Saturday, January 18, 2014

சர்ப்ப,சர்ப்ப

சர்ப்ப,சர்ப்ப
இந்திரனுக்கு அவன் வகித்து வந்த இந்திரபதவி பறிபோயிற்று. அவன் பிரமஹத்தி தோஷத்தில் மாட்டிக் கொண்டதால் அவனின் இந்திர பதவி பறிபோனது.
ஆனால் தேவர்கள், அந்தப் பதவிக்குறிய அடுத்த இந்திரனை தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்கள் கூடி முடிவு செய்து அதன்படி அந்தப் பதவிக்குத் தகுதியானவன் ‘நகுஷன்’ என முடிவுக்கு வந்து அவனுக்கே அந்த பதவியை அளித்தனர்.
பதவி கிடைத்தால் பதவிக்குறிய கர்வமும் சேர்ந்துவிடும் என்பது இயற்கைபோலும். அந்த பதவியில் புதிதாய் வந்த நகுஷன் கர்வம் கொண்டான்.  இவன் வெளியே செல்லும் போது, இந்திரபதவியின் முறைப்படி, இவனை ஒரு சிவிகையில் வைத்து ரிஷிகள் தூக்கிச் செல்லவேண்டும் என்பது ஒரு சம்பிரதாயம்.
ஒருசமயம் இவனை ரிஷிகள் சிவிகையில் தாங்கித் தூக்கிச் சென்றனர். அவ்வாறு தூக்கிச் சென்றவர்களில் அகத்தியரும் ஒருவர். நகுஷன் அவர்களை விரைவாகச் செல்லுங்கள் என்று விரட்டி, சீக்கிரம், சீக்கிரம் என்ற அர்த்தத்தில் சமஸ்கிருத வார்த்தையாகிய ‘சர்ப்ப, சர்ப்ப’ என்று கடிந்து கொண்டான்.
அதைச் சகிக்காத அகத்தியர் கோபம் கொண்டு, ‘அஜகரம் என்னும் சர்ப்பமாக பூமியிற் பிறக்குமாறு’ அவனைச் சபித்தார். அதனால் அவன் இந்திர பதவியை இழந்து மலைப்பாம்பாகத் திரிந்தான்.

அவ்வாறு மலைப்பாம்பாகச் சஞ்சரிக்கும்போது, பாண்டவர்களின் வனவாச காலத்தில், பீமனை விழுங்கினான். ஆனால் பீமன் அந்த மலைப்பாம்பின் வயிற்றை கிழித்துக்கொண்டு வெளியே வந்தான். அப்போது தருமன் அந்த மலைபாம்பான நகுஷனுக்குச் சில உபதேசம் செய்ததால் அவனின் சாபம் நீங்கினான்.

No comments:

Post a Comment