Tuesday, January 21, 2014

ஓர் இரவில் ஏழு முழம் வளர்ந்த போதிமரம்

ஓர் இரவில் ஏழு முழம் வளர்ந்த போதிமரம்
1400 வருடங்களுக்கு முன்னர் மகத நாட்டை ஆட்சி செய்த மன்னனின் பெயர் பூரணவர்ணன். இவன் பௌத்த சமயத்தின் மீது தீராத பற்றுக் கொண்டவன்.
பௌத்தர்களின் புனித மரமான போதிமரம் கயாவில் உள்ளது. இந்த மரத்தை சசாங்கன் என்பவன் வெட்டி வீழ்த்திவிட்டுப் போய்விட்டான்.
இந்தப் போதி மரம் வெட்டப்பட்டது என்று கேள்விப்பட்ட மன்னன் பூரணவர்ணன் தன் துக்கம் தாளாமல் அழுது புலம்பி விட்டான். தரையில் விழுந்து கதறிக் கதறி அழுதான்.

பின்னர் ஒருவாறு தெளிவுக்கு வந்து, பால் கறக்கும் ஆயிரம் பசுக்களை அங்கு கொண்டு சென்று, அவைகளின் பாலை எல்லாம் இந்த வெட்டுப்பட்ட போதிமரத்தின் அடியில் உற்றி அபிஷேகம் செய்திருக்கிறான்.
அந்த வெட்டுப்பட்ட போதிமரம், அந்த இரவிலேயே ‘ஏழு முழ உயரம்’ வளர்ந்து விட்டதாம்.
இதைக் கண்ட மன்னன் பூரணவர்ணன் மிகுந்த மகிழ்ச்சி உடையவனாகி, ஆனந்தம் அடைந்தான். மீண்டும் யாராவது இந்த மரத்துக்கு ஏதேனும் தீங்கு செய்துவிடக்கூடாது என்று நினைத்த அவன், அந்த மரத்தைச் சுற்றி பதினாறு முழ உயரமுள்ள ஒரு மதில்ச் சுவரை எழுப்பி காத்தான்.


No comments:

Post a Comment