Friday, October 21, 2016

துர்க்கை

துர்க்கை:

துர்க்கை என்றால் துர்க்காதேவி; பார்வதி தேவிக்குக்குத்தான் இந்தப் ப
பெயர்;  துர்க்கன் என்னும் ஒரு பெரிய அசுரனைக் கொன்றதால் பார்வதி தேவிக்கு துர்க்கை என்று பெயர் ஏற்பட்டது;

துர்க்கன் என்னும் இந்த மகா அசுரன், தேவ லோகத்தில் அட்டகாசம் செய்கிறான்; இந்திரன் முதலிய எல்லாத் தேவர்களும்  தங்கள் பதவிகளை விட்டுவிட்டு ஓடி ஒளிந்து கொண்டனர்; அந்த அளவுக்கு அவனின் அட்டகாசம் கட்டுக்கடங்காமல் போய்விட்டது; தேவர்கள் எல்லோரும் சிவபெருமானிடம் முறையிடுகிறார்கள்; சிவனோ, பார்வதி தேவியைப் பார்க்கிறார்; பார்வதி தேவி, தானே அந்த அசுரனைக் கொல்வதாக  உறுதி கொள்கிறார்;

பார்வதிதேவி, தன்னிடம் இருக்கும்  “காலராத்திரி” என்னும் பாங்கிப் பெண்ணை ஏவுகிறார்; அவள் சென்று, அந்த அசுரனின் சேனைகளைப் பார்த்து பயந்து கொண்டு திரும்பி விடுகிறாள்;
பார்வதிதேவி, தானே போருக்கு போகிறார்: அந்த அசுரனின் சேனைகளை அழித்துவிட்டார்; அந்த அசுரன் மட்டும் மிஞ்சி இருக்கிறான்; அவன் ஒரு பெரிய மலையைப் போல உருவம் கொண்டு  சண்டைக்கு வருகிறான்; பார்வதிதேவி, அவனை, தன் நகங்களால் கீறி கிழித்து சிதைக்கிறார்; ஆனாலும், அவன் ஒரு பெரிய மகிஷம் (எருமைமாடு) போன்று உருவம் எடுத்து சண்டைக்கு வருகிறான்; அதையும் பார்வதிதேவி சிதைக்கிறார்;

பின்னர் அந்த அசுரன் தன் சுய உருவத்தில், பெரிய பெரிய ஆயுதங்களை எடுத்துக் கொண்டு சண்டைக்கு வருகிறான்; பார்வதிதேவியோ, ஒரு கணையை விட்டு (ஒரு ஆயுதம்) அவனின் மார்பை பிளக்கிறார்; அத்துடன் அவனின் கதை முடிகிறது;
தேவர்கள் மகிழ்கிறார்கள்! அந்த துர்க்கன் என்னும் அசுரனைக் கொன்றதால், பார்வதிதேவிக்கு “துர்க்கை அல்லது துர்க்காதேவி” என்று பெயர் ஏற்பட்டது;

போருக்குப் போகும் பார்வதிதேவி, எட்டு தோள்களுடனும், பதினெட்டு கைகளுடனும், சூலம், சக்கரம், கரகம் முதலிய ஆயுதங்களுடன், போருக்கு போனார்; இவருக்கு சிங்கவாகினி என்றும், கலையூர்தி என்றும் பலவாறு பெயர்கள் உண்டு; காளிதேவியும் இவர்தான் என்று சொல்பவர்களும் உண்டு;

“கெட்டவர்களை அழிக்க, கடவுளே நேரில் தோன்றி தீர்ப்பை எழுதுவான்போல!”

**

No comments:

Post a Comment