Wednesday, July 21, 2021

005 கம்பராமாயணம்

 நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன், என்னை!

வைத வைவின் மரா மரம் ஏழ் துளை எய்த, 

எய்தவற்கு, எய்திய மாக் கதை செய்த,

செய்தவன் சொல் நின்ற தேயத்தே. 5 


(கம்பராமாயணம்)


பெரியவர்கள் வைது (திட்டி) சாபமிட்டால், அது உடனே பலித்தும் விடும். 


அதைப்போலவே, அம்பை எய்த உடனேயே, ஏழு மரா மரங்களையும் ஒரே நேரத்தில் ஏழு துளைகளை இட்டுக் கொண்டு செல்லும்படி அம்பு எய்தவனின் (இராமனின்) பெருமைமிகு கதையை, நொய்யிலும் நொய்யான (மிகச் சிறியதிலும் சிறியதான) சொற்களைக் கொண்டு இந்த நூலை இயற்றுகிறேன் (கம்பன்), அதை என்னவென்று சொல்வது!


**


No comments:

Post a Comment