Saturday, January 18, 2014

கைலை பாதி, காளத்தி பாதி

கைலை பாதி, காளத்தி பாதி
நக்கீரர் கடைச்சங்கத்திலே அதன் இறுதி காலத்திலே தலைமை பெற்றிருந்த தெய்வப் புலவர். சிவபெருமான் அருளிச் செய்த ஒரு கவியில் குற்றம் கற்பிக்கப் புகுந்த அஞ்சாச் சதுரர். இறையனார் அகப்பொருளுக்கு நக்கீரர் செய்த உரையால் அவருடைய அளப்பருங் கல்வித்திறமும், அக்காலத்திலே, தமிழ் மொழிக்கு உண்டாகியிருந்த அபிவிருத்தியும் ஆற்றலும் நன்கு புலப்படும்.
நக்கீரர் தமக்கு ஒரு காலத்தில் உண்டாகிய குஷ்டரோகத்தை, ‘கைலைபாதி, காளத்திபாதி’ என்னும் பிரபந்தம் பாடி நீக்கினார்.
திருமுருகாற்றுப்படை, கண்ணப்பதேவர் மறம், முதலியன இவரால் பாடப்பட்டனவே. இவர் மதுரை கணக்காயனார் மகனார்.
திருமுருகாற்றுப்படை பாடக் காரணம்:
கடவுள் பூஜையிலே மனம் செல்லாமல் சிறிது தடுமாறினாலும் தவறு என அவ்வாறு சிறிது தடுமாறிய 1000 பேரைத் தேடி ஒரு பூதமொன்று திரிந்தது. 999 பேரை கண்டுபிடித்து அவர்களை ஒரு மலைமுகட்டிலே கொண்டுபோய் வைத்துவிட்டு, கடைசி ஆளான ஆயிரமாவது ஆளைத் தேடித் திரிந்தது.

அவ்வியல்புடைய இன்னுமொருவரைத் தேடித் திரிந்த பூதமொன்று, நக்கீரர் ஒரு தடாகத்தருகே பூஜை செய்து கொண்டிருப்பதைக் கண்டு, அவரின் தியானத்தை திசை திருப்ப நினைத்தது. அவர் முன்னே வீழ்ந்த ஒரு ஆலிலையைப் பாதி மீனாகவும் மற்ற பாதியை பறவையாகவும் ஆக்கி, அவர் மனத்தைக் கவரும்படி செய்து, அவரையும் கொண்டுபோய் சிறைசெய்து மலைமுகட்டி வைத்தது. இவர்கள் 1000 பேரையும் நான் நீராடி வந்து உண்பேன் என்று நீராடப் போயிற்று. இதைக் கண்ட நக்கீரர் திருமுருகாற்றுப்படையைப் பாடி அறுமுகன் அருளாலே தம்மையும் மற்றையோரையும் காத்தாரென்பது அந்நூல் வரலாறு. 

No comments:

Post a Comment