Saturday, January 4, 2014

பரதநாடு

பரதநாடு

இந்த பெயர் வந்தது மிக மிகப் பழமையான காலத்திலேயே.
மகாபாரதக் கதை ஏற்பட்ட காலத்துக்கு முன்னரே இந்த நாடு பரதநாடு என்ற பெயருடனேயே விளங்கியது. 

சகுந்தலைக்கும் துஷ்யந்தனுக்கும் பிறந்த புத்திரன் பெயர் பரதன். 

(இராமாயண காலத்திலும், இராமனின் தம்பிக்கும் இப் பெயரே). 

இவன் துஷ்யந்தனுக்குப் பின்னர் ஆரிய தேசம் முழுவதையும் கட்டி ஆண்டான். அப்போதே இந்த ஆரிய தேசமானது அவனின் பெயரைக் கொண்டே "பரதவருஷம் அதாவது பரதநாடு" என்று பெயர் சூட்டிக் கொண்டது.

துஷ்யந்தனின் புத்திரன் பரதனுக்குப் பின்னர் அவனின் சந்ததிகளில்,
பரதனின் ஒன்பதாம் சந்ததியின் பெயர் "குரு." 
இந்த குருவின் பதினான்காம் சந்ததி "சந்தனு. "

சந்தனுவுக்கு நான்காம் சந்ததிதான் பாண்டவர்கள், கௌரவர்கள்.
இவர்களே பாரதத்தை ஆண்டவர்கள்.  

No comments:

Post a Comment