Saturday, October 18, 2014

ஊர்களின் தமிழ்ப் பெயர்கள்

ஊர்களின் தமிழ்ப் பெயர்கள்:
ஊர் என்பதன் மற்ற தமிழ்ப் பெயர்கள் =
பாக்கம், இருக்கை, பாழி, பட்டினம், பள்ளி, முட்டம், பூக்கம், சம்வாகம், நொச்சி, பூரியம், பாடி, பூண்டி, கோட்டம், வாழ்க்கை, மடப்பம், குடி, குடிக்காடு, குறிஞ்சி, குப்பம், அருப்பம், நத்தம், சும்மை, அகரம், புரம், சேரி, அகலுள், வைப்பு, உறையுள், வேலி, நகரம், பக்கணம் (பத்தணம்), கிராமம், கருவடம், குறும்பு, வேசனம், தாமம், நிவேசனம், பதி, பேடு, புரி.
நீரும் வயலும் உள்ள ஊர் = கிராமம்.
சிறு கிராமம் = நூறு குடிகள் நிறைந்தவூர்.
பெருங்கிராமம் = ஐந்நூறு குடிநிறைந்தவூர்.
இராசதானி = புரம், புரி, நகரம்.
மலை செறிந்தவூர் = கேடம்.
மலையும் ஆறும் சூழ்ந்தவூர் = கருவடம்.
ஐஞ்ஞூறு (ஐநூறு) கிராமத்தின் தலைமை கிராமம் = மடப்பம்.
பலபல தீவிற்பண்டம் விற்கும் ஊர் = பட்டணம்.
நெல்லும் புல்லும் நிறைந்த மலை ஊர் = சம்வாகம்.
கழியிருக்கை = தோணாமுகம்.
சிற்றூர் = பட்டு, நொச்சி, பள்ளி.
குறிஞ்சி நில ஊர் = குறிச்சி, சிற்றூர், சீறூர்.
முல்லை நில ஊர் = பாடி.
நெய்தல் நில ஊர் = பட்டினம்.
பாலை நில ஊர் = குறும்பு.
மருத நில ஊர் = புரி, குடம், நகரம், பூக்கம், புரம், குடி, நிகாயம், பள்ளி, சரணம், ஆவாசம், பாக்கம், தாவளம், நிகமம், தாமம், நிலயம், கோட்டம்,  பதி, வாழ்க்கை, சேர்வு, பாழி, வசதி.


No comments:

Post a Comment