்றும் ஷியா முஸ்லீம்களின் மற்ற பண்டிகைகளைக் கொண்டாடவும், (வருமானத்தில் 10%).

3)     வசதியில்லாத ஷியா முகமதியர்களின் திருமணத்தை நடத்தவும்வசதியில்லாத முகமதியர்களின் இறப்புச் செலவுகளைச் செய்யவும்

4)    செய்யது என்ற முஸ்லீம் சமுதாயத்துக்கு வேண்டிய நன்மைகளைச் செய்யவும்(20% மேற்கண்ட இரண்டுக்கும் சேர்த்து).

5)     ஷியா பிரிவைச் சேர்ந்த முகமதியர்களின் பண்டிகைகளை கொண்டாடவும்அதை ஒட்டிய தான தர்மங்களைச் செய்யவும்அந்த செட்டில்மெண்டில் சொல்லியுள்ளார்.

 

இந்த செட்டில்மெண்டை வக்ப் என்னும் தர்மமாக எழுதி வைத்துள்ளார். அதற்கு முத்தாவலி என்ற நிர்வாகியை நியமித்துள்ளார். அந்த முத்தாவலிஇந்த தர்மங்களை செய்யவும்இதில் குறிப்பிட்டுள்ள சதவிகிதத்தை தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள அதிகாரமும் கொடுத்துள்ளார். 

 

மற்றவைகளை தருமம் என்று ஏற்கலாம் என்றும்ஆனால்தனது வசதியில்லாத உறவினர்களுக்கு உதவி செய்வதை தர்மம் என்று ஏற்க முடியாது என்று வருமான வரித்துறை தெரிவிக்கிறது. ஏனென்றால் அது பொதுவான ஒரு சமுதாயக் கூட்டம் என்று கருத முடியாது. (பொதுமக்கள்ஒரு சமுதாயம்சாதிஒரு மதம்,போன்றவைகளை ஒரு பொதுமக்களாக ஏற்கலாம். ஆனால்தன் குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களை ஒரு சமுதாயக் கூட்டம் என்று ஏற்க முடியாது என்றும் அது தனி நபருக்கு செய்யும் உதவி என்பது வருமான வரித்துறையின் வாதம்).

 

Lord Parker of Waddington said: “A trust to be valid must be for the benefit of individuals, which this is certainly not, or must be in that class of gives for the benefit of the public which the Court in this County recognize as charitable in the legal as opposed to the popular sense of that term.  Moreover, if a trustee is given a discretion to apply trust property for purposes some of which are and some are not charitable, the trust is void for uncertainty.”

 

லார்டு பார்க்கரின் கூற்றுப்படி பார்த்தால்இந்த தானத்தில்முத்தாவலி இஷ்டம்போல தானத்தை மாற்ற முடியும் என்றும்அதிலும் குறிப்பாகவக்ப் ஏற்படுத்தியவரின் ஏழை உறவினர்களுக்கு கொடுத்திருப்பதால்அது தர்ம காரியமாக ஏற்க முடியாது என்பதால்இந்த வக்ப் என்னும் பொதுக் கொடையே சட்டப்படி செல்லாது என்று ஆகிறது.

 

இந்தியாவில் இதன் நிலை:

ஏழை உறவினர்களுக்கு கொடுத்த அல்லது எழுதி வைத்த வக்ப் என்னும் பொதுக் கொடையை பொது தர்மம் அல்லது பொது சமுதாயத்துக்கு கொடுத்த கொடையாக (தானமாக) ஏற்பதில்லை. அதிலும் முத்தவாலி அவரின் விருப்பத்துக்கு அந்த தானத்தை மாற்ற முடியும் என்பதால்இந்த கொடை மூலம் பயனடையும் பயனாளிகள் (Beneficiaries are not general public and not specific in nature) நிலையில்லாதவர்கள் ஆகி விடுகிறார்கள் என்பதால்இதை ஒரு பொதுக் கொடை அல்லது வக்ப் என்று ஏற்க முடியாது.

 

எனவே இந்த வழக்கில்இந்த வக்ப் என்னும் பொதுக்கொடை மூலம் செய்யும் தர்மங்களை ஒரு தர்ம காரியமாக ஏற்க முடியாது என்றும்அதை ஒட்டி அதற்கு வரிச் சலுகை கொடுக்க முடியாது என்றும் சென்னை ஐகோர்ட் 1944-ல் தீர்ப்பு சொல்லியுள்ளது.

The Commissioner of Income Tax vs Aga Abbas Ali Shirazi on 28-Jan-1944, (1944 -12 ITR 179 Mad).

**

Wednesday, January 6, 2021

இந்து திருமணச் சட்டத்தில் ஒரு வழக்கு

 இந்து திருமணச் சட்டம் சில விளக்கங்கள்

1960-ல் நடந்த வழக்கு:

1957-ல் சவுமியநாராயணன் என்பவர் ஜெயலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கணவர் ஆண்மை இல்லாதவர் (Impotent) என்று சொல்லி, இந்த திருமணத்தை ரத்து செய்யும்படி இந்து திருமணச் சட்டம் 1955-ன் பிரிவு 12-ல் கோர்ட்டில் மனைவி மனுக் கொடுக்கிறார். கீழ்கோர்ட் அதை ஒப்புக்கொண்டு அந்தத் திருமணத்தை ரத்து (Annulment of marriage; not divorce) செய்து விடுகிறது.

பின்னர், மனைவி, தனக்குச் ஜீவனாம்சம் வேண்டும் என்று அவர் மீது இந்து திருமணச் சட்டம் 1955-ன் பிரிவு 25-ல் வழக்குப் போடுகிறார். ஆனால் கணவனோ, “திருமணமே ரத்து ஆகி விட்டது; கணவன்-மனைவி உறவே இல்லை என்றும்; அப்படி இருக்கும்போது, இந்த ஜீவனாம்ச மனு எப்படி செல்லுபடியாகும்” என்று எதிர்க்கிறார். ஆனாலும் அவர் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று கீழ்கோர்ட் சொல்கிறது.

அதை எதிர்த்து கணவன் ஐகோர்ட்டில் அப்பீல் செய்கிறார். அங்கு, இந்து திருமணச் சட்டம் 1955-ன் பிரிவு 25-ன்படி “மனைவி என்ற நிலையை இழந்தவர் (a woman, who has ceased to be a wife) ஜீவனாம்சம் கேட்க முடியாது என்று உள்ளது என்று வாதம் செய்கிறார்.

ஐகோர்ட் விளக்கம்:

டைவர்ஸ் வாங்கிய பின்னரும், அந்தக் கணவன், அவனின் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்பதே சட்டம். ஆனால், அந்த மனைவி, மறு திருமணம் (Re-marriage) செய்யாமல் இருக்க வேண்டும் என்பது அதன் நிபந்தனை.

கோர்ட் உத்தரவு மூலம், ஜீவனாம்சம் பெற்றுக் கொண்டிருக்கும் மனைவி, கீழ்கண்ட நிலைகளில், அவள் ஜீவனாம்சம் பெற முடியாது.

“(1) அவள் மறு திருமணம் செய்து கொண்டால் (remarried).

(2) அவள் நடத்தை கெட்டவளாக வாழ்ந்தால் (she has not remained chaste).

எனவே டைவர்ஸ் வாங்கியவரும், திருமணத்தை வேறு காரணங்களுக்காக ரத்து செய்து கொண்டவரும், ஜீவனாம்சம் கேட்கும் உரிமை உள்ளது என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பு கூறியுள்ளது.

மூன்று வகைகளில் ஒரு இந்து திருமணத்தை ரத்து செய்யலாம்:

“(1) இந்து திருமணச் சட்டம் 1955-ன் பிரிவு 11-ன்படி அந்த திருமணம் சட்டப்படி சரியில்லாத காரணங்களில் இருந்தால், அதாவது, பிரிவு 5(1), 5(4) & 5(5) இவைகளில் இருந்தால் அந்த திருமணம் செல்லாது (null and void) என்று கோர்ட் டிகிரி கொடுக்கலாம்.

(2) இந்து திருமணச் சட்டம் 1955-ன் பிரிவு 12-ன்படி அந்த திருமணம் சட்டப்படி இல்லை என்று (annulment of marriage) டிகிரி கொடுக்கலாம்.

(3) இந்து திருமணச் சட்டம் 1955-ன் பிரிவு 13-ல் சொல்லி உள்ள காரணங்களுக்காக டைவர்ஸ் டிகிரி (decree of divorce) கொடுக்கலாம்.

பிரிவு 5(1)-ல் அந்த திருமணம் நடக்கும் போது, அந்த ஆணுக்கோ, அல்லது அந்தப் பெண்ணுக்கோ ஏற்கனவே ஒரு மனைவியோ, கணவணோ உயிருடன் இருக்க கூடாது என்பது கன்டிஷன். அதை மீறினால் அப்படிப்பட்ட திருமணத்தை சட்டப்படி செல்லாது என்று null and void டிகிரியை கோர்ட் கொடுக்கும்.

பிரிவு 5(4)-ல் அந்த ஆணும் பெண்ணும் தடை செய்யப்பட்ட உறவுக்குள் இருக்க கூடாது. அதாவது அவர்கள் இருவரும் நெருங்கிய உறவாக இருக்க கூடாது. (குறிப்பாக தன்னுடைய சகோதரியை திருமணம் செய்ய முடியாது. தன்னுடைய தந்தையின் சகோதரியை (அத்தையை) திருமணம் செய்ய முடியாது). இவர்கள் எல்லாம் தடை செய்யப்பட்ட திருமண உறவுக்குள் வருவார்கள். அப்படிப்பட்ட திருமணத்தை சட்டப்படி செல்லாது என்று nulll and void டிகிரியை கோர்ட் கொடுக்கும்.

பிரிவு 5(5)-ல் திருமணம் செய்யும் ஆண் பெண் இருவரும் சபிண்டர்களாக இருக்க கூடாது. சபிண்டா உறவு என்பது, ஒரே ரத்த உறவு ஆகும். இது தாய் வழியில் மூன்று தலைமுறைக்கும், தந்தை வழியில் ஐந்து தலைமுறைக்கும் தொடரும். ஒரே மூதாதையர் வழி வந்தவர்கள் இருவருக்கும் நடக்கும் திருமணம் தடைசெய்யபட்ட உறவு அல்லது சபிண்டா உறவு (Spandia relationship or prohibited relationship) ஆகும். (இதன்படி பார்த்தால், அத்தைமகள், மாமன்மகள், அத்தைமகன், மாமன்மகன் இவர்கள் சபிண்டா உறவு என்னும் தடை செய்யப்பட்ட உறவுக்குள் வருவார்கள். ஆனாலும், தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அத்தை அல்லது மாமன் மகன் அல்லது மகளைத் திருமணம் செய்வது சமுதாயப் பழக்க வழக்கமாக சில சமுதாயங்களில் தொடர்ந்து கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. இதை “தொடர் பழக்க-வழக்கம்” (Custom and Usage) என்பர். இப்படி ஒரு பழக்க-வழக்கம் தொடர்ந்து வெகுகாலம் ஒரு சமுதாயத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தால், அதை இந்து திருமணச் சட்டம் 1955-ன் பிரிவு 3-ல் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே அது விதிவிலக்கால் செல்லுபடியாகும் திருமணம் ஆகும்).

பிரிவு 12-ன்படி கணவனோ, மனைவியோ ஆண்மை அல்லது பெண்மை அற்றவராக இருந்தால் (impotent; இந்த திருமணத்தின் போது, அந்தப் பெண் வேறு ஒருவர் மூலம் கருவுற்று இருந்தால்; இருவரில் ஒருவர் மனநிலை சரியில்லாதவராக இருந்தால்; அப்படி (இந்த விபரங்கள் தெரியாமல் மறைத்து நடந்த) திருமணத்தை, மற்றவர் மறுத்து விடலாம். இதை Voidable marriage அல்லது அவர் விரும்பினால் ஏற்றுக் கொள்ளலாம், விரும்பவில்லை என்றால் அந்த திருமணத்தை இதே காரணத்தைச் சொல்லி கோர்ட் மூலம் ரத்து (anullment of marriage) செய்து கொள்ளலாம்.

இந்து திருமணச் சட்டத்தின் முக்கிய பிரிவுகள்:

பிரிவு 5-ல் ஒரு திருமணத்துக்கு என்னென்ன நிபந்தனைகள் இருக்க வேண்டும் என்று சொல்லியுள்ளது. அதில், இருவருக்கும் இந்த திருமணம் நடக்கும்போது, ஏற்கனவே அவர்களுக்கு ஒரு கணவனோ மனைவியோ உயிருடன் இருக்க கூடாது; இந்த திருமணத்துக்கு சம்மதம் கொடுக்கும் அளவுக்கு மனநிலை சரியில்லாதவராக இருக்கக் கூடாது; பைத்தியமாக இருக்க கூடாது; ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் இருக்க வேண்டும்; இருவருக்கும் தடைசெய்யப்பட்ட ரத்த உறவாக இருக்க கூடாது; இருவரும் சபிண்டா உறவுக்குள் இருக்க கூடாது (இதற்கு விதிவிலக்கும் உண்டு); இருவரும் வேறு வேறு மதத்தை சேர்ந்தவராக இருக்க கூடாது, அதாவது இருவருமே இந்துக்களாவே இருக்க வேண்டும்.

பிரிவு 11-ல் Void Marriages செல்லவே செல்லாது என்ற திருமணங்களைப் பற்றிச் சொல்கிறது. பிரிவு 5(i), 5(iv), 5(v) இவைகளில் சொல்லி உள்ளதற்கு மாறாக செய்த திருமணங்கள் செல்லவே செல்லாது என்கிறது.

பிரிவு 5(i)-திருமணத்தின் போது, அவர்களுக்கு வேறு கணவன் மனைவி இருக்க கூடாது.

பிரிவு 5(iv)- தடைசெய்யப்பட்ட உறவாக இருக்க கூடாது. பிரிவு 5(v)- சபிண்டா உறவுக்குள் இருக்க கூடாது).

பிரிவு 12-ல் Voidable Marriage (avoid this marriage) வேண்டுமானால் திருமணத்தை வெட்டிக் கொள்ளலாம் என்று சொல்கிறது. இதன்படி, யாராவது ஒருவர் இந்த திருமணம் வேண்டாம் என்று சொன்னால் ரத்து செய்து கொள்ளலாம். இல்லையென்றால், அந்த திருமணத்தை ஏற்றுக் கொண்டு வாழலாம் என்று சொல்கிறது.

அதன்படி, பிரிவு 12(1)-ல் அவர்களில் யாருக்காவது ஆண்மை அல்லது பெண்மை இல்லை என்றால் (impotent), மற்றவர் விரும்பினால் பிரிந்து கொள்ளலாம், அல்லது பரவாயில்லை என்றால் சேர்ந்து வாழலாம்.

பிரிவு 5(ii)-ன்படி திருமணத்துக்கு சம்மதம் கொடுக்கும் மனநிலையில் இல்லாமல் மனநிலை சரியில்லாதவராக இருந்தால் அதை ஏற்றுக் கொண்டும் வாழலாம் அல்லது வேண்டாம் என்றால் பிரிந்து கொள்ளலாம். (ஒருவனை போதை ஏற்றிவிட்டு, அவனிடம் சம்மதம் வாங்கி திருமணம் செய்திருந்தால், அதை அவன் பின்னர் மறுத்து இந்தப் பிரிவில் திருமண உறவை விலகிக் கொள்ளலாம்).

பிரிவு 12(2)-ல் திருமணத்தின் போது, அந்தப் பெண் வேறு ஒரு ஆணால் கர்ப்பமாகி இருந்தால், இப்போது திருமணம் செய்யும் கணவன் அதை தெரிந்தவுடன் திருமணத்தை மறுத்து விலகலாம், அல்லது ஏற்றுக் கொண்டு வாழலாம்.

ஆனால், இந்தக் காரணத்தைச் சொல்லி திருமணத்தை விலக்கும் போது (avoiding the marriage) அந்த திருமணம் நடந்து ஒரு வருடத்துக்குள் அவ்வாறு செய்ய வேண்டும். அந்த திருமணத்தின் போது, அந்த விபரம் தனக்குத் தெரியவில்லை, மறைத்து விட்டார்கள் என்றும் நிரூபிக்க வேண்டும். அதற்கு மேல் காலம் கடந்து விட்டால், அது சம்மதம் என்றே சட்டம் எடுத்துக் கொள்கிறது. அதற்குமேல் அந்த திருமணத்தை இந்த காரணத்துக்காக ரத்து செய்து விட முடியாது.


Tuesday, January 5, 2021

இந்து கூட்டு குடும்ப சொத்து வழக்கு

 கோபார்சனரி சொத்து விற்பனை

ஒரு வழக்கை சென்னை ஐகோர்ட்டின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய முழு பெஞ்ச் விசாரனை நடத்தியது. அதில், தலைமை நீதிபதி அரனால்டு ஒயிட், மற்றும் நீதிபதிகள் பென்சன், மன்ரோ, சங்கரன் நாயர், கிருஷ்ணசாமி ஐயர் ஆகியோர் வாதங்களைக் கேட்டனர். அந்த வழக்கில் அட்வகேட் ஜெனரல் மற்றும் வக்கீல் எத்திராஜ் முதலியார் இருவரும் வாதம் செய்து முடித்து விட்டார்கள். தீர்ப்பை நீதிபதி கிருஷ்ணசாமி ஐயர் எழுதி முடித்து இருந்தார். ஆனால் தீர்ப்பை கோர்ட்டில் சொல்லவில்லை. இந்த சூழ்நிலையில் திடீரென்று நீதிபதி கிருஷ்ணசாமி ஐயர் தன் நீதிபதி பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

மற்ற நான்கு நீதிபதிகளும் கோர்ட்டில் கூடினர். அப்போது அட்வகேட் ஜெனரல் ஒரு ஆட்சேபத்தை தெரிவித்தார். ஐந்து நீதிபதிகள் விசாரித்த இந்த வழக்கை ஒரு நீதிபதி விலகி விட்டதால், நான்கு நீதிபதிகள் சேர்ந்து அதே தீர்ப்பைச் சொல்லமுடியுமா என்று கேள்வி எழுப்பினார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான்கு நீதிபதிகள் சேர்ந்து அந்த தீர்ப்பைச் சொல்லலாம் என்று முடிவுக்கு வருகிறார்கள்.

எனவே நான்கு நீதிபதிகள் மட்டும் தீர்ப்பைச் சொல்கிறார்கள்:

தலைமை நீதிபதி அரனால்டு ஒயிட்:

பிரைவி கவுன்சில் வழக்கான Suraj Bunsi Koer v. Sheo Persad Singh (1880) ILR 5 Cal. 148 (PC) என்ற ஒரு வழக்கில் இந்து கூட்டுக் குடும்பச் சொத்தில், ஒரே ஒரு பங்குதாரர் (கோபார்சனர்) மட்டும் அவருடைய பங்கை மட்டும் (சொத்தை) விற்று விடுகிறார். இப்படி விற்க அவருக்கு சட்டத்தில் அனுமதி உண்டா என்ற கேள்வி எழுகிறது. கூட்டுச் சொத்தாக இருக்கும்போது, ஒருவர் மட்டும் அவரின் பங்கை பிரிக்காமல் விற்பனை செய்ய முடியுமா முடியாதா என்ற கேள்வி. இது ஒன்றும் இயற்கைக்கு மாறானது இல்லை என முடிவாகிறது.

இதேபோன்ற கேள்வி 1891-ல் ஒரு வழக்கில் முழு பெஞ்ச் விசாரனைக்கு வருகிறது. Rangasami v. Krishnayyan (1891) ILR 11 Mad 408 (FB). அதில், அப்படி ஒருவர் மட்டும் தன் பங்கை விற்று விட்டால், அதை வாங்கியவர், அந்த விற்றவரின் நிலையில் அந்தக் கூட்டுக் குடும்பத்தில் இருப்பார். அதனால் அவரை (அந்த பங்கை வாங்கிய மூன்றாம் நபரை) கூட்டுக் குடும்ப உறுப்பினராக ஏற்றுக் கொள்ள முடியுமா, அல்லது மற்று கூட்டுக் குடும்ப உறுப்பினர்கள் அவரை கலந்து கொண்டு சொத்தை கூட்டாக அனுபவிக்க முடியுமா? அந்த பாகத்தை மட்டும் அவர் பாகம் பிரித்து அவர் பங்கை எடுத்துக் கொள்ளும்வரை, அந்த சொத்தின் பங்கு மட்டும் விற்கப் படாத பங்கு போலவே இருக்கும். ஒருவேளை மற்ற கோபாசனர்களில் ஒருவர் இல்லாமல் போய் விட்டாலும், அந்த கூட்டுக் குடும்பச் சொத்தில் பங்கில் மாறுதல்கள் ஏற்படும். அப்போது வாங்கியவரின் பங்கின் நிலை என்ன? வாங்கியர், அதை விற்றவருக்கு அவ்வாறு கிடைக்கும் பங்கை, அது அதிகமாக இருந்தாலும், அல்லது குறைவாக இருந்தாலும், ஏற்றுக் கொள்ள முடியுமா? இது ஒரு Speculative transaction என்னும் சூதாட்டம் போல, அதிகம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. ஒன்றும் கிடைக்காமல் போகவும் வாய்ப்புள்ளது. ஏனென்றால், இந்து கூட்டுக் குடும்பச் சொத்தில், பாகம் பிரிக்கும் போதுதான், உயிருடன் இருக்கும் கோபார்சனர்கள் என்னும் கூட்டு உரிமையாளர்கள் பங்கு எவ்வளவு என்று நிர்ணயிக்கப் படும். அதுவரை ஒரு கோபார்சனரிடம் அவரின் முடிவாகாத பங்கை வாங்கியவர் காத்திருக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது. 

இந்த நிலையானது perfectly logical and intelligible position. ஆனால் இந்த நிலையை முழுபெஞ்ச் ஒப்புக் கொள்ளவில்லை. அந்த முழு பெஞ்சின் நிலை என்னவென்றால்: “அதை வாங்கியர், தான் வாங்கிய பங்கை அடைய வேண்டுமென்றால், அவர் பாக வழக்குப் போட்டால், அது முடிவாகி விடும்.” ஆனால் மற்ற நீதிபதிகள் இதை ஒப்புக் கொள்ளவில்லை. கோபார்சனர்களின் உரிமையானது பாகம் பிரிக்கும் வரை யாருக்கு எவ்வளவு பங்கு என்று முடிவாகாத நிலையிலேயே இருக்கும். ஒருவர் இறந்து விட்டாலும், பங்கு அதிகமாகும். புதிதாக ஒருவர் அந்தக் கூட்டுக் குடும்பத்தில் பிறந்தால், அவரவர் பங்கு குறைவாகும். 

ஒருவேளை, இந்த பங்கை விற்ற கோபார்சனர் இறந்து விட்டால், அவருக்கு பங்கு இல்லாமலேயே போய்விடும். அப்போது வாங்கியவரின் நிலை என்னவாகும். ஒன்றும் கிடைக்காது. 

இன்னொறு கருத்தாக: ஒரு கோபார்சனர் அவரின் பங்கை விற்று விட்டால், அவர் இறப்பு, வாங்கியவரைப் பாதிக்காது. அவர் கிரயம் வாங்கியபோது, அதை விற்றவருக்கு என்ன உரிமை இருந்ததோ அதை வாங்கியவர் அடையலாம். ஏனென்றால், கிரயத்தின் போதே, சொத்தின் உரிமை மாறி விட்டாதால், விற்றவர் இறப்பு அதைப் பாதிக்காது.

மற்றொரு வழக்கான 1902-ல் நடந்த Aiyyagari Venkataramayya v. Aiyyagari Ramayya (1902) ILR 25 Mad. 690 (FB) என்ற வழக்கில்: சொத்தை விற்றவரின் பங்கானது, அவர் விற்ற பின்னர் இறந்து விட்டால், வாங்கியவரை அது பாதிக்காது என்று கூறப்பட்டுள்ளது. 

எனவே விற்பனை செய்தது செல்லும் என்று தலைமை நீதிபதியின் தீர்ப்பு.

நீதிபதி பென்சான்:

இவரும் இதே கருத்தையே சொல்கிறார். பிரைவி கவுன்சில் வழக்கான Haridi Narain Sahu v. Ruder Perkash Misser (1884) ILR 10 Cal 262 (PC) வழக்கில் முடிவு செய்யப்பட்டிருப்பதை ஒப்புக் கொள்கிறார். இந்த வழக்கில், கடன் கொடுத்த ஒருவர், கூட்டுக் குடும்பச் சொத்தின் தகப்பனார் வாங்கிய கடன் பணத்துக்கான டிகிரி வாங்கி, இந்த கூட்டுக் குடும்பச் சொத்தை ஜப்தி உத்தரவு பெறுகிறார். அதை ஏலவிற்பனை செய்ய மனுச் செய்கிறார். அவரே அந்த சொத்தை ஏலத்தில் அந்த தகப்பனின் பங்கைவாங்கி விடுகிறார். அந்த தகப்பனுக்கு ஒரு மைனர் மகன் இருக்கிறான். அவனுக்கும் இந்த கூட்டுக் குடும்பச் சொத்தில் பங்கு உள்ளது. மகன் தனியே வழக்குப் போட்டு மொத்த சொத்தையும் கேட்கிறான். ஏனென்றால் கூட்டு சொத்தை பாகம் பிரிக்காமல் விற்க முடியாது என்பது அவன் வாதம். இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே, அந்த தகப்பனுக்கு இன்னொரு மகன் பிறந்து விடுகிறான். எனவே இப்போது பங்கு பாதி பாதி என்று இருந்தது குறைந்து, ஆளுக்கு மூன்றில் ஒரு பங்கு ஆகி விட்டது. ஐகோர்ட்டில், ஏலத்தில் சொத்தை வாங்கியவருக்கு மூன்றில் ஒரு பங்கு என்று தீர்ப்பாகிறது. இப்போது வழக்கு பிரைவி கவுன்சிலுக்கு வந்து விட்டது. அங்கு பாகப் பிரிவினை வழக்குப் போட்ட பின்னர் மகன் பிறந்தாலும் பாகம் பாதிக்காது என்றும், சொத்தை வாங்கியவரின் பங்கான பாதி பங்கு பெற உரிமை உள்ளது என பிரைவி கவுன்சில் சொல்லி விட்டது.


பொதுக் கோயிலா?

 1957-ல் நடந்த வழக்கு:

 1906-ல் புருஷோத்தம் வெங்கட ராமானுஜ செட்டியார் என்பவர் சின்னக் காஞ்சிபுரத்தில் ஒரு வீட்டை விலைக்கு வாங்கி அதைக் கோயிலாக மாற்றுகிறார். ஶ்ரீகார்வண்ண பெருமாள் சுவாமியை (விஷ்ணு கடவுளின் 108 அர்ச்ச அவதாரங்களில் ஒருவர்) அங்கு நிறுவுகிறார். அந்தச் சிலையானது ஏற்கனவே உலகளந்த பெருமாள் கோயிலில் தற்காலிகமாக இருந்த சிலையாகும். உலகளந்த பெருமாள் கோயில் ஏற்கனவே சிதிலமடைந்து இருக்கிறது. எனவே அந்த சிலையைக் கொண்டு வந்து இங்கு வைக்கிறார். அத்துடன் வேறு சிலைகள், ஆள்வார்கள், ஆச்சாரியர்கள், பெருமாள், தாயார் இவர்களின் சிலைகளும் வைக்கப்படுகிறது. தினசரி பூசைக்கு ஒரு பக்தரையும் நியமிக்கிறார். ஆக இதை ஒரு கோயிலாகவே ஏற்படுத்தி உள்ளார். மூலவர், மற்றும் உத்சவர் விக்கிரகங்களையும் வைக்கிறார். மடப்பள்ளியும், சமையலறையும் ஏற்படுத்துகிறார். தினமும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு வருகிறார்கள். வருபவர்களுக்கு பிரசாதம் கொடுக்கிறார். உற்சவ செலவுகளுக்கு காணிக்கையும் வசூல் செய்கிறார். 1925-ல் இந்தக் கோயிலை ஶ்ரீகார்வண்ண பெருமாள் கோயிலாக ஏற்படுத்துகிறார். 1928-ல் இந்தக் கோயிலை உருவாக்கிய செட்டியார் இறந்து விடுகிறார். அவருக்கு ஒரு விதவை மருமகளும், செட்டியாரின் சகோதரனின் இரண்டு மகன்களும் வாரிசுகள். அவர்களுக்குள் பாகப்பிரிவினை நடக்கிறது. அதில் இந்தக் கோயில் சொத்து சகோதரனின் ஒரு மகனின் பங்காகக் கிடைக்கிறது. அவர் பொதுமக்களின் நன்கொடை பெற்று கோயிலைப் புதுப்பிக்கிறார். பொதுக்கோயிலாவே இருக்கிறது. எனவே சொத்துவரி விதிக்கவில்லை. இதற்கிடையில், The Madras Hindu Religious Endowments Board 1948-ல் ஒரு உத்தரவு போட்டு, இது பொதுக்கோயில் என்று நிர்வாகத்தைக் கேட்கிறது. ஆனால் இதை மறுத்து, இது ஏற்கனவே பொதுக்கோயிலாக இருந்தது, ஆனால் பாகப்பிரிவினைக்குப் பின்னர் இதை வீடாக மாற்றப்பட்டது, சிலைகள் ஏதும் இல்லை என்று வாதம். அங்கு கோயில் இருந்தால் மட்டுமே என்டோவ்மெண்ட் போர்டு கேட்க முடியும். சிதிலமடைந்த வீட்டை எப்படிக் கேட்க முடியும் என்று வாதம். போர்டு நோட்டீஸ் கொடுக்கும்போது அது கோயிலாக இருந்தது. சிலைகள் தற்காலிகமாக இல்லை என்றாலும், வழிபாடு இல்லை என்றாலும், அது பொதுக் கோயில்தான் என்று ஐகோர்ட் தீர்ப்புச் சொல்லியுள்ளது.

**


ஆதீனம் வழக்கு

 1917-ல் நடந்த வழக்கு: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தர்மபுரம் ஆதீனம் என்ற மடம் மிகத் தொன்மையான செல்வச் செழிப்புள்ள ஆதீனம். இதனால் இங்கு அடிக்கடி வழக்குகளும் ஏற்பட்டுக் கொண்டிருந்த காலம். இந்த மடத்துக்கு மடாதிபதியாக இருப்பவரை “பண்டாரசந்நிதி” என்பர். அப்போது சிவஞானம் என்பவர் இந்த மடத்தின் பண்டார சந்நிதியாக இருந்தார். இவர் இருந்தபோது, அவரின் அடுத்த வாரிசாக (இளைய பண்டார சந்நிதியாக) மாணிக்கவாசகம் என்பவரை 1903-ல் ஒரு பத்திரம் மூலம் நியமித்து இருந்தார். பின்னர் அதை ரத்து செய்து விட்டார். அதை எதிர்த்து மாணிக்கவாசகம் கும்பகோணம் சிவில் கோர்ட்டில் 1906-ல் வழக்குப் போட்டிருந்தார். வழக்கு போட்ட சிறிது காலத்தில் பெரிய பண்டார சந்நிதியான சிவஞானம் இறந்து விட்டார். எனவே திருவம்பல தேசிகர் என்பவர், இறந்த பெரிய பண்டார சந்நிதியான சிவஞானத்தின் அடுத்த வாரிசு என்று இந்த வழக்கை இறந்தவருக்காக தொடர்ந்து நடத்த வருகிறார். சிவஞான பண்டார சந்நிதி அவரின் மரணப்படுக்கையில் ஒரு உயிலை எழுதி வைத்துள்ளதாகவும், அதன்படி திருவம்பல தேசிகரை அடுத்த வாரிசாக மடத்தின் பண்டார சந்நிதியாக நியமித்துள்ளதாகச் சொல்கிறார். 

இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே மாணிக்கவாசகம் இறந்து விடுகிறார். மாணிக்கவாசகமும் அவரின் வாரிசு என்று ஒருவரை நியமித்து விட்டுச் செல்கிறார். இவர்களுக்குள் வழக்கு நடக்கிறது. கீழ்கோர்ட் தீர்ப்பின்படி, மாணிக்கவாசகத்தை பெரிய பண்டார சந்நிதி நீக்கியது செல்லாது என்று அவருக்குச் சாதகமாகத் தீர்ப்புக் கொடுக்கிறது. மேலும் திருவம்பல தேசிகர் குறிப்பிடும் உயிலை நிரூபிக்கவில்லை என்றும் சொல்லி விடுகிறது. இதற்கிடையில் சோமசுந்தரம் என்பவர் மடத்தின் சொத்துக்களை நிர்வகித்து வருகிறார். இவர் ஏற்கனவே திருபனந்தாள் மடத்தினை நிர்வகித்து வந்தவர். இறந்த சிவஞான பண்டார சந்நிதி வயதானவர், ஞாபக சக்தி குறைவானவர். நிறைய கடன் வாங்கி இருந்தார். எனவே இவர் அருகில் உள்ளவர்களின் பேச்சைக் கேட்கும் கட்டாயத்தில் இருந்தார். ஏற்கனவே பிரதிவாதி கெட்ட நடத்தை உள்ளவர் என்று வழக்குப் போட்டிருக்கிறார். அவர் இவர்மீது மானநஷ்ட வழக்குப் போட்டார். பின்னர் இவரும் சமரசம் செய்து கொண்டுள்ளார்கள். எனவே மாணிக்கவாசகத்தை நீக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லாமல் இருந்தது. எனவே மாணிக்கவாசகத்தை நீக்கியது செல்லாது என்று தீர்ப்பு உள்ளது. பெரிய பண்டார சந்நிதி சிவஞானம் வேறு இளைய பண்டார சந்நிதியை நியமிக்கக் கூடாது என்று தடையும் இருந்தது. இப்படி இருக்கையில், சிவஞானம் தன் பதவியை விட்டு விலகி பனாரஸ் போகிறார். அப்போது பிரதிவாதியின் எதிரியான சோமசுந்தரத்தின் தயவுடன் திருபனந்தாள் மடத்தில் தங்கிவருகிறார். அங்கிருந்து இந்த தர்மபுரம் ஆதீனத்தின் சொத்தினை மீட்க வழக்குப் போடுகிறார். இப்படியாக சிவஞானம் பல குழப்பங்களைச் செய்துள்ளார்.

 Under the Hindu Law the property of a hermit or an ascetic is inherited by the preceptor and after him by his disciple (Mitakshara, Chapter II, Sec.8). In the case of Mahants or Heads of Mutt, the same rule would apply. It is now well establsihed that the rule of successin among the Matathhpathis must be deduced from the usage of the mutt. 

பொதுவாக ஒரு மடத்தின் அடுத்த வாரிசை, முன் மடாதிபதியே வாய்மொழியாகவோ அல்லது உயில் மூலமோ நியமிக்கலாம் என்று 1893-ல் ஒரு வழக்கில் தீர்ப்பாகச் சொல்லப் பட்டுள்ளது. எனவே ஏற்கனவே வாரிசாக நியமித்தவரை தகுந்த காரணம் இன்றி நீக்கிவிட முடியாது. முன் மடாதிபதி, பூசை நடத்தி, இளைய மடாதிபதிக்கு அபிஷேகம் செய்து நியமிக்க வேண்டும். அப்படிச் செய்துவிட்டால், இளையவரை Sadhaka Acharya, or Co-adjustor என்பர். 

**


லிஸ் பென்டன்ஸ் கிரயம்

 சொத்துரிமை மாற்றுச் சட்டம் பிரிவு 52 என்பது ஒரு சொத்தைப் பொறுத்து வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அந்த சொத்தை வேறு ஒருவர் கிரயம் வாங்கி இருந்தால், அப்படிக் கிரயம் வாங்கியவர், இந்த வழக்கின் தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும் என்று சொல்கிறது. இதை Lis pendence purchase என்பர். 

ஒரு பாகப் பிரிவின் வழக்கில், முதல் தீர்ப்பு வந்தவுடன், ஒரு பாகஸ்தர் தனது பாகத்தை விற்று விடுகிறார். அப்படி விற்கும்போது சொத்துரிமை மாற்றுச் சட்டம் பிரிவு 52ன்படி கோர்ட்டின் முன் அனுமதி பெறவேண்டும். இந்த பிரிவின் நோக்கம் என்னவென்றால், ஒரு சொத்து வழக்கில் இருக்கும்போது, மற்ற பார்ட்டிகளின் உரிமைகள் பாதிக்கும்படி, ஒரு பாகஸ்தர் தனது பாகத்தை விற்பனை செய்யக் கூடாது என்பதற்காக கொண்டு வந்த பிரிவாகும். 

எனவே அப்படிக் கிரயம் வாங்கிவிட்டு, அந்த வழக்கில் தன்னையும் பார்ட்டியாகச் சேர்த்துக் கொள்ளும்படி கேட்க முடியாது. தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும். அப்படி அந்த பாகத்தை வாங்கிவிட்டு, அதில் கட்டிடமும் கட்டிவிட்டு, தனக்கே அந்த பாகத்தை Equity நியாயப்படி பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்கும் உரிமையும் கிடையாது. 

சாவித்திரி தேவி என்ற வழக்கில் சும்ரீம் கோர்ட், வழக்கு நிலுவையில் இருந்தபோது, வாங்கியவர், அந்த வழக்கில் அவசியமான பார்ட்டி என்பதால், அவரும் பார்ட்டியாகச் சேரலாம் என்று சொல்லி உள்ளது. ஆனால் அந்த வழக்கில் தடையாணை இருந்தபோது வாங்கி இருந்ததால், அவரையும் பார்ட்டியாகச் சேர்க்க வேண்டும் என்று கோர்ட் சொல்லி இருந்தது. 

ஆனால் கிரயம் வாங்கியவர், தனது உரிமை பாதிக்கப்படுகிறது என்று சொல்லி வழக்கில் ஒரு பார்ட்டியாகச் சேர முடியாது. 

**


வக்ஃப்

 முஸ்லீம் வக்ப் சம்மந்தப்பட்ட எந்த விவகாரமாக இருந்தாலும், முதலில் வக்ப் டிரிபூனல் (Wakf Tribunal) நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்ய வேண்டும். சிவில் கோர்ட்டுகளுக்கு விசாரிக்கும் அதிகாரம் இல்லை. ரிட் மனுக்கூட, நேரடியாக முதலிலேயே ஐகோர்ட்டில் ரிட் மனுப் போட முடியும் என்றாலும், முதலில் வக்ப் டிபூனல் கோர்ட்டில் போட்ட பின்னர் ஐகோர்ட்டுக்கு வரவேண்டும் என்பது The Wakf Act 1995ன் பொதுவான விதி.

முஸ்லீம் வக்ப் பிரச்சனைகள், வக்ப் சொத்துக்களின் பிரச்சனைகளை the Wakf Act 1995 ன்படி Wakf Tribunal கோர்ட்டில்தான் தாக்கல் செய்து தீர்வு காண வேண்டும். இந்த வக்ப் டிரிபூனல்களை அந்தந்த மாநில அரசுகளே நியமித்துக் கொள்ள இந்த சட்டம் அதிகாரம் அளிக்கிறது.

சிவில் கோர்ட்டுக்கு உரிய எல்லா அதிகாரங்களும் வக்ப் டிரிபூனலுக்கும் உண்டு என்று The Wakf Act 1995 சொல்கிறது.

வக்ப் (Wakf) என்பது இஸ்லாமிய மதக் கொள்கைகளப் பின்பற்றும் ஒரு முஸ்லீம், நிரந்தரமான அர்பணிப்பாக ஒரு சொத்து (அசையும் சொத்து அல்லது அசையாச் சொத்து) மத, தர்ம காரியங்களுக்காக கொடையாக் கொடுத்து ஏற்படுத்தி வைக்கும் முறை ஆகும்.

**


சிவகங்கை ஜமீன் சொத்து

 சட்டம் XXVI of 1948-ன்படி (Madras Estates (Abolition and Conversion into Ryotwari Act 1948) சிவகங்கை எஸ்டேட் ஒரு Impartible Estate (பாகம் செய்ய முடியாத எஸ்டேட்) என்று அப்போதைய அரசு முடிவு செய்து அதற்குறிய நஷ்ட ஈடாக ரூ.7,900 1957-ல் கொடுத்தது. 

1951-ல் சிவகங்கை சமஸ்தானத்தின் ஜமின்தாராக வரகுணபாண்டியன் இருந்தார். அவருக்கு அவரின் முதல் மனைவி மூலம் இரண்டு மகன்களும், இரண்டாவது மனைவி மூலம் ஒரு மகனும் ஆக மூன்று மகன்கள் இருந்தனர். 1948 சட்டம் வந்தபின்னர் 2-ம் மனைவிக்கு மற்றொரு மகன் குட்டி ராஜா பிறந்தான். இவர்கள் இல்லாமல், செல்லபாப்பம்மாள் என்ற வைப்பாட்டி மூலம் இரண்டு மகன்கள் (Illegitimate sons) இருந்தனர். 

சிவகங்கை ஜமின்தார் வரகுணபாண்டியன் 16 ஆகஸ்டு 1955ல் இறந்தார். ஜமின் சொத்தின் நஷ்ட ஈட்டுத் தொகையை பங்கு பிரிப்பதில் பிரச்சனைகள் ஏற்பட்டு வழக்கு கோர்ட்டுக்குப் போகிறது. அவரின் வைப்பாட்டிக்கு பிறந்த இரண்டு மகன்களான செல்லத்துரை, சாமித்துரை இருவரும் பங்கு கேட்டு வழக்குப் போடுகின்றனர். 

Impartible Estate (பாகம் பிரிக்க முடியாத எஸ்டேட்) சொத்துக்களில் The Madras Impartible Estate Act 1904 படி சொத்துப் பிரியும். ஜமின்தாரின் வைப்பாட்டி மகன்களுக்கும் பங்கு உண்டு என்று தீர்ப்பானது.

**