Wednesday, July 21, 2021

001கம்பராமாயணம்

 உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்,

நிலை பெறுத்தலும், நீக்கலும், 

நீங்கலா அலகு விளையாட்டு உடையார், 

அவர் தலைவர், அன்னவர்க்கே சரண் நாங்களே. 1

(கம்பராமாயணம்)


எல்லா உலகங்களையும் தானே படைத்தவரும், அதை இயக்கித் தொடரச் செய்தவரும், அதை நீக்கி அழித்தவரும் என, இந்த அளவு இல்லாத செயலான விளையாட்டைச் செய்தவரான அவரே தலைவர் (இறைவன்]. அவருக்கே நாங்களும் சரண் ஆகிறோம்.


**


No comments:

Post a Comment