Wednesday, September 29, 2021

Noscitur a Sociis நோசிட்டர் சோசிஸ்

Noscitur a Sociis 

நோசிட்டர் சோசிஸ்


ஒரு சட்டத்தில் ஒரு வார்த்தை குழப்பமாக இருந்தால், அந்த வார்த்தையை சுற்றி உள்ள வார்த்தைகளைக் கொண்டு அந்த வார்த்தைக்கு என்ன பொருள் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்பதே இதன் பொருள். இது கோர்ட்டில் நீதிபதி ஒரு சட்டத்தில் உள்ள வார்த்தைக்கு பொருள் கண்டுபிடிக்க ஏற்படுத்தி உள்ள முறை ஆகும்.


Noscitur a Sociis என்றால் the meaning of an unclear word or phrase is determined by the words immediately surrounding it. 


ஒரு சட்டத்தில் ஒரு வார்த்தை எதைக் குறிக்கிறது என்று தெரியாமல் இருந்தால், அந்த வாக்கியத்தில், அல்லது அந்த சட்டத்தில் உள்ள மற்ற வாக்கியங்களைக் கொண்டு அதற்கு பொருள் கண்டு கொள்ளலாம் என்று சொல்கிறது.


இதை வேடிக்கையாக Birds of a feather flock together என்று கூறுகிறார்கள். ஒரு இறகைக் கொண்டு அந்த பறவையின் இறக்கையை முடிவு செய்யலாம்.


மந்தையில் உள்ள ஒரு மாட்டைக் கொண்டு அது மற்ற மாடுகளை இனம் காணலாம் என்பதே இதன் பொருள். அதுபோல, அந்த மாடு, எந்த மந்தையில் இருக்கிறதோ அந்த இனத்தைச் சேர்ந்தது என்று கண்டுபிடிக்கலாம் என்பதே இந்த நோசிட்டர் சோசிஸ் என்பதன் பொருள்.


இதே போல மற்றொரு வார்த்தையும் உண்டு. அது Ejusdem generis. அதன் பொருள், அதே வகையைச் சேர்ந்தது என்று பொருள் கொள்ள வேண்டும். அதாவது ஒரு சட்டத்தில், பல பொருள்களைச் சொல்லி இருந்தால், அது போன்ற மற்ற பொருள்களும் சேரும் என்று பொருள். 

உதாரணமாக - ஒரு சட்டத்தில், ஆட்டோமொபைல், டிரக்குகள், டிராக்டர்கள், மோட்டார் சைக்கிள், மற்றும் மோட்டர் மூலம் ஓடும் வாகனங்கள் என்று சொல்லி இருந்தால், அது போன்ற வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மாறாக, விமானமும் மோட்டர் மூலமே இயங்குகிறது என்று அதை எடுத்துக் கொள்ள கூடாது. ஒரே வகையைச் சேர்ந்தவைகளை ஒன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பொருள். 


ஒரு சட்டத்துக்கு அல்லது அதில் உள்ள ஒரு பிரிவுக்கு பொருள் கொள்ளும்போது, கோர்ட், அதில் சொல்லி உள்ள வார்த்தைகளை அதன் சாதாரண பொருளிலேயே முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதே சட்ட மரபு. அதில் குழப்பம் இருந்தால் மட்டுமே இவ்வாறான விளக்கங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறது. 

**





Tuesday, September 28, 2021

Fiduciary person நம்பகத்தன்மை கொண்டவர்

Fiduciary person
நம்பகத்தன்மை கொண்டவர்
(சட்டத்தால் நம்பகத் தன்மை கொண்டவராக கருதப்படுபவர்)

இப்படிப்பட்ட நம்பகத்தன்மை கொண்டவரின் செயல், தன்னை நம்பியவரை கைவிடக் கூடாது என்பதே சட்டம். 

Indian Trust Act 1882:
இந்திய டிரஸ்ட் சட்டம் 1882-ன் பிரிவு 88-ல் யார் யார், யார் யாருக்கு, நம்பகத்தன்மை கொண்டவராக (Fiduciary relationship) இருக்க வேண்டும் என்று சொல்லி உள்ளது.

ஒரு டிரஸ்ட்டி (Trustee), அதன் பயனாளருக்கு (Beneficiary) நம்பகத்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும்.

கார்டியனாக இருப்பவர் (Guardian), அவரின் மைனருக்கு (ward) நம்பகத்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும்.

ஒரு எக்சிகியூட்டர் (Executor), தனது லிகேட்டிக்கு (Legatee) நம்பகத்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும். உயிலை நிறைவேற்றுபவர் எக்சிகியூட்டர், அந்த சொத்தை அடைபவர் லிகேட்டி. 

ஒரு பார்ட்னர், மற்றொரு பார்ட்னருக்கு நம்பகத்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும்.

ஒரு ஏஜெண்ட், தனது பிரின்சிபலுக்கு நம்பகத்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும்.

ஒரு கம்பெனியின் டைரக்டர், அந்த கம்பெனியின் ஷேர் ஹோல்டர்களுக்கு நம்பகத்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும்.

ஒரு வக்கீல், தனது கட்சிக்காரருக்கு நம்பகத்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும்.

உதாரணமாக:

ஒரு உயிலை, அதன் எக்சிகியூட்டர் நிறைவேற்றுவதற்காக, அந்த சொத்தை பெறுபவரிடமிருந்து மிகக் குறைந்த விலைக்கு வாங்கி விடுகிறார். அது தவறு. அவரை நம்பியதால், அவர் ஏமாற்றி குறைந்த விலைக்கு வாங்கி விட்டார். வித்தியாசப் பணத்தை கொடுக்க வேண்டும். 

ஒரு டிரஸ்ட்டில் உள்ள சொத்தை, ஒரு டிரஸ்ட், தன் சொந்த வியாபாரத்துக்கு பயன்படுத்தி நன்மை அடைகிறார். அதன் பலனை பயனாளிகளுக்கு கொடுக்கவில்லை. அது தவறு. அந்த பணம் பயனாளிக்கு சேர வேண்டும்.

ஒரு டிரஸ்டி, தான் பதவி விலகி விடுவதாகவும், அதற்கு பலனாக, அடுத்து வரும் டிரஸ்டியிடம் பணம் பெற்றுக் கொள்கிறார். இது தவறு. அந்த பணம் டிரஸ்டுக்கு சேர வேண்டும். 

ஒரு பார்ட்னர், பார்ட்னர்ஷிப் வியாபார பணத்தைக் கொண்டு, தன் பெயரில் ஒரு சொத்தை வாங்கி விடுகிறார். இது தவறு. அந்த சொத்து, பார்ட்னர்ஷிப் கம்பெனியின் சொத்து ஆகி விடும்.

இருவர் பார்ட்னர்ஷிப் வியாபாரம் நடத்தி வருகிறார்கள். அதில் ஒருவர் இறந்து விடுகிறார். பார்ட்னர்ஷிப் சட்டப்படி இந்த நிறுவனத்தை கலைத்து விட வேண்டும் (winding up the partnership business). ஆனால் உயிருடன் இருக்கும் பார்ட்னர் மட்டும் அந்த வியாபாரத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார். இது தவறு. இறந்தவர்களின் வாரிசுகளுக்கு அதில் பங்கு உண்டு. 

ஒரு பிரின்சிபல் ஒரு சொத்தை வாங்குவதற்காக, தனது ஏஜெண்டை நியமிக்கிறார். ஆனால் அந்த ஏஜெண்ட், அந்த சொத்தை தன் பெயரில் பத்திரம் பதிவு செய்து கொள்கிறார். இது தவறு. நம்பகத்தன்மையை மீறி விட்டார். அப்போதும், அந்த சொத்து, பிரின்சிபலுக்கு சேர வேண்டிய சொத்துத்தான். ஏஜெண்ட் அனுபவிக்க முடியாது. 

ஒரு கார்டியன், தனது மைனருக்காக அவரின் சொத்தை விற்க நினைக்கிறார். ஆனால், அந்த சொத்தை குறைந்த விலைக்கு தானே தன் பெயரில் வாங்கிக் கொள்கிறார். இது தவறு. மீதி உள்ள பணத்தை அந்த கார்டியன் கொடுக்க வேண்டும்.

ஒரு வக்கீல், தனது கட்சிக்காரரின் சொத்த கோர்ட் ஏலத்துக்கு வரும்போது, அதில் கலந்து கொண்டு, குறைந்த விலைக்கு ஏலம் எடுத்து விடுகிறார். இது தவறு. கோர்ட் ஏலத்துக்கு வராமல் காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளவர், அந்த சூழ்நிலையை பயன்படுத்தி, தனக்கு லாபம் தேடுவது தவறு. அப்படி வாங்கியது செல்லாது. 









Monday, September 27, 2021

WIll Probate in Common Form and in Solemn Form:

WIll Probate in Common Form and in Solemn Form:

In English practice, a testament may be proved in two ways, either in common form or in solemn form. 

COMMON FORM:

When it is sought to be proved in common form, the executor merely presents the Will before the Judge, and without citing the parties interested, produces the proof affidavits of one or more of the attestors to the will.

And the Judge, after satisfying himself on foot of the affidavits that the testament exhibited is true, proceeds to annex his probate and seal it to the Will.

 The grant of probate in common form leads to pernicious results. 

Several cases on the Original Side of the High Court where decades after the grant of the Probate, interested persons have applied for and succeeded in obtaining revocation of the Probate granted on the ground that the Will is ungenuine or had not been executed in a sound disposing state of mind.

But by the time the revocation is sought, most of the contemporaneous evidence relating to the will would have disappeared and the grantee of the probate would have wrought irremediable mischief by acting upon the grant, which whether granted in common form or solemn form operates in rem. 

SOLEMN FORM:

On the contrary, when the Will is to be proved in solemn form, the widest publicity is given to the proceedings and all parties, who have an interest in the subject-matter of the proceedings, appear in court and furnish valuable contemporaneous evidence which enables the court to render justice. 

The English practice of proof of wills in common form is not only unsuitable for Indian conditions but also contrary to the requirements of the Indian Succession Act.
**




உயில் புரபேட் செய்வதில் இரண்டு வகை உண்டு.

உயில் புரபேட் செய்வதில் இரண்டு வகை உண்டு.

Will Probate in Common Form
Will Probate in Solemn Form

ஒருவர் தனது சொத்துக்களை தன் வாழ்நாளுக்குப் பின்னர் யாருக்கு கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அவருக்கு உயில் எழுதி வைத்து விட்டுப் போகலாம். 

உயில் எழுதுவதற்கு பத்திரம் தேவையில்லை. அந்த உயிலை பதிவு செய்து வைக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. இரண்டு சாட்சிகள் மட்டும் கையெழுத்துப் போட்டு, ஒரு உயில் எழுதப் பட்டிருந்தால், அது போதும்.

ஆனால், சென்னை மாநகரத்தில் உள்ள அசையாச் சொத்தைப் பொறுத்து ஒரு உயில் எழுதி இருந்தாலும், அல்லது சென்னை அல்லாத வேறு இடத்தில் உள்ள சொத்தைப் பொறுத்து சென்னையில் அந்த உயிலை எழுதி இருந்தாலும், அந்த உயிலை, அவரின் ஆயுட்காலத்துக்குப் பின்னர், சென்னை ஐகோர்ட்டில் புரபேட் என்னும் ஆர்டர் பெற வேண்டும். புரபேட் என்பது, அந்த உயில் உண்மையில் அவர் எழுதிய உயில் தானா என்றும், நல்ல மனநிலையில் அப்போது இருந்தாரா என்றும், யாருடைய தூண்டுதலும் இல்லாமல் எழுதப்பட்ட உயில்தானா என்றும் விசாரித்து, பின்னர் கொடுக்கப்படும் உத்தரவு ஆகும். புரபேட் என்பதற்கு நிரூபிக்கப்பட்ட என்று பொருள் கொள்ளலாம். (Probate means Proved).

சென்னை தவிர மற்ற இடங்களில் உள்ள சொத்துக்களைப் பொறுத்து எழுதிய உயிலை, புரபேட் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. ஆனாலும், அந்த மாவட்ட கோர்ட்டில் புரபேட் செய்து கொள்ளலாம்.

புரபேட் செய்வதில் இரண்டு வகை உண்டு:
ஒன்று - சாதாரண புரபேட் முறை, மற்றொன்று சட்டபூர்வ முறை.
Common Form of Probate
Solemn Form of Probate

சாதாரண புரபேட் முறை: 
Will Probate in Common Form:

இதில் உயில் எழுதியவர் இறந்தவுடன், அந்த உயிலை ஐகோர்ட்டில் தாக்கல் செய்து, வேறு யாருக்கும் எந்த நோட்டீஸ் கொடுக்காமல், அதில் உள்ள சாட்சிகளை மட்டும் விசாரித்து, புரபேட் உத்தரவு கொடுப்பது. 

இதில், இந்த உயிலை யாராவது மறுக்கவோ, போலியாக எழுதியதாக தயாரித்து உயில் என்று சொல்லவோ வழி இல்லை. எப்போதாவது அந்து உயில் வெளியில் வந்தால், அப்போதுதான் தெரியும். அதன் பிறகே, சம்மந்தப்பட்டவர் கோர்ட்டுக்கு சென்று இந்த உயில் புரபேட் ஆர்டர் தவறாக கொடுக்கப் பட்டது என்று அதை ரத்து செய்ய முடியும். 

சட்டபூர்வ புரபேட் முறை:
Will Probate in Solemn Form:

இதில் உயில் எழுதியவர் இறந்தவுடன், அந்த உயிலை ஐகோர்ட்டில் தாக்கல் செய்து, அந்த உயில் எழுதாமல் விட்டிருந்தால், அந்த சொத்துக்கு யார் யார் வாரிசாக வருவார்களோ, அவர்களை எல்லாம் எதிரப் பார்ட்டியாக சேர்த்து, அவர்களுக்கும் கோர்ட் சம்மன் அனுப்பி, அவர்களின் எதிர்ப்பையும் கேட்டு, மேலும், செய்தித் தாள்களி்ல் விளம்பரம் செய்து, யாருக்காவது ஆட்சேபனை இருக்கிறதா என்று கேட்டு, பின்னர் முறைப்படி புரபேட் உத்தரவு கொடுப்பது.

இதில் அந்த உயிலை புரபேட் செய்யும் போதோ உலகத்துக்கு தெரியப்படுத்தி புரபேட் உத்தரவு வாங்குவது. இப்படி வாங்கி விட்டால், பின்நாளில், யாரும் அந்த உயிலை ஆட்சேபனை செய்ய முடியாது. 

இங்கிலாந்து சட்டம் & இந்திய சட்டம்:
இங்கிலாந்து சட்டப்பபடி, இந்த இரண்டு முறைகளும் இருந்தாலும், பொதுவாக இங்கிலாந்தில், சாதாண புரபேட் முறையிலேயே புரபேட் வாங்கி விடுவர். 

இந்தியாவிலும் அவ்வாறான சாதாரண புரபேட் முறையே நடைமுறை இருந்தது. இது பல சிக்கல்களை பின்னாளில் கொண்டு வந்ததால், இந்திய கோர்ட்டுகள் இப்போது, ச்ட்டபூர்வ புரபேட் முறைக்கு மாறி விட்டது.

**



Saturday, September 25, 2021

Issuance of Patta does not confer any title to immoveable property

Issuance of Patta does not confer title to an immovable property:

In Kuppuswami Nainar v. The District Revenue Officer, Thiruvannamalai and others, 1995 (1) MLJ 426 a Bench of the Madras High Court has held as follows:

"Revenue Officers in a patta proceedings may express their views on the question of title, but such expression of opinion or decision is not conclusive and it is only intended to support their decision for granting patta. 

Ultimately, it is the civil court which has to adjudicate the question as to whether the person claiming patta is the title-holder of the land. 

Even if the revenue authorities decide the question of title, that will not in any way affect the jurisdiction of the civil court, which has to decide the question without reference to the decision of the revenue authorities."

Koor Chit கூர் சீட்டு என்னும் பாகப் பத்திரம்:

Koor Chit

கூர் சீட்டு என்னும் பாகப் பத்திரம்:

பொதுவாக சொத்துக்களைப் பாகம் செய்து கொள்ளும்போது, வாய்மொழியாகவும், அல்லது எழுத்து பூர்வமாகவும் பாகம் செய்து கொள்ளலாம் என்று சட்டம் சொல்கிறது.


பாகப் பிரிவினை என்பது இருக்கும் சொத்தை பாகங்களாக பிரித்துக் கொள்வதால், அது ஒரு "சொத்து மாற்றம் இல்லை" (Not a Transfer of Property) என்பதால், அதை வாய்மொழியாகவும் பாகம் செய்து கொள்ளலாம் என்று சட்டம் அனுமதிக்கிறது. 


விவசாய நிலங்களை வாய்மொழியாகவே பாகம் செய்து கொள்கிறார்கள். எனவே ஒரு குடும்பத்து நிலங்களை பஞ்சாயத்துதாரர்கள் முன்னிலையில் முதலில் பாகமாகப் பிரித்துக் கொள்வர். பின்னர் வேறு ஒரு நாளில், அவ்வாறு ஏற்கனவே பிரித்துக் கொண்ட சொத்துக்களை அவரவர் பாகம் இது என்று ஒரு சீட்டில் எழுதிக் கொள்வர். அதை கூர் சீட்டு என்பர். அதாவது சொத்துக்களை கூறு போட்ட சீட்டு என்று பொருள். 


அவ்வாறு ஏற்கனவே பாகமாகப் பிரித்துக் கொண்ட சொத்துக்களை ஒரு ஞாபகத்துக்காக அல்லது உறுதிப் படுத்திக் கொள்வதற்காக எழுதிக் கொள்ளும் பாக கூர் சீட்டை, ஸ்டாம்ப் பேப்பர் பத்திரத்தில் எழுதிக் கொள்ள தேவையில்லை. அதை பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. ஏனென்றால், அந்த கூர் சீட்டு ஒரு பாகப் பத்திரம் இல்லை. ஆனால் ஏற்கனவே பாகம் பிரித்துக் கொண்டதை உறுதி செய்து எழுதிய சீட்டு மட்டுமே. எனவே அதை ரிஜிஸ்டர் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.


ஆனால், அவ்வாறு எழுதிய கூர்சீட்டிலேயே, அன்றே பாகம் பிரித்துக் கொள்கிறோம் என்று எழுதிக் கொண்டால், அது ஒரு "பாகப் பிரிவினை பத்திரம்" ஆகிவிடும். அவ்வாறு அன்று பாகம் பிரித்துக் கொண்டதாக கூர் எழுதினால், அதை பத்திரப் பேப்பரில் எழுத வேண்டும். அதை பதிவும் (ரிஜிஸ்டரும்) செய்ய வேண்டும் என்று இந்திய ஸ்டாம்பு சட்டமும், இந்திய பதிவுச் சட்டமும் சொல்கிறது.


எனவே பாகப் பத்திரமாக எழுதினால், அதாவது அந்த பத்திரத்திலேயே, சொத்துக்களை பாகமாக பிரித்து எழுதிக் கொண்டால், அதை பத்திர பேப்பரில் எழுதுவதுடன் அதை பதிவும் செய்வது கட்டாயம். 


ஆனால், ஏற்கனவே பாகம் செய்து கொண்ட சொத்துக்களை, ஒரு சீட்டில் எழுதிக் கொண்டால், அதற்கு பத்திரம் தேவையில்லை, பதிவும் தேவையில்லை.


எனவே கூர் சீட்டு எழுதும்போது கவனமாக இந்த விஷயத்தை பார்த்துக் கொண்டு எழுத வேண்டும்.


அதிகப்படியான வழக்குகள் இந்த கூர் சீட்டை தவறுதலாக எழுதியால் ஏற்பட்டவையே. 


அப்படிப்பட்ட கூர் சீட்டை கோர்ட்டில் ஒரு ஆவணமாக தாக்கல் செய்யும் போது, அதை கோர்ட் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. அல்லது அதற்கு ஸ்டாம்பு கட்டணமும், அபராதமும் கட்டும்படி நேரிடுகிறது. 


Whether the Koor Chit requires registration?


If they divided the property and took possession in the Koor chit itself, that KoorChit must be properly stamped and it needs registration.


On the question of law relating to admissibility of unregistered koor chit vis-a-vis provisions of Section 49 of the Registration Act read with Section 35 of the Indian Stamp Act, it has to be stated that the law is settled that an unstamped document cannot be relied upon for any purpose. 


Factually, the koor chit is only a record of past event. 

**


Friday, September 17, 2021

Abortion law in U.S.A.

Abortion law in U.S.A.

Roe v. Wade 1973

410 U.S. 113 (1973)


Roe v. Wade was a 1971 - 1973 landmark decision by the US Supreme Court. 


The decision divided the nation and is still controversial today. People divided into pro-life and pro-choice groups. 


The court ruled that a state law that banned abortions, was unconstitutional.


The decision said that a woman's right to privacy extended to the fetus/unborn child she was carrying.


In the view of the court, during the first trimester an abortion was no more dangerous.


Human pregnancy is divided into three parts called trimesters. A trimester is about three months long. 


 A miscarriage (spontaneous abortion) is when the baby dies before it is born. 


A stillbirth is when the baby is dead when it is born.


BACKGROUND OF THE CASE


In 1970 a pregnant Texas woman, Norma McCorvey (alias Jane Roe), brought a lawsuit against Henry Wade, Dallas County District Attorney, in a Texas federal court.


Alleging she was a single woman and pregnant, McCorvey wanted to terminate her pregnancy. But the Texas law prohibits abortion in the State of Texas.


Her lawsuit claimed that the Texas law violated her right to privacy, protected by the First, Fourth, Fifth, Ninth, and Fourteenth Amendments.


The US SC held that - the decision of the SC allowed a woman to decide whether to keep or abort the fetus/unborn child during the first trimester.


In a 7-2 decision, the court held that a woman's right to an abortion was protected by her right to privacy under the Fourteenth Amendment.


TRIMESTER RULE


In its decision, the court used the three trimester framework of pregnancy.  During the first trimester an abortion was safer for the mother than childbirth.


During the second trimester laws could regulate abortion only to protect the health of the mother.[


During the third trimester the unborn child was viable (able to live on its own outside the mother's womb).[10] So laws could restrict or prohibit abortions except in cases where it was necessary to preserve the mother's health. 


FETAL VIABILITY


Fetal viability is a medical and a legal term. It describes the ability of an unborn child to survive outside the womb. For the first three months of pregnancy, the unborn child is called embryo, after that it is called fetus.


Usually, children are born after 40 weeks of pregnancy. Very few children are born before the mother reaches 24 weeks of pregnancy. If they are born alive, very few will survive. 


IN 1992 THE LAW HAS BEEN CHANGED


Planned Parenthood v. Casey, 505 U.S. 833 (1992), 


By this judgement it reviewed Roe vs Wade case and  thereby allowing States to implement abortion restrictions that apply during the first trimester of pregnancy.

**


திருமண உறவில் கொடுமை (Cruelty)

திருமண உறவில் கொடுமை (Cruelty)


திருமண உறவில் ஒருவருக்கு ஒருவர் கொடுமை செய்து கொண்டால் அதை ஒரு காரணமாக வைத்து மணமுறிவு (Divorce) பெறலாம் என்று இந்து திருமணச் சட்டம் 1955-ல் சொல்லப்பட்டுள்ளது.


1955 இந்து திருமணச் சட்டம்


1955 திருமணச் சட்டம் கொண்டு வரும்போது, இந்த கொடுமை (cruelty) என்ற காரணத்தைக் கொண்டு மணமுறிவு (Divorce) பெற முடியாது. ஆனால், தம்பதிகள் பிரிந்து வாழும் உரிமை (Judicial Separation) உண்டு. அதை 1955 சட்டத்தில் பிரிவு 10 (1) (b)-ல் வைத்திருந்தது. 1976-ல் அதை எடுத்து விட்டது.


1976 திருமண திருத்தல் சட்டம்


ஆனால் இந்து திருமணச் சட்டம் 1955ஐ 1976-ல் திருத்தம் செய்தது இந்திய பார்லிமெண்ட். அந்த திருத்தல் சட்டத்துக்கு 1976 இந்து திருமணத் திருத்தல் சட்டம் என்று பெயர். அதன்படி, கொடுமை (cruelty) என்பதை ஒரு காரணமாகக் கொண்டு மணமுறிவு பெறலாம் என்று சட்டத்தை மாற்றியது. 


அதன்படி இந்து திருமணச் சட்டம் 1955ன் திருத்தல் சட்டமான 1976 சட்டத்தின்படி, கொடுமை (Cruelty) என்பது மணமுறிவுக்கு (Divorce) ஒரு காரணமாக கேட்க முடியும் என்றும், அதை பிரிவு 13 (1) (i-a)-ல் சேர்த்துக் கொண்டது. 


கொடுமையில் இரண்டு வகை உண்டு. 

1) உடல் ரீதியிலான கொடுமை, 2) மன ரீதியிலான கொடுமை.


உடல் ரீதியிலான கொடுமைகளை நாம் கண்ணால் பார்க்க முடியும். குடிகாரன் மனைவியை அடிப்பது. மனைவிக்கு உடல் ரீதியாக எந்த வகையிலாவது காயம் ஏற்படுத்துவது, மற்றும் மனைவியுடன் உடல் அளவில் உறவில் இல்லாமல் இருப்பது, போன்றவை. 


ஆனால், மன ரீதியிலான கொடுமைகளை விளக்க முடியாது. அது மனதைப் பொறுத்தது. சொல்லப் போனால், உடல் ரீதியிலான கொடுமைகளைக் காட்டிலும், மன ரீதியிலான கொடுமைகளால் பெண்கள் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளனர். 


திருவள்ளுவர் கூட, அதை தெரிந்துதான், "தீயினால் சுட்டபுண் உள் ஆறும், ஆறாதே, நாவினால் சுட்ட வடு" என்கிறார். 


ஒருவருக்கு மனதளவில் பாதிப்பை உண்டாக்கினால், அவரை மரணம் வரை கொண்டு செல்லலாம் என்கின்றனர் மனநல வல்லுனர்கள். அதனால் தானோ என்னவோ அதிக தற்கொலைகளும் நடக்கின்றன. 


கொடுமை (Cruelty) என்பதை வரையறுத்துச் சொல்ல முடியாது என்று லார்டு ரீடு என்ற நீதிபதி ஒரு ஆங்கிலேய வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.


Lord Reid in Gollins vs Gollins observed - “No one has ever attempted to give a comprehensive definition of cruelty.”


ஆனாலும், இந்து திருமணச் சட்டம் 1955 (திருத்தல் சட்டம் 1976)-ல் மனு ரீதியிலான கொடுமை () என்பதை ஒரு பொதுவான விளக்கமாகச் சொல்லி உள்ளார்கள். "ஒருவரின் செயல்பாடுகள், மற்றவரின் மனதை காயப்படுத்துவதாக இருந்தாலும், அப்படியான காயங்களுடன் மற்றவருடன் தொடர்ந்து வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டாலும், அதை மனரீதியிலான கொடுமை" என்று விளக்கி உள்ளது. 


Mental Cruelty


Mental Cruelty in Section 13 (1) (i-a) in the Hindu Marriage Act 1955 (Amended Act 1976) can broadly be defined as “that conduct which inflicts upon the other party such mental pain and suffering as would make it not possible for that party to live with the other.”


What is cruelty in one case may not amount to cruelty in another case. It is a matter to be determined in each case having regard to the facts and circumstances of that case.


மனத்தளவிலான கொடுமையை கணித்து விட முடியாது. அது தெரிந்தே செய்வதாகவும் இருக்கலாம். தெரியாமல் செய்வதாகவும் இருக்காலம். ஆளுக்கு ஆள் மாறுபடும் இயல்புடையது. மேலும், எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே வாழ்பவர்களும் இருப்பார்கள். ஒரே வார்த்தையில் பிரிந்து செல்பவர்களும் இருப்பார்கள். 


Irretrievable breakdown

இனி சேர்ந்து வாழும் சூழ்நிலையே இருக்காது என்பதை "சரிசெய்ய முடியாத பிரிவு" என்று சொல்வர். அதுதான் Irretrievable breakdown.


இந்திய சுப்ரீம் கோர்ட் Irretrievable breakdown என்பதான, இனி சேர்ந்து வாழும் வாய்ப்பே இல்லாத தம்பதியரை பிரித்து மணமுறிவை கொடுத்து விடலாம் என்றும், அதற்கான ஒரு சட்டப் பிரிவை திருமணச் சட்டத்தில் அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் பலமுறை பல தீர்ப்புகளில் சொல்லி உள்ளது. ஆனாலும், மத்திய அரசு அதை இதுவரை செய்யவில்லை. 


இனிச் சேர்ந்து வாழும் வாய்ப்பே இல்லாதபோது, பிரித்து விடுவதுதான் சிறந்தது. ஆனால், இதையும் மணமுறிவுக்கு ஒரு காரணமாக சட்டத்தில் சேர்க்க வேண்டும் என்பதே எல்லோருடைய எண்ணமும். 

**



Doctrine of “Noscitur a Sociis”

Doctrine of “Noscitur a Sociis”

The doctrine of “Noscitur a Sociis” is a rule of construction. It is one of the rules of language used by courts to interpret legislation.

Noscitur a Sociis means that ‘the meaning of an unclear word or phrase should be determined by the words immediately surrounding it. 

In other words, the meaning of a word is to be judged by the accompanying words. 

The translation of Noscitur a Sociis is - where two or more words are associated together, they should take their meaning from one another.

In other words, it can be said that the meaning of an unclear word or phrase must be determined by the words that surround it. 

Therefore this rule or doctrine is more colloquially known as “birds of a feather flock together”.





Thursday, September 16, 2021

Foreign Marriage Act 1969

 Foreign Marriage Act 1969


In a matrimonial case, both the parties are Christian and Protestants by Faith.The wife is an Indian citizen. And the husband is a citizen of the United Kingdom of England.


While that wife was working in Bahrain (Saudi Arabia) she came into contact with her husband and they married in Bahrain under the Foreign Marriage Act 1969 before the Marriage Officer of Bahrain's Political Agent. And they lived sometime in Bahrain.


Thereafter the husband left for London. At that time the wife was pregnant and her husband promised her to take her back to London. Her husband advised to go back to Secunderabad for her delivery at her parents home. Hence she came back to Secunderabad. After she delivered a baby, her husband came back to India and visited her and the child and left India. Thereafter he did not return. She is not even sure whether he is alive or not, as he is a Deep Sea Diver by profession.


The wife filed a divorce petition at Secunderabad on the grounds of desertion. She is entitled for divorce under Sec.27 of the Special Marriage Act 1954 read with the provisions of the Foreign Marriage Act 1969.


Section 4 of the Foreign Marriage Act 1969 provides that a marriage between parties, one of whom at least is a citizen of India, may be solemnized under the Foreign Marriage Act by or before the Marriage Officer in a foreign country. 


In Bahrain, there is no Indian Marriage Officer as required under Sec.3 of the Foreign Marriage Act 1969, as notified by the Govt of India. Therefore their marriage was performed before the Bahrain Political Agent, as Marriage Officer. 


The question before the Court of Divorce is: whether such Political Agent who conducted the foreign marriage is valid or not?


The High Court held that in view of the deeming provision, the registration absolves the parties proving that the marriage was in fact solemnized in accordance with the provisions of the Foreign Marriage Act. Sec.18 of the Foreign Marriage Act undoubtedly applies to all marriages solemnized under the Foreign Marriage Act. 


Hence the High Court has held that it is a valid foreign marriage.

**


மகன்களில் பலவகை

மகன்களில் பலவகை:

இந்து சாஸ்திரத்தில் மகன்களுக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 

அதனாலேயே பூர்வீகச் சொத்தில் மகன்கள், பேரன்கள், கொள்ளுப் பேரன்களுக்கு மட்டுமே அவர்களின் பிறப்பால் சொத்துரிமை கிடைத்து வந்தது. அந்த வீட்டில் பிறந்த மகளுக்கு பூர்வீகச் சொத்தில் எந்த சொத்துரிமையும் கொடுக்கப்படவில்லை. 

ஒரு மகன், தனது தந்தைக்கும், பாட்டனுக்கும், முப்பாட்டனுக்கும், அப்படியாக ஏழு தலைமுறைக்கு "சிரதா" (Sraddha) என்ற கர்ம காரியம் செய்ய உரிமை உள்ளவன் என்கிறது இந்து சாஸ்திரம். தனது ஆண் வழி மூதாதையர் சொர்க்கம் செல்ல வேண்டுமானால், அல்லது அவரது ஆன்மா இறைவன் அடி சேர வேண்டுமானால், இந்த பூமியில் உள்ள அவரின் மகன், பேரன், கொள்ளுப் பேரன் என ஏழு தலைமுறை ஆண்கள் கர்ம காரியம் செய்ய வேண்டும். அதாவது மூதாதையருக்கு பிண்டம் கொடுக்க வேண்டும். 

ஆனால், அப்படிப்பட்ட மகன், சாஸ்திரப்படி திருமணம் செய்த மனைவி மூலம் பிறந்தவனாக இருக்க வேண்டும். 

12 வகை மகன்கள்:

மகன்களின் வகைகளாக 12 வகை மகன்களைக் கூறுகிறது ஸ்மிருதி என்னும் இந்து தர்ம சாஸ்திரம். அதில் முதல் வகை மகன் எல்லா உரிமையும் பெறுவான். அந்த முதல் வகை மகனை அவுரசா (Aurasa) என்பர். ஒரே ஜாதியில் உள்ள பெண்ணை, சாஸ்திர முறைப்படி திருமணம் செய்து பிறந்த மகனை அவுரசா என்ற வகையை சேர்ந்த மகன் என்பர். அவுரசா என்பதற்கு மார்பில் பிறந்தவன் என்று பொருளாம். இவனே சட்டபூர்வ மகன்.

1) அவுசரசா மகன் (Aurasa son) = சட்டபூர்வ மகன்.

2) தத்தகா மகன் (Dattaka son) = வளர்ப்பு மகன்.

3) கிருத்திம மகன் (Kritrma son) = தத்து எடுக்காமல் பிரியத்துடன் வளர்க்கும் மகன்.

4) சத்ரஷா மகன் (Kshetraja son) = கணவனின் அனுமதியுடன், மனைவி, வேறு ஒருவருக்கு பெற்றுக் கொண்ட மகன். (குந்தி, பாண்டவர்களில் தர்மன், பீமன், அர்ச்சுனன் ஆகியோரைப் பெற்றது போல).

5) குதஜா மகன் (Gudhaja son) = மனைவி இரகசியமாக பெற்றுக் கொண்ட மகன் (குந்தி, கர்ணனைப் பெற்றது போல).

6) கனினா மகன் (Kanina son) = ஒரு கன்னிப் பெண்ணுடன் இரகசிய உறவு வைத்துப் பெற்றுக் கொண்ட மகன். (வியாசரை சத்தியவதி பெற்றது போல).

7) புத்திரக புத்திரன் (Putrika putra) = வளர்ப்பு மகளின் மகனை, தன் மகனாக ஏற்றுக் கொள்வது.

8) சகொதஜா மகன் (Sahodhaja son) = திருமணம் செய்யும் போதே மனைவி கர்ப்பமாக இருந்து அதனால் பெற்ற மகனை, தன் மகனாக ஏற்றுக் கொள்வது.

9) கிர்தா மகன் (Krita son) = பணத்துக்காக மகனை வாங்குவது. (தவிட்டுக்கு வாங்குவதாக வேடிக்கையாக பேசிக் கொள்வர்).

10) கிருத்திர்மா மகன் (Kritrima son) = அனாதையானவனை மகனாக ஏற்றுக் கொள்வது.

11) சுயம்மாததா மகன் (Svayamadatta son) = அனாதையாக விடப்பட்டவன், தானே ஒரு தந்தையை தேடிக் கொள்வது.

12) பௌராம்பவ மகன் (Paunarbhava son) = கணவனால் கைவிடப்பட்ட பெண் மூலம், விதவையான பெண் மூலம், பெற்றுக் கொள்ளும் மகன்.

13) அப்விதா மகன் (Apuviddha son ) = கைவிடப்பட்டவனை தனக்கான மகனாக ஏற்பது.

14) நிசாத் மகன் (Nishad son) = பிராமணன், ஒரு சூத்திரப் பெண் மூலம் பெற்றுக் கொண்ட மகன். 

**



Wednesday, September 15, 2021

அரசு நிலங்கள், கிராம நத்தம் மனைகள், புறம்போக்கு நிலங்கள்

அரசு நிலங்கள், கிராம நத்தம் மனைகள், புறம்போக்கு நிலங்கள்:

பயிர் செய்யும் நிலங்கள் தவிர, மற்ற வகையான புறம்போக்கு நிலங்கள், ஏரிகள், குளங்கள், நதிகள், மலைகள், இவைகளை அரசே தன் வசம் வைத்துக் கொண்டது. அதில் தனி நபருக்கு எந்த உரிமையும் இல்லை.

கிராம நத்தம் மனைகள்:

1908-ல் ஒரு சட்டம் இயற்றி, அரசுக்கு சொந்தமான நிலங்களை எவை என்று சொல்லியுள்ளது. அதில் ஒரு கிராமத்தை ஒட்டி உள்ள சில நிலங்களை வீட்டு மனைகளாக, அங்கு குடியிருப்பவர்கள் வீடு கட்டிக் கொள்ளவும், தனது கைத் தொழில்களை (வண்ணார், குயவர், கொல்லர், தச்சர், விவசாயிகள் நெற்கதிர் சேமிப்பு) செய்து வருவதற்காக விட்டு விட்டது. இதை நத்தம் நிலம் என்று வகைப்படுத்தி உள்ளது. நத்தம் என்றால் கிராமத்தை நத்தி (நெருங்கி அல்லது ஒட்டி) உள்ள நிலம் என்ற பொருளில் சொல்லி இருக்கலாம். இதில் மேல் பிரிவினருக்கு கிராம நத்தம் என்றும், கிராமத்தின் புறச்சேரியில் இருப்பவருக்கு சேரி நத்தம் என்றும் வகைப்படுத்தி அந்த நத்தம் நிலங்களை விட்டு வைத்துள்ளது. அதை யார் வேண்டுமானாலும் உபயோகித்து கொள்ளலாம். அரசு அந்த நிலத்தை திரும்ப கேட்காது. ஆனால் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்தால் அரசு உடனே காலி செய்து விடும் உரிமை உண்டு. கிராம நத்தம் என்பதும் ஒருவகை புறம்போக்கு நிலம்தான் என்றாலும், அதை திரும்ப கேட்கும் உரிமை அரசுக்கு இல்லை என்று The Madras Estate Land Act 1908 சட்டத்தில் சொல்லியுள்ளது, மேலும் பல வழக்குகளில் சென்னை ஐகோர்ட்டும் தனது பல தீர்ப்புகளில் அதை உறுதிப் படுத்தி உள்ளது.
**



அயன் நஞ்சை புஞ்சை நிலங்கள்:

அயன் நஞ்சை புஞ்சை நிலங்கள்:

பழைய காலத்தில், சில நிலங்கள் அரசிடம் (முன்னர் மன்னரிடமும், பின்னர் பிரிட்டீஸ் அரசிடமும்) இருந்தது. இதை அரசின் நிலம் அல்லது அயன் நிலம் என்பர். அயன் என்றால் பிரம்மா என்று பொருள். அதாவது அதை முதலில் உருவாக்கியவன் என்ற பொருளில் இருக்கலாம். எனவே அயன் நிலம் என்பது அரசு தன் வசம் உரிமையை வைத்துக் கொண்டு, குடியானவருக்கு பயிர் செய்ய கொடுத்த நிலம் என்று புரிந்து கொள்ளலாம். அந்த நிலங்களையும் குடியானவருக்கு ரயத்வாரி பட்டா கொடுத்து விட்டதால், அந்த நிலங்களை அடையாளம் காணும் விதமாக அயன் நஞ்சை, அயன் புஞ்சை என்று சொல்வர். 

இனாம் நஞ்சை, இனாம் புஞ்சை:

சில நிலங்களை, மன்னர்கள், அல்லது ஆட்சியாளர்கள், இனாமாக தனி நபருக்கும், கோயில்களுக்கும் கொடுத்து விட்டனர். இதை இனாம் எஸ்டேட் என்பர். இனாம் எஸ்டேட் ஒழிப்பு மூலம், அந்த நிலங்களை குடியானவருக்கே ரயத்வாரி பட்டா கொடுத்து விட்டனர். இந்த வகை நிலங்களை இனாம் நஞ்சை, இனாம் புஞ்சை என்று சொல்வர். 

ஜமீன் நஞ்சை, ஜமீன் புஞ்சை:

சில நிலங்களை, மன்னர்கள் அல்லது ஆட்சியாளர்கள், நேரடி வசூல் செய்ய முடியாத நிலையில், ஜமின்தார்களின் பொறுப்பில் கொடுத்து விட்டனர். அவர்கள் மகசூல் வசூல் செய்து அரசுக்கு கொடுப்பார்கள். அதை ஜமீன் எஸ்டேட் என்பர். இந்த ஜமீன் முறையையும் ஒழித்து, குடியானவருக்கே ரயத்வாரி பட்டா கொடுத்து விட்டது அரசு. இந்த வகை நிலங்களை இன்றும் ஜமீன் நஞ்சை, ஜமீன் புஞ்சை என்று சொல்வர். 

ரயத்வாரி பட்டா

ரயத்வாரி பட்டா:

குடியானவரின் பயிர் செய்யும் உரிமையை ரயத் (ryot) என்பர். இது ஒரு அரபுச் சொல். அந்த காலத்து மன்னர்கள் இருந்தபோது ஏற்படுத்திய சொல். அப்படி பயிர் செய்பவரை (குடியானவரை) ரயத்வாரி என்பர். எனவே குடியானவருக்கு நிலத்தின் உரிமையை வழங்குவதை ரயத்வாரி பட்டா மூலம் முறைப்படுத்தியது அரசு. 

வழக்குகள்:

இப்படி ரயத்வாரி பட்டா வழங்கும்போது, நிலத்தில் மேல்வாரம் உரிமையுள்ள இனாம்தார் (ஜமின்தார்) போன்றோர், தாங்களே அந்த நிலத்தை நேரடியாக பயிர் செய்து வருவதாகவும், எனவே இரு வார உரிமையும் தங்களிடமே இருப்பதாகவும், எனவே பயிர் செய்பவருக்கு ரயத்வாரி பட்டா வழங்க கூடாது என்றும் ஆட்சேபனை செய்தனர். அப்படி அந்த நிலத்தில் பயிர் செய்பவர், இனம்தாரின் கூலி ஆட்கள் என்றும் சொன்னார்கள். 

எனவே அதற்காக, துணை செட்டில்மெண்ட் அதிகாரிகளை நியமித்து, அவர்கள் யார் குடியானவர் என்று முடிவு செய்து, இந்த ரயத்வாரி பட்டா வழங்கினர். 

1948-ல் வந்த எஸ்டேட் ஒழிப்புச் சட்டம்:

இனாம் நிலச் சொத்துக்கள் (கிராமங்கள்) இல்லாமல், பழைய மன்னர்கள், ஜமின்தார் முறையை கொண்டு வந்து, அவர்களுக்கு பல ஏக்கர் நிலங்களைக் கொடுத்து, அதில் வரும் விவசாய வருமானத்தை, மன்னர்கள் பெற்று வந்தனர். இந்த ஜமின்தார்கள், மன்னர்களுக்கு ஏஜெண்டுகளாக இருந்தனர். இப்படி வெகுகாலம் இந்த முறை தொடர்ந்து வந்தது. இதிலும் குடியானவருக்கு பயிர் செய்யும் உரிமை மட்டும் இருக்கும். விவசாய மகசூல் வருமானத்தில் ஒரு பகுதியை ஜமின்தாருக்கு கொடுக்க வேண்டும். அவர் அதில் பாதியை முழுங்கிவிட்டு மீதியை மன்னருக்கு கொடுப்பார். இந்த முறையானது, பிரிட்டீஸ் ஆட்சியின் போதும் தொடர்ந்து இருந்து வந்தது. 

இதில், ஜமின்தார்களிடம் மாட்டிக் கொண்ட, குடியானவர்கள் பாடு திட்டாட்டமாக இருந்தது. எனவே அரசு 1948-ல் இந்த ஜமீன் முறையை ஒழித்து சட்டம் கொண்டு வந்தது. அதுவே ஜமீன் ஒழிப்பும், ரயத்வாரி பட்டா வழங்கும் சட்டம் 1948 என்று பெயர். 

இதன்படி, ஜமின்தார்களிடம் இருந்து வந்த எஸ்டேட்டுகள் ஒழிக்கப்பட்டன. அந்த நிலங்களை, அதில் பயிர் செய்து வந்த குடியானவரிடமே பட்டா கொடுக்கப் பட்டு, அவருக்கே சொந்தமாக்கியது அரசு. ஜமின்தார்களுக்கு அதனால் ஏற்படும் நஷ்டத்தை பணமாக பல தவனைகளில் அரசே கொடுத்து விட்டது. 

ரயத்வாரி பட்டா:

இப்படிக் கொடுப்பபட்ட பட்டாவே ரயத்வாரி பட்டா என்பது. இதன்படி, குடியானவரே நிலத்தின் உரிமையாளர் ஆகி விட்டார். அதாவது, மண்ணில் இருந்த மேல்வாரம் உரிமையும், பயிர் செய்யும் குடிவார உரிமையும், ஒரே நபரான குடியானவருக்கே கொடுக்கப் பட்டது. இருவார உரிமையும் ஒரே உரிமையானது. 

**

மைனர் இனாம் ஒழிப்பு சட்டம் 1963

மைனர் இனாம் ஒழிப்பு சட்டம் 1963

The Madras Minor Inams (Abolition and Conversion into Ryotwari) Act, 1963

மேஜர் இனாம் & மைனர் இனாம்:

மன்னர்கள் காலத்தில், அந்த மன்னர்களுக்கு உதவியாக இருந்தவர்களுக்கு இனாமாக நிலங்கள் கொடுக்கப்பட்டன. இதை ஒரு பட்டயம் மூலம் (செப்புத் தகட்டில் எழுதிக் கொடுப்பது) கொடுத்தார்கள். இதில், ஒரு கிராமம் முழுவதையுமோ அல்லது பல கிராமங்களையோ இனாமாக கொடுத்தார்கள். அப்படி பல கிராமங்களை இனாமாகக் கொடுத்தால் அதை மேஜர் இனாம் (Major Inam) என்று சொல்வர். மேஜர் இனாமை பொதுப் பெயராக இனாம் என்று சொல்வர். ஒரு கிராமத்தில் உள்ள ஒரு பகுதி நிலங்களை மட்டும் இனாமாக கொடுத்தால் அதை மைனர் இனாம் (Minor Inam) என்பர்.

மைனர் இனாம் ஒழிப்புச் சட்டம் 1963

இப்படி இனாமாகப் பெற்ற நிலங்களின் உரிமையாளர்களை “இனாம்தார்” என்பர். இந்த இனாம்தார்கள், தங்களின் நிலங்களை குடியானவரிடம் பயிர் செய்ய விட்டு விட்டனர். குடியானவரிடமிருந்து ஒரு பகுதி வருமானத்தை பெற்றுக் கொண்டு வந்தனர். இது காலங்காலமாக நடந்து வந்தது. 

மேல்வாரம் & குடிவாரம் உரிமை:

இப்படிப்பட்ட இனாம் சொத்துக்களில் (நிலங்களில்) இனாம்தாரருக்கு நிலத்தின் உரிமை இருக்கும். இதை மேல்வாரம் உரிமை என்பர். அந்த மண்ணின் மேல் உள்ள உரிமையை மேல்வாரம் என்பர். 

அதேபோல, அந்த இனாம் நிலங்களை பயிரிட்டு வரும் குடியானவருக்கு, பயிர் செய்யும் உரிமை மட்டும் இருக்கும். நிலத்தில் எந்த உரிமையும் இருக்காது. அந்த பயிர் செய்யும் உரிமையை “குடிவாரம்” என்பர். 

மேல் வாரம் & குடி வாரம் என இருவாரம் உரிமைகள்:

 இனாம் சொத்துக்களுக்கும், (அதேபோல ஜமீன் சொத்துக்களுக்கும்) இருவகையான உரிமையான மேல்வாரம், குடிவாரம் என இரு உரிமைகள் இருக்கும். இதில் மேல்வாரம் உரிமை, நிலத்தின் உரிமையாளருக்கு இருக்கும். குடிவாரம் உரிமை, அந்த நிலத்தை பயிர் செய்பவருக்கு இருக்கும். பயிர் செய்பவரை அந்த நிலத்தை விட்டு காலி செய்ய முடியாது. அதன் மகசூல் வருமானத்தை மட்டுமே பெற மண்ணின் உரிமையாளருக்கு உண்டு. 

மேல்வாரம் உரிமையை, நிலத்தின் சொந்தக்காரர், தனியே விற்க முடியும், அடமானம் வைக்க முடியும். பயிர் செய்யும் குடியானவரின் சம்மதம் தேவையில்லை. அதேபோல, பயிர் செய்யும் குடியானவர், தனது குடிவார உரிமையை தனியே விற்க முடியும், அடமானம் வைக்க முடியும். நிலத்தின் சொந்தக்காரரின் அனுமதி தேவையில்லை.

இனாம் ஒழிப்பு:

 மேல்வாரம் & குடிவாரமண் என இரு வார உரிமைகளுடன், இரண்டு உரிமையாளர்கள் ஒரு நிலத்துக்கு இருந்து வந்தனர். இதில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. அதிக விளைசல் வருமானம் கேட்பது, குடியானவருக்கு நிலத்தில் எந்த உரிமையும் இல்லாமல் இருப்பது போன்றவை பிரச்சனைகளுக்கு காரணங்கள்.


எனவே, அரசு, 1963-ல் இந்த இனாம் ஒழிப்பு சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்படி, நிலத்தை பயிர் செய்யும் குடியானவருக்கே நிலத்தை முழு உரிமையுடன் சொந்தமாக்கி விடுவது என்றும், மேல்வார உரிமையாளருக்கு ஒரு நஷ்ட ஈட்டை கொடுத்து விடுவது என்றும் முடிவானது. 


**



முடிவுற்ற பத்திரங்கள் மற்றும் முடிவுறாத பத்திரங்கள்

முடிவுற்ற பத்திரங்கள் மற்றும் முடிவுறாத பத்திரங்கள்

Executed Contract & Executory Contract

சொத்தின் கிரயப் பத்திரங்களைப் பதிவுக்கு கொடுக்கும்போது, சொத்தை வாங்கியவர், அந்த கிரயப் பத்திரத்தை பதிவாளரிடம் பதிவுக்கு கொடுப்பதே சிறந்த முறை. ஆனாலும் விற்றவரும் அந்த கிரயப் பத்திரத்தை பதிவுக்கு கொடுக்கலாம். அது தவறு இல்லை. 

பத்திரங்கள் எழுதி, அதில் கையெழுத்துச் செய்து, சாட்சிகள் கையெழுத்தும் முடிந்தவுடன், அந்த பத்திரம் “ஒரு முடிவுற்ற பத்திரம்” ஆகி விடும். அதாவது அப்படியான பத்திரங்களை Executed Contract என்று பதிவுச் சட்டம் சொல்கிறது. இனி, அதில் இருபார்ட்டிகளும் ஒருவருக்கு ஒருவர் செய்து கொள்ள வேண்டிய வேலை ஏதும் இருக்காது. அப்படியான பத்திரங்களை முடிவுற்ற பத்திரம் என்பர்.

ஆனால், ஒரு கிரய அக்ரிமெண்ட் பத்திரத்தை அதேபோல் இருபார்ட்டிகளும் கையெழுத்துப் போட்டு, சாட்சிகளின் கையெழுத்தும் பெற்றுக் கொண்டாலும், அது “இன்னும் முடிவுறாத பத்திரம்” என்ற வகையிலேயே இருக்கும். அதில் இருபார்ட்டிகளும், அல்லது அதில் உள்ள ஒரு பார்ட்டியாவது, இன்னும் ஏதாவது ஒரு வேலையை செய்ய வேண்டிய நிலை இருக்கும். இதை “முடிவுறாத பத்திரம்” அல்லது Executory Contract என்பர். 

சாட்சிகள் எதற்கு அவசியம் அல்லது எதற்கு அவசியம் இல்லை;
 
முடிவுற்ற பத்திரங்களுக்கு (Executed Contract) குறைந்த பட்சம் இரண்டு சாட்சிகளின் கையெழுத்து அவசியம் என்று சட்டம் சொல்கிறது. இதில் கிரயப் பத்திரம், அடமானப் பத்திரம், செட்டில்மெண்ட்/தானப் பத்திரம் போன்றவை வரும்.

ஆனால், முடிவுறாத பத்திரங்களுக்கு (Executory Contract) சாட்சிகள் அவசியம் இல்லை எனச் சட்டம் சொல்கிறது. ஆனாலும் நடைமுறையில் நாம் அந்த வகைப் பத்திரங்களுக்கும் சாட்சிகளின் கையெழுத்தைப் பெற்றுக் கொள்கிறோம். ஆனாலும், அது சட்டப்படி அவசியம் இல்லை. அப்படி சாட்சிகள் இல்லாமல் அந்த பத்திரங்களை எழுதி இருந்தாலும், அவைகளும் சட்டப்படி செல்லும்.
அதற்கு உதாரணமாக - கிரய அக்ரிமெண்டுகள், வாடகை அக்ரிமெண்டுகள், ஹையர் பர்சேஸ் அக்ரிமெண்டுகள் (வண்டி வாகனங்களை மாதத் தவணைகளுக்கு வாங்கும் அக்ரிமெண்டுகள்), இவைகளுக்கு சாட்சிகள் தேவையில்லை அல்லது அவசியமில்லை.

அதாவது - 
(1)கிரயப் பத்திரத்துக்கு சா்ட்சிகள் அவசியம். ஏனென்றால் அது முடிவுற்ற பத்திரம். (Executed Contract). அதற்கு பின்னர் அதில் செய்ய வேண்டிய வேலை ஏதும் இல்லை. பணம் கொடுத்து முடிந்தது. அல்லது பின்னர் கொடுப்பதாக ஒப்புக் கொள்ளப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. சொத்தின் உரிமையை, சுவாதீனத்தை ஒப்படைக்கப்பட்டு விட்டது. அல்லது பின்னர் ஒப்படைப்பதாக சொல்லியதை ஏற்றுக் கொண்டு விட்டது. இனி இதில் வேறு வேலை இல்லை. 

(2) சொத்தை வாங்குவதற்கு முன்னர் ஏற்படுத்திக் கொள்ளும் கிரய அக்ரிமெண்டுகளுக்கு சாட்சிகள் அவசியம் இல்லை. ஏனென்றால், அது ஒரு முடிவுறதாத பத்திரம் அல்லது இன்னும் அதில் செய்ய வேண்டிய வேலை இரண்டு பார்ட்டிகளுக்கும் இருக்கிறது என்று பொருள். இன்னும் ஒரு பார்ட்டி பணம் கொடுக்க வேண்டும். மற்றொரு பார்ட்டி சொத்தின் உரிமையை, சுவாதீனத்தை மாற்றிக் கொடுக்க வேண்டும். அடிப்படை வேலையே பாக்கி இருக்கிறது. 

ஏன் சாட்சிகள் அவசியம்?

ஏன் முடிவுற்ற பத்திரங்களுக்கு சாட்சிகள் அவசியம் என்றும், முடிவுறாத பத்திரங்களுக்கு சாட்சிகள் அவசியம் இல்லை என்றும் சொல்கிறார்கள். முடிவுற்ற பத்திரங்களை நிரூபிக்க சாட்சிகள் தேவை. 

முடிவுறாத பத்திரங்களை நிரூபிக்க அவசியம் ஏற்படாது. அதில் செய்ய வேண்டிய வேலைகளை மட்டுமே ஒருவர் மற்றவருக்கு செய்து கொடுக்க வேண்டும். இரண்டு பேருக்கு (பார்ட்டிகளுக்குமே) ஒருவருக்கு ஒருவர் செய்து கொள்ளும் வேலையை நிறுத்தி வைத்துள்ளார்கள். 

புரோ நோட்டுக்கு சாட்சிகள் அவசியமா?

புரோநோட் எழுதிக் கொடுக்கும் போது, அதற்கு சாட்சி அவசியம் இல்லை என்றே சட்டம் சொல்கிறது. ஆனால் நடைமுறையில் நாம் அதற்கும் சாட்சிகளின் கையெழுத்தை வாங்கிக் கொள்கிறோம். ஒரு புரோ நோட் என்பது “ஒரு முடிவுறாத பத்திரம்”. எனவே அதற்கு சாட்சி அவசியம் இல்லை. 

உயிலுக்கு சாட்சிகள் அவசியமா?

உயில் பத்திரங்களுக்கு கண்டிப்பாக குறைந்த பட்சம் இரண்டு சாட்சிகள் அவசியம் என்று இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925-ன் பிரிவு 63-ல் சொல்லியுள்ளது. அப்படி இரண்டு சாட்சிகள் இல்லாத உயில் செல்லாது. அதிலும், அந்த இரண்டு சாட்சிகளில் யாராவது ஒரு சாட்சியாவது, உயிலை எழுதி வைத்தவர் போட்ட கையெழுத்தை நேரில் பார்த்து இருக்க வேண்டும். மற்றொரு சாட்சி அப்படி நேரில் பார்த்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. என்றாலும், இரண்டு சாட்சிகளுமே, உயில் எழுதியவர் அந்த உயிலில் கையெழுத்துச் செய்யும் போது, அதை நேரில் பார்த்து இருந்தால் நல்லது. ஏனென்றால், உயிலை எழுதி வைத்தவர் இறந்த பின்னரே அந்த உயிலுக்கு “உயிர்” வரும். அப்போது, அந்த உயிலை அவர்தான் எழுதி வைத்தார் என்றும், அதை தான் நேரில் பார்த்ததாகவும், அப்போது, அவர் நல்ல மனநிலையில், யார் தூண்டுதலும் இல்லாமல், தன்னிச்சையாகவே அதை எழுதினார் என்றும் சொல்ல வேண்டும். எனவே உயிலுக்கு அல்லது அந்த உயில் உண்மையான உயில் என்பதற்கு அந்த இரண்டு சாட்சிகள் தான் உயிர்நாடி. 

அந்த உயிலின் இரண்டு சாட்சிகளில், யாராவது ஒரு சாட்சி, தான் அந்த உயில் எழுதும்போது, அல்லது உயிலை எழுதியவர் கையெழுத்துச் செய்யும் போது, நேரில் இருந்ததாகச் சொன்னால் போதும்.

ஒருவேளை, அந்த இரண்டு சாட்சிகளுமே, உயிலை எழுதி வைத்தவர் இறப்பதற்கு முன்னரே இறந்து விட்டால், அல்லது உயிலை எழுதி வைத்தவர் இறந்த பின்னர், இரண்டு சாட்சிகளும் இறந்து விட்டால், அந்த உயிலை எப்படி நிரூபிப்பது என்ற குழப்பம் வந்துவிடும். அல்லது இந்த சாட்சிகள் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியாமல் போனாலும் சிக்கல்தான். 

அப்படி சாட்சிகள் கிடைக்காமல் போனால், அந்த சாட்சிகளின் கையெழுத்தைத் தெரிந்தவர் யாராவது இருந்தால், அவரைக் கொண்டு, இது அந்த சாட்சியின் கையெழுத்துத்தான் என்றும், உயிலை எழுதியவரின் கையெழுத்தையும் அதேபோல, வேறு நபரைக் கொண்டு, அது அந்த உயில் எழுதியவரின் கையெழுத்துத்தான் என்றும் நிரூபித்தால் போதும் என்று இந்திய சாட்சியச் சட்டம் 1872-ன் பிரிவு 69 சொல்கிறது.

**





பத்திரத்தை யார் பதிவாளரிடம் கொடுக்க வேண்டும்

பத்திரத்தை யார் பதிவாளரிடம் கொடுக்க வேண்டும்

ஒரு பத்திரத்தைப் பதிவுக்குக் கொடுக்கும்போது, யார் அதை பத்திரப் பதிவாளரிடம் கொடுக்க வேண்டும் என்று இந்திய பதிவுச் சட்டம் 1908 பிரிவு 32-ல் சொல்லப்பட்டுள்ளது.

1) ஒரு பத்திரத்தை எழுதிக் கொடுத்தவர்களில் யாராவது, அதை பதிவுக்கு கொடுக்கலாம்.

2) ஒரு பத்திரத்தின் மூலம் உரிமை பெறுபவர் (அதாவது கிரயப் பத்திரமாக இருந்தால், அந்த சொத்தை வாங்குபவர்களில் யாராவது ஒருவர்) அந்த பத்திரத்தை பதிவுக்கு கொடுக்கலாம்.

3) எழுதிக் கொடுப்பவர் அல்லது எழுதி வாங்குபவர், இவர்களின் பொறுப்பாளர் அல்லது பவர் ஏஜெண்டு, அல்லது கார்டியன், அந்த பத்திரத்தை பதிவுக்கு கொடுக்கலாம்.

4) இந்த பத்திரம் ஒரு கோர்ட் டிகிரியாக இருந்தால், அந்த டிகிரி மூலம் உரிமை பெறும் நபர் (குறிப்பாக வாதி அல்லது பிரதிவாதி அல்லது அவர்களின் பவர் ஏஜெண்ட்) அந்த கோர்ட் டிகிரியை, பதிவுக்கு கொடுக்கலாம்.

5) அந்த பத்திரத்தை எழுதிக் கொடுப்பவர் ஒரு அரசு அதிகாரியாக இருந்தால், அல்லது ஐகோர்ட் கோர்ட் அதிகாரியாக இருந்தால், அல்லது சிவில் கோர்ட் நீதிபதியாக இருந்தால், அவர் அந்த பத்திரத்தை நேரில் சென்று பதிவாளரிடம் பதிவுக்குக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்குப் பதிலாக, “அவர் ஒரு அரசு அதிகாரி என்றும், அவர் நேரில் வரத் தேவையில்லை” என்று ஒரு கடிதம் கொடுத்தால் போதுமானது. இதை இந்தியப் பதிவுச் சட்டம் 1908 பிரிவு 88-ல் சொல்லியுள்ளது.

6) அரசுக்கு ஒரு சொத்தை எழுதிக் கொடுத்தாலும், அரசு அதிகாரி நேரில் சென்று அந்த பத்திரத்தை பதிவுக்கு கொடுக்க தேவையில்லை. அப்போதும், அவர் நேரில் வருவதற்கு விலக்கு அளிக்கப்பட்டவர் என்று கடிதம் கொடுத்தால் போதுமானது. 

7) இவ்வாறு விலக்கு அளிக்கப்பட்ட அரசு அதிகாரி கடிதம் கொடுக்கும் போது, அதில் சந்தேகம் எழுந்தால், பதிவாளர், அதை அரசின் செயலாளருக்கு அனுப்பி, அது சரியான அரசு அதிகாரிதான் எழுதிக் கொடுத்தாரா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். 

**

திருத்தல் பத்திர வழக்கு

திருத்தல் பத்திர வழக்கு 

1989-ல் ஒரு மனையை வாங்குகிறார். அந்த கிரயப் பத்திரத்தில் நீள-அகல அளவுகளில் தவறுகள் உள்ளன. 2011-ல் அந்த தவறை திருத்தல் பத்திரம் மூலம் வாங்கியவர் மட்டும் திருத்தல் பத்திரம் எழுதிக் கொண்டு போகிறார்.

 அதை பதிவாளர் பதிவு செய்ய மறுக்கிறார். காரணம் - அந்த கிரயப் பத்திரத்தை எழுதிக் கொடுத்தவரும் சேர்ந்தே திருத்தல் செய்ய முடியும் என்கிறார். அவர் இல்லை என்றால் அவரின் வாரிசுகள் அதை செய்ய வேண்டும் என்கிறார். இவ்வாறு ஐ.ஜி சர்குலர் Circular No.2024/C1/1999 உள்ளதாக பதிவாளர் சொல்லி மறுத்து விடுகிறார்.

அதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ரிட் வழக்கை, அந்த சொத்தை வாங்கியவர் போடுகிறார். அரசு வக்கீல் கீழ்கண்ட் முன் வழக்கின் தீர்ப்பை காண்பிக்கிறார். 

M/s. Latif Estate Line India Ltd vs Mrs Hadeeja Ammal and others, (2011)-1 LW 673. 

அதில், ஒரு கிரயம் என்பது இரண்டு பார்ட்டிகளுக்குள் ஏற்படுவது. அதை ஒருவர் மட்டுமே, மாற்றி எழுதிக் கொள்ள முடியாது. 

இந்திய ஒப்பந்த சட்டம் பிரிவு 62-ல் "ஒப்பந்தத்தில் ஏதாவது மாற்றம் இருந்தால் அதை இருபார்ட்டிகளுமே செய்து கொள்ள வேண்டும்" என்று தெளிவு படுத்தி உள்ளது. 

“A Sale is essentially an executed contract between two parties on mutually agreed conditions. 

Question is as to whether such contract can be unilaterally rescinded, particularly, in a case of sale deed. 

In this context, we may refer to Sec.62 of the Indian Contract Act 1872 which provides that contract which need not be performed. 

By that provision, any novation, rescission and alteration of a contract can be made only bilaterally.

 A deed of cancellation will amount to rescission of contract and if the issue in question is viewed from the application of Sec.62 of the Indian Contract Act, any rescission must be only bilaterally.”
**

Sunday, September 12, 2021

லே-அவுட் (Layout) என்றால் என்ன?

Layout is defined:

லே-அவுட் என்றால் என்ன?

அரசாணை நிலை எண் 78, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை நாள் 4.5.2017-ல் "லே-அவுட்" என்றால் என்ன என்று விளக்கி உள்ளது. அதன்படி - 

(1) சிஎம்டிஏ பகுதியில் உள்ள நிலத்தில், அந்த இடத்தை எட்டு மனைகளுக்கு மேல் பிரித்து இருந்தால் அது "லே-அவுட்" ஆகும். எனவே அதற்கு அப்ரூவல் கண்டிப்பாக வேண்டும்.

(2) சிஎம்டிஏ பகுதியில் இல்லாத ஒரு நிலத்தில், அவ்வாறு மனைகளாக பிரிக்கும் போது, அதற்கு "புதிய தெரு, ரோடு, பாதை" வசதியை புதிதாக ஏற்படுத்தி இருந்தால், அது "லே-அவுட்" ஆகும். எனவே அதற்கு அப்ரூவல் கண்டிப்பாக வேண்டும். 

Thursday, September 9, 2021

விருத்திரா அசுரன் - சிவனின் முதல் திருவிளையாடல்

 விருத்திரா அசுரன்


விருத்திர அசுரன் - விருத்திரன் என்றால் போர்வை போல மூடிக்கொண்டிருப்பவன் என்று பொருளாம். இந்த விருத்திரனுக்கும், இந்திரனுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். இந்திரன் நீரைக் கொடுப்பவன். விருத்திரன் அந்த நீரைக் குடித்து விடுபவன் என்ற பொருளில் சொல்லப்பட்டுள்ளதாம். இந்திரன் வானில் இருந்து நீரை மழையாகக் கொடுப்பான். விருத்திரன் பூமியில் ஏரிமலைக் குழம்புகளாக இருந்து, அந்த நீரைக் குடித்து விடுவான். 


த்ரிசிரஸ் -  துவஷ்டா என்பவரின் மூத்த மகன் பெயர் த்ரிசிரஸ். த்ரிசிரஸ் என்றால் மூன்று தலை உடையவன் என்ற பொருள். துவஷ்டா, இந்த த்ரிசிரஸ் என்ற மூத்த மகனை, இந்திரனைக் கொல்வதற்காகவே படைத்திருக்கிறார். ஆனால் அவனை இந்திரன் கொன்று விடுகிறான். 


விருத்திரன் என்னும் விருத்திர அசுரன் -  அதற்கு பழி வாங்குவதற்காக, துவஷ்டா, தனது இரண்டாவது மகனை யாகத்தின் மூலம் படைக்கிறார். அவன் பெயர் விருத்திரன் என்னும் விருத்திர அசுரன். விருத்திரன் என்றால், பூமியை மூடிக் கொண்ருப்பன் என்று பொருளாம். வானத்தில் இருத்து அனுப்பும் எல்லா நீரையும் உறிஞ்சிக் குடித்து விடும் இயல்புடைய பூமி நிலப்பரப்பைக் கொண்டவன். இதை எரிமலை குழம்பு என்றும் சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். 


துவஷ்டா - துவஷ்டா என்பது வேதத்தில் சொல்லப்பட்ட தெய்வம். சித்திரை நட்சத்திரத்துக்கு அதிபதி இந்த துவஷ்டா என்று ஜோதிடம் சொல்கிறது. ஜோதிடத்தில் இந்த சித்திரை நட்சத்திரம் இருக்கும் கன்னி ராசி என்று சொல்லும் ராசி மண்டலத்துக்கு ஒரு முக்கியத்துவம் உள்ளது. நாம் பார்க்கும் இந்த சூரிய மண்டலம் இந்த கன்னி ராசி மண்டலத்தில் இருந்து தோன்றியதாக ஆராய்ச்சியாளர்கள் கருத்து. அதாவது, இந்த பூமியானது சூரியனைச் சுற்றி வருவதால், இந்த பூமி, சூரியனில் இருந்து பிரிந்து வந்த பகுதி என்பர் ஆராய்ச்சியாளர்கள். அதன்படி பார்த்தால், இந்த சூரிய மண்டலம் கன்னி ராசி மண்டலத்தைச் சுற்றி வருவதால், அது கன்னி ராசி மண்டலத்தில் இருந்தே தோன்றி இருக்க வேண்டும் என்பது ஆராய்சியாளர்கள் முடிவு. இந்த கன்னி ராசி மண்டலமானது விர்கோ கிளஸ்டர் (Virgo Cluster) என்ற பகுதியில் அண்டவெளியில் உள்ளது. அது உர்ஸா மேஜர் (Ursa Major) என்ற அண்டவெளியில் உள்ளது. 


சித்திரை நட்சத்திரம் - ஆக, சித்திரை நட்சத்திரத்துக்கு அதிபதி இந்த துவஷ்டா என்றால், இந்த பூமியில் உள்ள நாமும் அதன் பொருள்களும், சித்திரை நட்சத்திரப் பகுதியில் ஒரு பகுதி என்று கொள்ள வேண்டும். இப்படிச் சித்திரை நட்சத்திரத்தில் இருந்து இந்த சூரிய மண்டலமும் அதில் உள்ள இந்த பூமியும் தோன்றியதால், நாம் சித்திரையை முதல் மாதமாக கொள்கிறோம். துவஷ்டாவின் எதிரியான இந்திரன் இந்த பூமியை அழிக்காமல் இருக்க அவனுக்கு (இந்திரனுக்கு) இந்திர விழா எடுக்கிறோம் என்று ஒரு ஆராய்ச்சியாளர் கூறுவது குறிப்படத்தக்கது. 


துவஷ்டாவின் இரண்டு மகன்கள் - இந்த துவஷ்டாவுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் த்ரிசிரஸ். இவனை இந்திரன் கொன்று விட்டான். இளைய மகன் விருத்திர அசுரன். தந்தை துவஷ்டா, தன் மூத்த மகனைக் கொன்ற இந்திரனைப் பழி வாங்கவே, இந்த இரண்டாவது மகனான விருத்திர அசுரனைப் படைக்கிறார். இவன் பூமியில் இருக்கிறான். (இவனை எரிமலை என்று உருவகம் செய்து கொள்ள வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்). 


உயிர்களின் படைப்பு - இந்திரன் பெரும் மழையைப் பொழிவித்து, வெள்ளத்தால் பூமியை மூடி, இந்த விருத்திர அசுரனையும் கொன்று விடுகிறான். அதனால், உலகத்து உயிர்கள் எல்லாம் மடிந்து விட்டன. எனவே இந்திரன், படைக்கும் கடவுளான பிரம்மனுக்கு பயந்து, வெள்ள நீரில் உள்ள தாமரையில் ஒளிந்து கொள்கிறான். இந்த தாமரையில் லட்சுமி இருக்கிறாள் என்பர். இந்த லட்சுமி, சுக்கிரன் என்ற கிரகத்துக்கு அதிதேவதை. இந்த சுக்கிரன் புலன் நுகர்ச்சிகளுக்கு உரியவன். சுக்கிரன் கிரகத்தின் கடவுளான லட்சுமியின் அருள் இருந்தால், இந்திரிய (ஐம்புலன் நுகர்ச்சிக்கான) சுகங்கள் எல்லாம் கிடைக்கும் என்கிறது ஜோதிடம். எனவே இந்திரன் ஒளிந்து கொண்ட தாமரையில், பிரம்மா வந்து, மீண்டும் உயிர்களைப் படைக்கிறார் என்று ஒரு வகையில் பொருத்தமாக இந்த விளக்கத்தை ஆராய்ச்சியார்கள் கூறுகிறார்கள். 


சிவனின் முதல் திருவிளையாடல் - துவஷ்டா, தன் மூத்தமகன் த்ரிசிரஸ் என்பவனை கொன்ற இந்திரனைப் பழிவாங்கும் பொருட்டு, தனது இளைய மகனான விருத்திர அசுரனைப் படைக்கிறார். அவனையும் இந்திரன் கொன்று விடுகிறான். அவன் பிரம்மனின் கோபத்துக்கு ஆளாகிறார். அதாவது இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது. பிராமணனைக் கொன்றால் பிரம்மஹத்தி தோஷம். துஷ்டா பிராமணனாக இருக்க வேண்டும். அப்படி இந்திரன் ஒளிந்து அலைந்து திரிந்த போது, மதுரை என்னும் கடம்பவனத்துக்கு வருகிறான். இங்கு அவனுக்கு சிவன் அருள் புரிகிறார். எனவே சிவனை வணங்குவதற்காக, அவன் பூக்களைத் தேடித் திரிந்த போது, சிவனே அவனுக்கு ஒரு பொற்றாமரை குளத்தை உருவாக்கி அங்கு தாமரை மலர்களைக் கொடுக்கிறார். இதுவே சிவனின் முதல் திருவிளையாடல் என்பர்.


விருத்திர அசுரன் & இந்திரன் போர் - இந்திரனுக்கும், துவஷ்டாவின் இளைய மகன் விருத்திர அசுரனுக்கும் போர் நடக்கிறது. இந்திரனால், விருத்தி அசுரனை வெல்ல முடியவில்லை. இந்திரன் தோற்று, விஷ்ணுவிடம் வந்து சரண்டைகிறான். விஷ்ணு, "பாற்கடலில் அடியில் உள்ள முனிவரின் முதுகு எலும்பை வைத்து, சண்டையிட்டால், விருத்திர அசரனைத் தோற்கடிக்கலாம்" என்று ஒரு வழியைச் சொல்கிறார். 


இந்திரனும், அவ்வாறு அந்த முனிவரை அணுகி அவரின் முதுகு எலும்பை கேட்கிறான். அவரும் அதற்கு உடன்பட்டு இறப்பதற்கு சம்மதிக்கிறார். அப்போது, இந்த உடல் நமக்கு எப்போதும் பயன்படாது என்ற கருத்தில் ஒரு பாடலாகச் சொல்லப்படுகிறது. நாம் இறந்து விட்டால், இந்த உடலை, நாயும், நரியும், தனக்குச் சொந்தம் எனச் சொல்வர். பெற்றவர்களான தந்தையும், தாயும், இந்த உடல் தனக்குச் சொந்தம் எனச் சொல்வர். எமனும், பேயும் தனக்குச் சொந்தம் எனச் சொல்லும்.  இப்படி மனம் போனவர்கள் எல்லாம் இந்த உடலைச் சொந்தம் கொண்டாடுகிறார்களே, உண்மையில் இந்த உடல் யாருக்குச் சொந்தம்? என்று கேட்கிறார். எனவே, இந்த உடலில் நன்றாக வாழும்போது, யாருக்காவது உபயோகமாக இருந்துவிட்டுப் போகிறேன் என்று கூறி, இந்திரனுக்காக இறக்கத் துணிகிறார். 


"நாய் நமதென, நரி நமதென, பிதா-தாய் நமதென, நமன் நமதென, பிணி-பேய் நமதென, மனமதிக்கும் பெற்றிபோலாய் நமதெனப்படும் யாக்கை யாரதே."


வச்சிராயுதம் - இந்த முனிவர் இறந்தவுடன், அவரின் முதுகெலும்பை எடுத்து, விஸ்வ கர்மாவிடம் கொடுத்து, அதைக் கொண்டு ஒரு வச்சிராயுதம் செய்து, இதைக் கொண்டே இந்த விருத்திர அசுரனிடம் சண்டையிட்டு அவனை இந்திரன் கொன்றான் என்கிறது திருவிளையாடல்.

 

**


திருக்கோவையார்

 திருக்கோவையார் - 

இந்த நூல் பாடல்களை மாணிக்கவாசகர் இயற்றி உள்ளார். கடவுள் பக்தியில் ஆனந்த பரவச நிலையில் நின்று, ஆன்மாவையும் (உயிர்களில் உள்ள ஆன்மாவையும்), இறை நிலையில் உள்ள பதியையும் (இறைவனையும்), நாயகன்-நாயகி பாவனையில் நினைத்து, பாடிய பாடல்கள் கொண்டது. 

இந்த பாடல்கள் நானூறு கட்டளைக் கலித்துறைகளை உடையது. இந்தப் பாடல்கள், சிற்றின்பத்தை வைத்து, பேரின்ப பொருளைக் கூறி உள்ளது. அதை அகப்பொருள் பகுதியாக வைத்து உரை செய்தவர் நச்சினிக்கினியர். இவரையே பேராசிரியர் என்பர். இவரின் உரைக்கு பேராசிரியர் உரை என்பர். 

நாயகன், நாயகியைக் கண்டு வியப்பது போல ஒரு பாடல். 

தாமரை, நெய்தல், குமிழ், கோங்கு, காந்தள், ஆகிய ஐந்து மலர்களால் தொடுக்கப்பட்ட அழகிய தெய்வ மாலை ஒன்று இளம் பெண்ணாக உருவம் பெற்று, அன்ன நடை பயின்று, மன்மதனின் வெற்றிக் கொடிபோல, ஒளிர்கின்றதே, என்று வியக்கிறான். 

பாடல்: "திருவளர் தாமரை சீர்வளர் காவிகள் ஈசர் தில்லைக் குருவளர் பூங்குமிழ் கோங்கு பைங்காந்தள் கொண்டு ஓங்கு தெய்வ மருவளர் மாலையொர் வல்லியின் ஒல்கியன நடைவாய்ந்து உருவளர் காமன் தன் வென்றிக் கொடி போன்று ஒளர்கின்றதே."


திருக்கோளிலி (திருக்குவளை)

திருக்கோளிலி (திருக்குவளை)  

திருக்கோளிலியில் கோயில் (திருக்குவளை) கொண்டுள்ள சிவன் பெயர் கோளிலிநாதர். அம்மை பெயர் - வண்டமர் பூங்குழல் அம்மை. 

கோள்களுக்கு வந்த தோஷம், இங்கு வந்து சிவனை வழிபட்டதால், நீங்கியதால் இப்பெயர் ஏற்பட்டதாம். 

சிவனின் திருமுடியை கண்டேன் என்று பொய் கூறிய பிரம்மதேவனுக்கு பிடித்த தோஷம் நீங்க, பிரம்மன் இங்கு வந்து, மணலால் சிவலிங்கம் பிடித்து வழிபட்டு, தோஷம் நீக்கிக் கொண்டான் என்பர். எனவே இங்குள்ள சிவனை பிரம்மபுரீஸ்வரர் என்பர். 

இங்குள்ள சிவலிங்கம் மணலால் உள்ளதால், அதற்கு குவளை மலர் சாத்துவர். எனவே இந்த சிவனை திருக்கோளிலிநாதர், திருக்குவளைநாதர் என்பர். 

இங்குள்ள சிவனின் நடனத்தை பிரமர நடனம் என்பர். அதாவது வண்டு பறப்பது போல அந்த நடனம் இருக்குமாம். அந்த வண்டில் அமர்ந்த அம்மைதான், வண்டமர் பூங்குழல் அம்மை. 

சுந்தரமூர்த்தி (சுந்தரர்), அடியார்களுக்கு உணவு வழங்க, நிலக்கிழாரிடம் நெல் பெற்றுக் கொண்டபோது, அதை தூக்கிச் செல்ல ஆள் கிடைக்காமல் வருத்தப்பட்டு, "ஆளில்லை எம்பெருமான்..." என்று பாடி சிவனிடம் உதவி பெற்ற தலம். 

மகாவிஷ்ணு, பிரம்மா, அகத்தியர், எல்லா நவக்கிரகங்கள், முசுகுந்த சக்கரவர்த்தி, பஞ்சபாண்டவர்கள், இவர்கள் வந்து வழிபட்ட தலம் இது. 



பஞ்ச கிருத்தியம்

 பஞ்ச கிருத்தியம் 

சிதம்பரத்தில், சிவன், ஆகாய லிங்க மூர்த்தியாக இருப்பார். இறைவனின் ஐந்து தொழில்களாக பஞ்ச கிருத்தியத்தின் பொருட்டு, சிவன் இங்கு ஆனந்த தாண்டவ நிலையில் இருப்பார். 

பஞ்ச கிருத்தியம் - இறைவனின் ஐந்து தொழில்கள். ஆன்மாக்களின் குறைகளை ஒழித்து அதை வீடுபேறு அடையச் செய்வதற்காக, இறைவன் இந்த பஞ்ச கீர்த்தியத்தை நடத்திக் கொண்டு இருக்கிறான். பஞ்ச கீர்த்தியம் என்னும் ஐந்து தொழில்கள் - சிருட்டி, திதி, சங்காரம், திரோபவம், அனுக்கிரகம். (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்தொழில். 

பஞ்ச பூதங்களான நீர், நெருப்பு, காற்று, நிலம், ஆகாயம் ஆகிய ஐந்திலும் இறைவனே இருக்கிறான் என்பது தத்துவம். இந்த ஐந்தையும் அடையாளப்படுத்தும் விதமாக ஐந்து சிவ தலங்கள் உள்ளன. உலகில் உள்ள எல்லா உயிர்களும் இந்த ஐந்து பூதங்களின் சேர்க்கையே. அல்லது இதில் பலவற்றின் சேர்க்கையே. 

நிலத்துக்கு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர். (ஏகாம்பரேஸ்வரர்-ஏலவார்குழலி). 

நெருப்புக்கு திருவண்ணாமலை அண்ணாமலையார் (அண்ணமலையார்-உண்ணாமுலையாள்). 

நீருக்கு திருவாணைக்காவில் (திருச்சியில்) உள்ள ஜம்புகேசுவரர் (ஜம்புகேசுவரர்- அகிலாண்டஸ்வரி). 

ஆகாயத்துக்கு சிதம்பரத்தில் உள்ள நடராஜர் (கனகசபைநாதர்- உமையாம்பிகை என்னும் சிவகாமசுந்தரி). 

காற்றுக்கு காளத்தியில் (காளகஸ்தியில்) உள்ள காளத்தீசுவரர் (காளத்தீசுவரர்- ஞானபிரசுனாம்பிகை.


குற்றாலம்

 குற்றாலம் 

அகத்தியர் பொதிகை மலைக்குச் செல்லும் போது, குற்றாலம் வழியே செல்கிறார். அங்குள்ள விஷ்ணு கோயிலுக்குப் போகிறார். அது விஷ்ணு கோயில் என்று அகத்தியருக்கு தெரியவில்லை. அகத்தியர் சிவபக்தர். எனவே அங்குள்ள வைஷ்ணவர்கள் அகத்தியரை விரட்டி அடிக்கின்றனர். 

பின்னர், அகத்தியர் விஷ்ணு பக்தர் போல மாறுவேடத்தில் வந்து, அங்குள்ள விஷ்ணு சிலையை குழைத்து அதை சிவனாக்கி வழிபட்டார் என்று சொல்வர். விஷ்ணு பக்தர்களின் கர்வத்தை அகத்தியர் இவ்வாறு அகற்றினார் என்பர். 


கோகர்ணம்

 கோகர்ணம் 

இராவணன், கைலாசம் சென்று சிவனிடமிருந்து ஒரு சிவலிங்கம் பெற்று வந்தான். அதை எங்கும் கீழே வைக்கக் கூடாது. வைத்தால் அங்கேயே நிலை பெற்று விடுவார் அந்த சிவலிங்கம். 

வழியில் ஒரு நதிக்கரையில் நீராட நினைத்தான் இராவணன். அப்போது, அங்கு ஒரு பிராமணனாக வந்த விநாயகர் கையில் கொடுத்து விட்டு ஆற்றில் நீராடச் சென்றான் இராவணன். விநாயகர், அந்த சிவலிங்கத்தை தரையில் வைத்து விட்டார். 

இராவணன் வந்து அதை எடுக்க முனைந்த போது, அது பசுவின் காதுபோல (கோ-வின் கர்ணம் போல) வேர் விட்டு தரையில் புதைந்து விட்டது. எனவே முயற்சி தோற்று, இராவணன் அந்த சிவலிங்கத்தை அங்கேயே விட்டு விட்டுச் சென்றான். எனவே அந்த இடத்துக்கு கோகர்ணம் என்ற பெயர் ஏற்பட்டது. இது துளுவ நாட்டில் உள்ளது. (தற்போதைய கர்நாடகாவில் ஒரு பகுதி).


திருக்கோணமலை

 திருக்கோணமலை.

ஈழ நாட்டில் உள்ளது. சிவன் தலம். தட்சிண கைலாசம் (தென் கைலாசம்) என்று மூன்று இடங்கள் உள்ளன. அதில் இந்த திருக்கோணமலையும் ஒன்று. 

வில்லிபுத்தூராரின் பாரதத்திலே ஒரு உவமை சொல்வார். ஈழ நாட்டையும் பாண்டி நாட்டையும் தராசின் இரு தட்டுகள் ஆக்கி, அதில், கோண மலையையும், பொதிகை மலையையும் வைத்து, சீர் தூக்கி நிறுப்பதற்காக, பிரம்மதேவன், சேது பந்தனத்தை துலாக்கோல் ஆக்கினான் என்று வர்ணிக்கிறார். 


Wednesday, July 21, 2021

005 கம்பராமாயணம்

 நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன், என்னை!

வைத வைவின் மரா மரம் ஏழ் துளை எய்த, 

எய்தவற்கு, எய்திய மாக் கதை செய்த,

செய்தவன் சொல் நின்ற தேயத்தே. 5 


(கம்பராமாயணம்)


பெரியவர்கள் வைது (திட்டி) சாபமிட்டால், அது உடனே பலித்தும் விடும். 


அதைப்போலவே, அம்பை எய்த உடனேயே, ஏழு மரா மரங்களையும் ஒரே நேரத்தில் ஏழு துளைகளை இட்டுக் கொண்டு செல்லும்படி அம்பு எய்தவனின் (இராமனின்) பெருமைமிகு கதையை, நொய்யிலும் நொய்யான (மிகச் சிறியதிலும் சிறியதான) சொற்களைக் கொண்டு இந்த நூலை இயற்றுகிறேன் (கம்பன்), அதை என்னவென்று சொல்வது!


**


004கம்பராமாயணம்

 ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று,

ஒரு பூசை (பூனை) முற்றவும் நக்குபு புக்கு என,

ஆசை பற்றி அறையல் உற்றேன். 

மற்று, இக் காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ. 4

(கம்பராமாயணம்)


ஒரு பூனை, தன் ஆசையால், மிகுந்த இரைச்சல் ஓசையுடன் கூடிய பாற்கடலைப் பார்த்து, இதை நான் முழுவதும் நக்கியே குடித்து விடுவேன் என நினைத்ததாம். 


அதுபோல, நானும் (கம்பன்), எந்த குற்றமும் இல்லாத, வெற்றி வேந்தனான, இராமனின் கதையை சொல்ல ஆசைப் பட்டேன்.

**


003கம்பராமாயணம்

 ஆதி, அந்தம், அரியென யாவையும் ஓதினார்,

அலகு இல்லன, உள்ளன, வேதம் என்பன,

மெய்ந் நெறி நன்மையன்,

பாதம் அல்லது பற்றிலர், பற்று இலார். 3

(கம்பராமாயணம்)


முதலும், முடிவும், அரிதானவையும் அனைத்தையும் கற்றனர். வேதம் என்பது அளவுகள் உடையதும், இல்லாததும் ஆகும். பற்று இல்லை என்று சொல்பவரும் கூட, உண்மை நெறி நன்மை தருபவனின் பாதத்தை (இறைவனை) பற்றிக் கொள்வர்.


**


002கம்பராமாயணம்

 சிற் குணத்தார் தெரிவு அரு நல் நிலை,

எற்கு உணர்த்த அரிது, 

எண்ணிய மூன்றனுள், முற்குணத்தவரே முதலோர்,

அவர் நற்குணக் கடல் ஆடுதல் நன்று அரோ. 2


சிறந்த குணத்தவரின் நல்ல தன்மையை தெரிந்து கொள்வது எப்படி என்று என்னால் உணர்த்துவது கடினம். மூன்று குணங்களான, சத்துவம், ராஜசம், தாமசம், இவற்றில் முதலில் சொன்ன சத்துவ குணத்தவரே சிறந்தவர். அவருடன் கூடி அவரின் நற்குணங்கள் என்னும் கடலில் திளைத்து ஆடுவது நல்லது அன்றோ.


சத்துவம் - சாத்வீக குணம், புலன்களை அடக்கிய நிலை (வெண்மை). 

ராஜசம் - ரஜோ குணம், விருப்பம் கருதிய செயல்களை மட்டும் செய்வது (சிவப்பு).

தாமசம் - தமோ குணம், எல்லா கெட்ட குணங்களும் இருப்பது (கருப்பு).


**


001கம்பராமாயணம்

 உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்,

நிலை பெறுத்தலும், நீக்கலும், 

நீங்கலா அலகு விளையாட்டு உடையார், 

அவர் தலைவர், அன்னவர்க்கே சரண் நாங்களே. 1

(கம்பராமாயணம்)


எல்லா உலகங்களையும் தானே படைத்தவரும், அதை இயக்கித் தொடரச் செய்தவரும், அதை நீக்கி அழித்தவரும் என, இந்த அளவு இல்லாத செயலான விளையாட்டைச் செய்தவரான அவரே தலைவர் (இறைவன்]. அவருக்கே நாங்களும் சரண் ஆகிறோம்.


**


Friday, July 2, 2021

The Doctrine of Laan

 The doctrine of laan (curse):

 

Muhammad Yusuf, Khan Bahadur, in his Muhammadan Law, Volume II, Edition 1898, page 352 et seq, gives a full account of "laan" and the accuracy of the account there given has not been seriously questioned. Briefly put it is that when a Muhammadan makes an allegation of misconduct against his wife and the wife denies the same, both parties can go to the Kasi. The husband, in the presence of the Kazi, four times over repeats his allegation of misconduct before the Kazi, strengthens it by an oath, that oath being accompanied by the use of the word "laan" or curse of God. The wife gives testimony also four times over and accompanies her testimony by the use of. the word ghazab." If either of the persons refuse to make laan the Kazi is to imprison that person who refuses until he or she makes the laan. If both husband and wife have made their respective oaths, etc. the Kazi can effect separation between them.

 

The doctrine of "laan" has no farther place in Anglo-Muhammadan Law or that it should be considered obsolete. Mr. Mohammad Yusuf, Khan Bahadur, mentions it as still prevalent. Sir R. K. Wilson in his Anglo-Muhammadan Law, 4th Edition, 1912, paragraph 76, says: "The fact of a husband having (whether truly or falsely) charged his wife with adultery, will (probably) entitle her to claim a judicial divorce, without prejudice to any proceedings for defamation which she may be advised to institute, and independently of the result of any such proceedings."

 

Baillie in his Muhammadan Law after describing the form of "laan" goes on to say at page 338: "When both parties have taken the laan the Judge is to separate them." The second plea that no suit for dissolution is maintainable until the husband has been given the option of retraction of the accusation of his wife's adultery has not been supported.

 

The law on the subject is thus stated in Shama Charan Sircar's Muhammadan Law, Tagore Law Lectures for 1873, at page 406: "if a Husband charges his wife with adultery...the charge is investigated by the Kazi, who, upon proof, thereof, issues a decree of separation between the husband and the wife and thus their marriage is dissolved, The separation so effected is an irreversible divorce."

 

Mr. Ameer Ali lays down the rule in the following terms in Volume II of his well known work on Muhammadan Law, page 575, 3rd Edition: "When a false accusation (of adultery) is preferred against a woman, and the husband is unable to establish the charge, the woman is entitled to obtain a divorce from the Court." The same view is propounded in Sir Rowland Wilsons' Anglo-Muhammadan Law and in the Tagore Law Lectures by Khan Bahadur Muhammad Yusuf.

 

The proceeding known as laan or imprecation (curse) is only a procedure which either the wife or the husband could adopt before a Kazi or Judge. The reason for it is stated by Mr. Ameer Ali in the following terms: "Under the Musalman Law, a charge of adultery preferred by a husband against his wife can only be established by the direct testimony of four witnesses to the fact. From the nature of the offence, however, the oases in which ocular and direct evidence is available are extremely rare. In order to obviate the evils which would necessarily result from a denial of all redress to the injured husband, in those numerous instances, where he is morally convinced of the guilt of his wife, but has no direct testimony to establish it, or when he alone is cognisant of the fact, the law has prescribed the proceeding by laan."

**

 

Monday, May 24, 2021

Ramnad Zamin Case in 1882

 Ramnad Zamin Case in 1882

 

The Ramnad Zamindar and another vs Doraisami 

 

Madras High Court (1882) ILR 7 Mad 341

Bench: Justice C.A.Turner and Justice Kt. Kindersley

 

Sivasami Thevar claimed the zamindari of Ramnad. But he released his right over the Ramand Zamindari on a compromise. As per the compromise, certain villages and a monthly allowance of Rs.200 were agreed to be paid to Sivasami Thevar. Hence Sivasami Thevar released his claim over the said zamindari.

 

Later, Sivasami Thevar died on 1st July 1861 leaving his widow Kolathai Nachiar. But one Doraisami claimed that his mother Ramamani Ammal was also another wife to Sivasami Thevar and through him Doraisami and one daughter were born.

 

The first wife Kolanthai Nachiar claimed that she alone was the wife of Sivasami Thevar. Hence the second wife Ramamani Ammal filed a suit in 1864 at District Court of Madura (Madurai) to establish her right as a widow and Doraisami as her son and a daughter (since deceased) through Sivasami Thevar.

 

The first wife Kolanthai Nachiar claimed that the second wife Ramamani Ammal was a dance girl and not the legally wedded wife of Sivasami Thevar. 

 

Meanwhile, the Ramnad Zamindar stopped the allowance given to Sivasami Thevar. The Ramnad Zamindar claimed that the monthly allowance paid to Sivasami Thevar was the personal allowance paid to Sivasami Thevar and therefore on his death, the legal heirs were not entitled to it. But the Court overruled the Zamindar’s stand and decreed the suit in favour of first wife Kolanthai Nachiar.

 

Whether the second wife Ramamani Ammal and her son Doraisami were the legal heirs of the deceased Sivasmai Thevar was a question to be decided.

 

First wife Kolanthai Naichiar claimed that the second wife Ramamani Ammal was a dancing girl attached to Thiruchuli temple and if at all any marriage with Sivasami Thevar it would not be a valid one.

 

Number of witnesses were examined. They adduced that a marriage having been celebrated between Ramamani Ammal and Sivasami Thevar. On the death of Sivasami Thevar, his mother treated the said Ramamani Ammal as a lawful wife of Sivasami Thevar. In the presence of Sivasami Thever’s mother, Ramamani Ammal Thali (sacred thread) was removed and replaced by a gold chain, as is usual in the case of widows who have been married.

 

Hence the Madras High Court allowed the claim of Ramamani Ammal and her son Doraisami as wife and son of the deceased Sivasami Thevar and entitled to the estate of the deceased Sivasami Thevar.

**

 

 

 

 

 

இராமநாதபுரம் ஜமீன் வழக்கு

 இராமநாதபுரம் ஜமீன் வழக்கு

The Ramnad Zamindar and another vs Doraisami (1882) ILR 7 Mad 341 Madras High Court

Bench: Justice C.A.Turner and Justice Kt. Kindersley

 

இராமநாதபுரம் ஜமீன் உரிமை தனக்கும் இருப்பதாக கூறிசிவசாமி தேவர் என்பவர் ஜமின்தாரைக் கேட்கிறார். அவர்களுக்குள் ஒரு உடன்பாடு எற்படுகிறது. அதன்படி ஜமீன் உரிமையை சிவசாமி விட்டுக் கொடுத்து விடுகிறார். அதற்க ஈடாஅவருக்கு மாதம் ரூ.200 மாத அலவன்ஸ் மறும் சில கிராமங்களின் நிர்வாகங்களும் சிவசாமிக்கு கொடுக்கப்படுகிறது. 

 

பின்னர்சிவசாமி தேவர் இறந்து விடுகிறார். அவருக்கு முதல் மனைவி குழந்தை நாச்சியார். இரண்டாவது மனைவி ரமாமணி அம்மாள். இந்த ரமாமணிக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். மகன் பெயர் துரைச்சாமி தேவர். மகளைத் திருமணம் செய்து கொடுத்து அவளுக்கு குழந்தைகள் உள்ளன. அவள் இறந்து விடுகிறாள்.

 

ஜமீனில் மூலம்இறந்த சிவசாமித் தேவருக்கு கிடைத்து வந்த மாத அலவன்ஸ் ரூ.200ஐ இராமநாதபுரம் ஜமின்தார் நிறுத்தி விட்டார். அது சிவசாமித் தேவருக்கு தனிபட்ட முறையில் கொடுக்கபட்ட அலவன்ஸ் என்றும்அவர் இறந்த பின்னர் அவரின் வாரிசுகளுக்கு அந்த பணத்தை தொடரந்து பெற்றுக் கொள்ள எந்த உரிமை இல்லை என்றும் ஜமின்தார் சொல்லிவிட்டார். ஆனாலும் மூத்த மனைவி குழந்தை நாச்சியார் வழக்குப் போட்டு அதை பெறும் உரிமையைப் கோர்ட் மூலம் பெற்று விட்டார். அந்த வழக்கு லண்டன் பிரைவி கவுன்சில் வரை சென்றது.

 

இதற்கிடையில்இறந்த சிவசாமித் தேவர் சொத்திலும்ஜமீன் மூலம் கிடைக்கும் மாத அலவன்ஸ் ரூ.200 இவைகளில் இரண்டாவது மனைவியும் அவர் மகன் துரைசாமியும் பங்கு இருப்பதாக வழக்குப் போடுகிறார்கள்.

 

ஆனால் முதல் மனைவி குழந்தை நாச்சியார்,  இறந்த சிவசாமித் தேவருக்கு தான் மட்டுமே மனைவி என்றும்ரமாமணி அவரின் மனைவி இல்லை என்றும்ரமாமணி திருச்சுழி கோயிலில் நாட்டியக்காரியாக இருந்தவர் என்றும்அவளை திருமணம் செய்யவில்லை என்றும்அப்படி ஏதேனும் திருமணம் செய்திருந்தாலும் அவள் நாட்டியக்காரி என்பதால் அந்த திருமணம் செல்லாது என்றும்எனவே அவருக்கு பிறந்த மகனான துரைச்சாமிக்கும் எந்த பங்கும் இல்லை என்றும் மறுத்து விட்டார்.

 

வழக்கு கோர்ட்டுக்கு வருகிறது. பல சாட்சிகள் விசாரிக்கப்படுகிறார்கள். அதில்ரமாமணியை சிவசாமித் தேவர் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தார் என்றும்அவர்களுக்கு ஒரு மகனும் மகளும் பிறந்தனர் என்றும் சாட்சி சொன்னார்கள். மேலும்சிவசாமித் தேவர் இறந்தபோதுரமாமணியும் வந்திருந்தார் என்றும்அவரும் மனைவியாக எல்லா சடங்குகளும் செய்தார் என்றும்இறந்த சிவசாமித் தேவரின் தாயார் முன்னிலையில்ரமாமணியின் கழுத்தில் இருந்த தாலியை இந்து முறைப்படி அறுத்துவிட்டுஅவளுக்கு ஒரு தங்க சங்கிலியை மாமியார் போட்டார் என்றும் சாட்சிகள் சொல்கிறார்கள். மேலும்இரண்டாம் மனைவி ரமாமணியின் மகளைமுதல் மனைவி குழந்தை நாச்சியார் சொந்தக்காரருக்கே திருமணம் செய்து கொடுத்திருந்தார்கள் என்றும் சாட்சிகள் சொல்கிறார்கள்.

 

சாட்சியங்களை வைத்து கோர்ட்டுரமாமணியும் ஒரு மனைவிதான் என்றும்அவளுக்கு பிறந்த மகன் துரைசாமிஇறந்த சிவசாமித் தேவரின் மகன் தான் என்றும்எனவே ஜமீன்தார் கொடுக்கும் மாத அலவன்ஸ் பணத்திலும்சிவசாமித் தேவரின் சொத்துக்களிலும் இரண்டாம் மனைவிக்கும்அவளின் மகனுக்கும் பங்கு உண்டு என்று சென்னை ஐகோர்ட் 1881-ல் இந்த தீர்ப்பை கூறியுள்ளது.

**