Saturday, January 18, 2014

நைஷதம்

நைஷதம்
நிஷத தேச ராஜனாகிய வீரசேனனுக்கு இரண்டு  மகன்கள். ஒருவன் புஷ்கரன் மற்றவன் நளன். இந்த நளனின் மனைவியே தமயந்தி. இவர்களின் மகன் இந்திரசேனன். மகள் இந்திரசேனை.
நளன், கொடையாலும் கல்வியாலும் நடையாலும் படையாலும் அழகாலும் ஆண்மையாலும் தன்னின் மிக்காரும் ஒப்பாரும் இல்லாத சக்கரவர்த்தி.
இவன் கீர்த்தியை ஓர் அன்னப்பட்சி சொல்லக் கேட்ட தமயந்தி தன் சுயம்வரத்துக்கு இந்திரன் முதலிய தேவர்கள் வந்திருந்த போதும், அவர்களை விரும்பாது நளனை விரும்பி அவனுக்கு மாலையிட்டு சிறிது காலம் காமனும் ரதியும் போல வாழ்ந்திருந்தனர்.  
இவர்கள் மீது கலிபுருஷன் பொறாமை கொண்டு, நளனின் தமையனான புஷ்கர ராஜனை ஏவி நளனோடு சூதாடி அவனை வென்று, ராச்சியத்தைக் கவர்ந்து கொண்டு, நளனையும் அவன் மனைவி தமயந்தியையும் உடுத்த ஆடையோடு காட்டுக்கு விரட்டினான்.
மெல்லியலாகிய தமயந்தி கல்லும் முள்ளும் கொண்ட காட்டில் வருந்தியதைக் கண்டு, ஒருநாள் இரவு நளன், அவளைத் தனியே விட்டுவிட்டு மறைந்தான். அவள் தமியளாக (தனியாக) தேடிப் புலம்பி அலைந்து தப்பிக் கடைசியில் தன் தந்தைவீடு சேர்ந்தாள்.
 பின்னர், நளன் தமயந்தியை தேடிக் கண்டு அவளை அழைத்துச் சென்று, புஷ்கரனை வென்று முன்னர் போல ராச்சியம் பெற்று வாழ்ந்திருந்தான்.

இவன் சரித்திரத்தை விரித்துரைக்கும் நூல் “நைஷதம்”. இது தமிழிலும் இப்பெயராலேயே விளங்கும். நைஷதம் = நிஷத நாட்டு சரித்திரம்.

No comments:

Post a Comment