Saturday, January 18, 2014

கடவுள், எவ்வளவு கீழும் இறங்கி வருவார்

கடவுள், எவ்வளவு கீழும் இறங்கி வருவார்
திருப்பனந்தாள் என்னும் ஊர் காவிரியின் வடகரையில் உள்ள ஒரு சிவஸ்தலம். 
சிவபக்தியில் சிறந்த ஒரு பெண்மணி, தாம் தொடுத்த மாலையை, இங்குள்ள சிவபெருமானுக்கு சாத்த சென்றபோது, தமது உடை நெகிழ, இதை தனது இரு முழங்கைகளாலும் இடுக்கிக் கொண்டு மாலையை இடமுடியாமல் வருந்தி நின்றார்.
இந்தப் பெண்மணியின் பக்தியை உணர்ந்த சிவன், தனது தலையை கவிழ்ந்து சாய்த்து அந்த மாலையை ஏற்றுக் கொண்டானாம்.

குங்கிலியக்கலய நாயனார்  தமது கழுத்தில் கயிறுபூட்டி இழுக்க நிமிர்ந்தது இந்த லிங்கமே. இந்தஸ்தலத்திலே புராதன மடாலயம் ஒன்றும் உள்ளது.

No comments:

Post a Comment