Sunday, August 10, 2014

பெற்றமனம் பித்துத்தான்!

Privy Council Appeal 23 of 1914
Mrs. Anne Besant -- Appellant/defendant
Vs.
G.Narayaniah and his two children J.Krishnamurthy and J.Nityananda-- Respondents/ Plaintiff.
Judgment delivered by PC on 25.5.1914.
அன்னி பெசன்ட் அம்மையார் வளர்த்த ஜே.கிருஷ்ணமூர்த்தி - ஜே.நித்யானந்தா இவர்களை பெற்ற தகப்பன்  திரும்பக் கேட்ட சுவாரஸ்யமான பாச வழக்கு.
***
நாரயணையாவுக்கு இரண்டு மகன்கள்; 1. ஜே.கிருஷ்ணமூர்த்தி; 2.ஜே.நித்தியானந்தா. நாராயணையா மதராஸில் வசிக்கும் ஒரு இந்து.  வசதியில்லாத பிராமணர். வருட வருமானமோ ரூ.160/-க்குள். இவர் தியோசபிகல் சொசைட்டியில் (Theosophical Society) பல வருடங்களாக இருந்துவரும் ஒரு உறுப்பினர். இவருக்கு 2 மகன்கள். 1. ஜே.கிருஷ்ணமூர்த்தி (11.5.1895ல் பிறந்தவர்); 2.ஜே.நித்யானந்தா (30.5.1898ல் பிறந்தவர்).
எனவே அன்னிபெசண்ட் அம்மையார், இந்தக் குழந்தைகள்மீது இரக்கப்பட்டு, இவர்கள் இருவரையும் இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் (The University of Oxford) படிக்கும் செலவை ஏற்றுக் கொள்கிறார்.
(அப்போது உள்ள வழக்கப்படி - ஒரு பிராமணர் வெளிநாட்டிற்கு சென்று விட்டால், அவரைத் தன் ஜாதியை விட்டு ஒதுக்கி வைத்துவிடுவர்.)
இருந்தாலும், இந்த உதவியை ஏற்று, தந்தை ஒரு கடிதத்தை அன்னி பெசண்ட் அம்மையாருக்கு எழுதுகிறார். அந்த லெட்டர் 6.3.1910ல் எழுதப் பட்டது. இதில் அம்மையாராகிய நீங்களே இந்தக் குழந்தைகளுக்கு கார்டியனாக இருந்து பாதுகாத்து வரவும் சம்மதிக்கிறேன் என்று எழுதப் பட்டுள்ளது.
இந்துமத வழக்கம்:
இந்துமதவழக்கப்படி, தகப்பன் உயிருடன் இருக்கும் வரை அவரே அவரின் மைனர் குழந்தைகளுக்கு இயற்கை கார்டியன்.  அவர் உயிருடன் இருக்கும்வரை, அவர் இடத்தில், வேறு ஒருவரை கார்டியனாக நியமிக்க முடியாது.
ஆனாலும் இங்கு, குழந்தைகளின் படிப்பைக் கருதி, வேறு ஒருவரிடம் தன் இரண்டு குழந்தைகளையும் ஒப்படைத்து அவரை கார்டியனாக அங்கீகரித்துள்ளார். கல்வி முடிந்தவுடன் அதை ரத்து செய்து இவரே கார்டியனாக மாறிக் கொள்ள முடியும்.
ஆனால், இந்தியாவிலுள்ள பிரிட்டீஸ் முறைச் சட்டம், "மைனர்களுக்கு யார் யார் கார்டியனாக இருக்க தகுதி உடையவர் என்பதை கோர்ட் மூலம் அரசாங்கம்தான் முடிவு செய்யும்" என உள்ளது. (The Court exercising the jurisdiction of the Crown over infants, to create associations or give rise to expectations on the part of the infants which it would be undesirable in their interests to disturb or disappoint, such Court will interfere to prevent its revocation. Lyons vs. Blenkin, Jac.245.)
ஒப்புக்கொண்டபடி, அம்மையாருடன் இரண்டு சிறுவர்களும் பிப்ரவரி 1912ல் இந்தியாவை விட்டு கிளம்பிச் சென்றனர். சில காலம் சிசிலியிலும் (Sicily), சிலகாலம் இத்தாலியிலும், கடைசியாக இங்கிலாந்திலும் இருந்தனர். பின்னர், அம்மையார், இந்த இரண்டு சிறுவர்களையும் அங்குள்ள திருமதி. ஜாக்கப் பிரைட் (Mrs. Jacob Bright) என்பவரின் பாதுகாப்பில் விட்டுவிட்டு, செலவுக்கு பணமும் கொடுத்து ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் சேர்க்கும்படி சொல்லிவிட்டு வந்தார்.

ஆனால், விதியோ, பெற்ற பாசம் என்ற பெயரில் விளையாடியது.
சிறுவர்களின் தந்தை, மறுபடியும் ஒரு கடிதத்தை 11.7.1912ல் அம்மையாருக்கு எழுதி, அதில், "நான் ஏற்கனவே உங்களுக்கு முன் கடிதமான மார்ச் 1910ல் கொடுத்திருந்த கார்டியன் அதிகாரத்தை ரத்து செய்கிறேன்; எனக்கு என் குழந்தைகள் வேண்டும்" என்று கேட்கிறார். அம்மையாரோ, படிப்பு வீணாகி விடும் என மறுக்கிறார். தந்தையோ, செங்கல்பட்டு மாவட்ட கோர்ட்டில், "மகன்கள் என் பொறுப்பில் வேண்டும் (for the custody of his children)" என வழக்குப் போடுகிறார். தகப்பனிடம் குழந்தைகளை கொடுத்துவிடும்படி செங்கல்பட்டு மாவட்ட கோர்ட் தீர்ப்பு.

மதராஸ் ஐகோர்ட்டில் அப்பீல்:
செங்கல்பட்டு கோர்ட் தவறுதலான முடிவை எடுத்துள்ளதாகவும், "குழந்தைகளுக்கு கார்டியனை நியமித்துக் கொடுத்துவிட்ட பின்னர், தந்தைக்கு என்ன உரிமை இருக்கிறது அதை திரும்பப் பெற", என்ற கேள்வியை வைக்கிறது. மற்றும் The Guardians and Wards Act 1890ன்படி செங்கல்பட்டு கோர்ட் இதில் தலையிட உரிமையில்லை என்றும் சொல்கின்றனர். ஏன் என்றால், அந்தச் சட்டப்படி, செங்கல்பட்டு ஏரியாவுக்குள் இருக்கும் மைனர் குழந்தைக்கு மட்டுமே அந்த கோர்ட் உத்திரவுகள் பிறப்பிக்க முடியும். இங்கிலாந்தில் வாழும் குழந்தைகளுக்கு எப்படி செங்கல்பட்டு கோர்ட் உத்தரவிட அதிகாரம் (Jurisdiction) உண்டு என்றும் கேள்வி எழுப்பினர்.
ஆனால், பெற்ற தகப்பனுக்கு அந்த உரிமை எப்போதும் உள்ளது என வாதாடினார்.  வழக்கில் வேறு பல சட்ட சிக்கல்களும் இருந்ததால், Habeas Corpus மனுமூலம் "குழந்தைகளை இங்கிலாந்திலிருந்து இந்தியா கொண்டு வந்து, இங்குள்ள கோர்ட் உத்தரவுப்படி தந்தையிடம் ஒப்படைக்கவும்" என் ஐகோர்ட் கூறியது.
மறுபடியும் ஒரு குழப்பம்:
ஒருவேளை, அந்தக் குழந்தைகள் வர மறுத்தால்? ஒருவேளை அவர்கள் இங்கிலாந்து படிப்பை உதறிவிட்டு வர தயாராய் இருந்தால்?
இங்கு குழந்தைகளின் நன்மையை மட்டுமே கோர்ட் கருத்தில் கொள்ள வேண்டும் (இந்த வயதில் அவர்களுக்கு என்ன வேண்டும் என்ற நன்மையை) என்றும், குழந்தைகளின் தனிப்பட்ட விருப்பத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், ஒரு முடிவுக்கு வருகின்றனர்.
  1. மூத்த பையன் இன்னும் சில மாதங்களில் மேஜர் வயதை அடைந்துவிடுவான். (ஜே.கிருஷ்ணமூர்த்தி).
  1. As per sec.3 of The Indian Majority Act 1875 and Sec.52 of the Guardians and Wards Act 1890 - மைனருக்கு கோர்ட் கார்டியன் நியமித்தால், அந்த மைனர் 18 வயது முடிந்தவுடன் மேஜர் ஆகிவிட முடியாது. அவனின் 21வயதுவரை காத்திருக்க வேண்டும். எனவே மாவட்ட கோர்ட் இதில் தலையிடாமல், ஐகோர்ட்டு வழக்கை அனுப்பி அங்கு உள்ள சிறப்பு அதிகாரத்தின் மூலம் பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம்.
  2. பிரைவி கவுன்சில் போர்டில் உள்ள லார்டுகள் (நீதிபதிகள்) அந்த மைனர் குழந்தைகளை நேரில் அழைத்து பேசியதில், 'அந்தச் சிறுவர்கள் படிப்பை பாதியில்விட்டு இந்தியா திரும்ப விரும்பவில்லை' என்று தெரிகிறது.
  3. இங்கிலாந்தில் வசிக்கும் குழந்தைகளை, இங்குள்ள அரசர் கோர்ட் (His Majesty's High Court of Justice in England) உத்தரவு இல்லாமல் இந்தியாவுக்கு அழைத்துச் சொல்ல முடியாது. அதற்கு வேண்டுமானால் தந்தை மனுச் செய்யலாம்.  
இதுதான் பிரைவி கவுன்சில் தீர்ப்பு.

இந்த தீர்ப்புக்குப்பின், தந்தை என்ன செய்தார் என தெரியவில்லை. ஏழ்மையிலும் பாசம் பெரிதுதான் போல!!!

.

No comments:

Post a Comment