Thursday, September 9, 2021

குற்றாலம்

 குற்றாலம் 

அகத்தியர் பொதிகை மலைக்குச் செல்லும் போது, குற்றாலம் வழியே செல்கிறார். அங்குள்ள விஷ்ணு கோயிலுக்குப் போகிறார். அது விஷ்ணு கோயில் என்று அகத்தியருக்கு தெரியவில்லை. அகத்தியர் சிவபக்தர். எனவே அங்குள்ள வைஷ்ணவர்கள் அகத்தியரை விரட்டி அடிக்கின்றனர். 

பின்னர், அகத்தியர் விஷ்ணு பக்தர் போல மாறுவேடத்தில் வந்து, அங்குள்ள விஷ்ணு சிலையை குழைத்து அதை சிவனாக்கி வழிபட்டார் என்று சொல்வர். விஷ்ணு பக்தர்களின் கர்வத்தை அகத்தியர் இவ்வாறு அகற்றினார் என்பர். 


No comments:

Post a Comment