Friday, October 28, 2016

கந்தரலங்காரம்-2

கந்தரலங்காரம்-2

அழித்துப் பிறக்க ஒட்டா அயில் வேலன் கவியை அன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றிலீர்! ஏரி மூண்டது என்ன
விழித்துப் புகை எழப் பொங்கு வெண் கூற்றன் விடும் கயிற்றால்
கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ கவி கற்கின்றதே!

(அடுத்த பிறவிகள் வேண்டும் என்ற ஆசையை அழித்து, மீண்டும் பிறவி எடுக்க விடாமல், அயில் வேலன் என்னும் கூரான  வேலாயுதத்தை உடைய கடவுளைப் பற்றிய கவிதையை, அன்போடு, எழுத்துப் பிழை இல்லாமல் ஓதிவர விருப்பமில்லாமல் இருக்கின்றீர்கள்!  ஏரி என்னும் நெருப்பு பற்றி எரிவது போல, கண்களை உருட்டி விழித்து, புகை எழுமாறு கொதிக்கின்ற, வெம் கூற்றன் என்னும் கொடிய யமன் விடும் கயிற்றால், கழுத்தில் சுருக்கு மாட்டி, உங்களை இழுப்பான் யமன்! எனவே நீங்கள் (முருகனைத் தவிர) வேறு கவிகளை ஓதலாமா?)
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-2)

**

No comments:

Post a Comment