Saturday, April 12, 2014

கடவுளின் பெயர் உயிரைக் காக்கும்

உயிர்காக்கும் கடவுள் பெயர்:

கன்னியாகுப்சம் என்ற ஊரில் ஒரு பிராணமன் இருந்தான். இவனின் மனைவி ஒரு சூத்திரப் பெண். இவனுக்கு ஒரு மகன் உண்டு. அவன் பெயர் நாராயணன். இந்த பிராமணனோ மகா பாதகன்.

இவனின் வாழ்நாள் முடிவுக்கு வந்தது. எமன் இவனின் உயிரை எடுத்துச் செல்ல வந்தான். இவனின் கடைசி மூச்சில் தன் மகன் நாராயணனை கூவி அழைத்தான்.

ஆனால் வந்த எமனோ, நாராயணின் பெயரைக் கேட்டதால் இவனின் உயிரை விட்டுவிட்டுச் சென்றான்.

அந்தப் பிராமணன் மீண்டும் உயிர் பெற்ற மிகுந்த பக்தியுடையவனாகி நீண்டநாள் வாழ்ந்தான்.

No comments:

Post a Comment