Friday, October 21, 2016

துரோணாச்சாரியன்

துரோணாச்சாரியன்:

இவர் பரத்துவாச முனிவரின் புத்திரன்; அசுவத்தாமனின் தந்தை; இந்த துரோணாச்சாரியாருக்கு “கும்பன்” என்ற பட்டப் பெயரும் உண்டு; துரோணம் என்றால் கும்பம் என்று பொருள்;

பரத்துவாச முனிவர் பெரிய தவத்தில் இருக்கிறார்; அவர் தவத்தை அழிக்க நினைக்கிறான் இந்திரன்; இந்திர லோகத்தில் இருக்கும் பேரழகி மேனகையை அங்கு அனுப்பி வைத்து, பரத்துவாச முனிவரின் தவத்தை கலைக்க சொல்கிறான் இந்திரன்;

மேனகையின் அழகில் மயங்காதவர் யாருமில்லை! பரத்துவாசர் உட்பட! மயங்கி விட்டார்; அவள் வருவதைப் பார்த்தவுடனேயே மயங்கம் கொண்டார்; அவரின் விந்து ஒரு கும்பத்தில் விழுகிறது; அதுவே குழந்தையாகப் பிறக்கிறது; அவரே துரோணர் என்னும் துரோணாச்சாரியார்;

இந்த துரோணாச்சாரியாரிடம்தான், கௌரவர்கள், பாண்டவர்கள் இரு கூட்டத்தாரும், தங்களின் இளமை காலத்தில் வில் வித்தை கற்றனர்;
பாரதப்போரில், இந்த துரோணாச்சாரியார், திருஷ்டியுமன் என்பவனால் கொல்லப்படுகிறார்;

பாரதப்போரில், அசுவத்தாமன் என்று ஒரு யானையும் போர்களத்தில் உள்ளது; துரோணரின் மகன் பெயரும் அசுவத்தாமன்; அங்கு இருப்பவர்கள் (பாண்டவர்கள்) அசுவத்தாமன் இறந்தான் என்று சொல்லி சங்கை ஊதுகிறார்கள்;

பெற்றமனம் பித்துதானே! துரோணர் என்னும் அறிவுஜீவி, பாசத்தின் பிடியில் சிக்கிவிட்டார்; அசுவத்தாமன் என்றால் என் மகன்தானே என்று கருதிக் கொண்டு, வில்லை கீழே போட்டு மயங்கி விழுகிறார்; அப்போது அவரை கொன்றனர்;

“சுத்த வீரனைக் கொல்ல மாற்று வழியே சிறந்தபோல!”
(ஆம் என்கிறான் ஸ்ரீகிருஷ்ணன்).


No comments:

Post a Comment