Wednesday, April 23, 2014

ரோஹினம்

ரோஹினம்:
இது ஒரு மலை. இந்த மலையில் இரத்திரனங்கள் அதிகமாக உள்ளதாம்.

இது ஒரு மரம் என்றும் சொல்வர். இது அலம்ப தீர்த்தக் கரையில் உள்ளதாம். இதிலே வால்கில்லியர் தலைகீழாக தொங்கி தவம் செய்து வந்தார். கருடன் அவருக்கு அமிர்தம் கொண்டுவருமாறு சென்றது. 

அது தனக்கு வழியில் பசிக்கும் போது சாப்பிடும் உணவாக ஒரு யானையைக் கொண்டு சென்றது. அந்த யானையை தூக்கிக் கொண்டு முனிவர் தொங்கும் மரத்தில் இளைப்பாற உட்கார்ந்தது. அந்த மரம்  ஒடிந்தது. அந்த மரம் கீழே விழுவதற்கு முன்பே அந்த மரத்தையும் சேர்த்து தூக்கிக் கொண்டு கருடன் பறந்தது. அது அவ்வாறு பறந்து நிஷ்புருஷ மலையில் இறங்கி அந்த யானையை தின்றது.


அவ்வாறு அந்த மரத்தை அங்கு விட்டதால் அந்த மரத்தில் தொங்கிய வாலகில்லியரும் கருடன் சேர்ந்த அந்த மலையில் போய்ச் சேர்ந்தார். அங்கு தனது தவத்தை தொடர்ந்தார். 

No comments:

Post a Comment