Sunday, October 2, 2016

போதைக்காரனா, சுட்டுத்தள்ளு!

போதைக்காரனா, சுட்டுத்தள்ளு!

செசன்யா நாட்டின் தலைவர் “ரம்ஜான் காட்டிரோவ்”; இது ரஷ்ய கூட்டாச்சியில் உள்ள நாடு; இங்குள்ள மக்கள் மிக அதிகமாக போதைப் பொருளுக்கு அடிமையாகி விட்டார்களாம்!  நடுரோட்டில் மிரட்டல் விடுக்கிறார்கள்; போதையுடனேயே கார்களை ஓட்டிச் சென்று மோதுகிறார்கள்; நிறைய உயிர் இழப்பு ஏற்படுகிறது; போதையுடன் வண்டி ஓட்டினால், டிரைவர் லைசென்ஸ் கேன்சல் ஆகும் எனச் சட்டமும் உள்ளது; அதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லையாம்; எனவே கார்களை பறிமுதல் செய்தும் பார்த்து விட்டனர்; அதற்கும் பலன் இல்லையாம்!

இங்கு மதுவிற்பனையை காலை 8 மணி முதல் 10 மணி வரை மட்டும் வைத்துப் பார்த்தனர்; மதுவுக்கு கட்டுப்பாடா என்று போதை மருந்துகளை வாங்கி உபயோகிக்க ஆரம்பித்து விட்டனராம்! இது கிடைக்கவில்லை என்றால் அது!

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார் செசன்யா தலைவர்; பொறுமைக்கு ஒரு எல்லை உண்டல்லவா? இனி யாராவது போதை மருந்து உட்கொண்டு திரிந்தால் துப்பாக்கியால் சுட்டுவிடும்படி போலீஸூக்கு உத்தரவு போட்டுவிட்டார்;

போதைக்கு எதிரான போர் என்கிறார்! ஒரு டஜன் பக்கத்து நாடுகளில் இருந்து போதை பொருள்கள் உள்ளே வருகிறதாம்!

ஒரு கெட்டதை ஒழிக்க சட்டம் துப்பாக்கியை எடுக்கச் சொல்லிவிட்டது தவறில்லை என்கிறார் அந்த நாட்டின் தலைவர்.

**

No comments:

Post a Comment