Saturday, August 16, 2014

நினைவுகள்-34

தைத்தியரும், தானவரும்:
வாழ்கைக்கையில் சிலர் பிறப்பிலிருந்தே எல்லா வகையான சந்தோஷங்களையும் அடைந்து அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அது அவர்களின்  இறப்புவரை குறையாமலும் உள்ளது. வேறுசிலர் இதற்கு நேர்மாறாக பிறந்ததிலிருந்தே துன்பத்தையும், துயரத்தையும் அனுபவித்து அலைகழிந்து கடைசி மூச்சுவரை சந்தோஷத்தை பார்க்காமல் போனவர்கள் ஏராளம்.

இந்த சந்தோஷத்துக்கும், துயரத்துக்கும் அதை அனுபவிப்பவரின் புத்தியோ, அனுபவமோ காரணமாக இருக்க முடியாது. ஏனென்றால், யாரும் பிறந்தவுடன் புத்தியுடனும் அனுபவத்துடன் பிறந்து விடுவதில்லை.

அப்படியென்றால், அதை யார் கொண்டுவந்து கொடுத்தது? வரும்போது ஆன்மா கொண்டு வந்திருக்குமா? ஆன்மாவின் கட்டளைப்படிதான் இந்த வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறதா? நமது செயல் என்று இதில் ஏதுவுமே இல்லையா?  இல்லையில்லை; இந்த உலக அனுபவத்தை, இந்த உலக அறிவைக் கொண்டுதான், நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆன்மா கொண்டுவந்தது என்பதெல்லாம் நம்பமுடியாத கட்டுக்கதை. இயற்கையாகவே, வசதியான பெற்றோருக்குப் பிறந்த பிள்ளை வசதியாய் வாழ்கின்றன. கஷ்டப்படும் குடும்பத்தில் பிறந்த பிள்ளை கஷ்டத்துடன் வாழ்கிறது. ஆனால், அவர்கள் வாழ்ந்து வரும்போது, வசதியாக வாழ்ந்தவன், தன் திறமையின்மையால், ஏழ்மைக்குத் தள்ளப் படுகிறான். கஷ்டத்தில் வாழ்ந்தவனோ, தன் திறமையால் கொடிகட்டிப் பறக்கிறான். இதை எந்தக் கணக்கில் வைத்துக் கொள்வது?  எனவே வாழ்வின் வசதிக்கும், சிரமத்துக்கும் ஆன்மா காரணமில்லை என்பது ஒருசாரரின்  எண்ணம். இல்லையில்லை, ஆன்மாவின் ஆணைப்படிதான் நமது வாழ்க்கை என்கின்றனர் மற்றோரு சாரர்.

குதிரைக்கு முன்னால் 'கேரட்' கட்டி இருந்தால், அதை தின்பதற்காக அதை முயற்சித்துக் கொண்டே வெகுதூரம் ஓடி வந்திருக்கும் அந்தக் குதிரை. அந்தக் குதிரைக்கே தெரியாது, தான் இவ்வளவு தூரம் ஓடி வந்திருக்கிறோம் என்று!

மனித வாழ்வும் இதைப் போன்றதே! ஆசை என்னும் கேரட்டை, இறைவன் நம் முன்னே கட்டிவிட்டிருக்கிறான். அதைப் பார்த்துக் கொண்டே வாழ்வின் வெகுதூரம் வந்துவிட்டோம். நாம் கடந்துவந்த வாழ்க்கை நாம் வாழ்ந்த வாழ்க்கையாக இருக்கவே முடியாது. இறைவன் காட்டி விட்ட பாதை அவ்வளவே! இறைவனின் பார்வையில் ஏன் இவ்வளவு ஏற்ற இறக்கம்! இதை கண்டுபிடிக்க முடியாமல்தான் 'அவனின் விளையாட்டு' என்று பொதுவாகச் சொல்லி இருக்கிறார்கள் நம் முன்னோர்.

இறைவனின் இந்தச் செயல்களை செய்வதற்காகவே படைப்பட்டவர்களே அசுரர்  (அரக்கர்) என்னும் மற்றொரு மானிட வர்க்கம்.

அசுரர்கள் (அரக்கர்கள் அல்லது ராக்ஷசர்கள்). இவர்கள் தேவர்கள், மனிதர்கள் இவர்களின் எதிரிகள்.  அசுரர்கள் இரண்டு வகையில் உள்ளனர்.  1. தைத்தியர். 2. தானவர். தைத்தியர் தேவர்களுக்கு தொந்தரவு கொடுப்பதற்காக கடவுளால் படைக்கப் பட்டவர் போல. அதுபோல, தானவர்களை, மனித இனத்துக்கு தொந்தரவு கொடுப்பதற்காக படைத்திருக்கிறார் இறைவன்.

1.தைத்தியர் : திதி என்பவள் , சந்தியாகாலம் என்னும் மாலைப் பொழுதில் காமம் அதிகமாகி கசியபனைப் புணர்ந்து அவன் மூலம் பெற்ற புத்திரர்கள் இரணியாக்ஷன், இரணியகசிபன். சந்தியா காலத்தில் கூடிப் பிறந்த புத்திரர்கள் என்பதால், இவர்கள் இருவரும் ராக்ஷசர்கள் ஆனார்கள்.

இரணியாக்ஷனை விஷ்ணு வாராக அவதாரத்திலும், இரணியகசிபனை விஷ்ணு நரசிங்க அவதாரத்திலும் கொன்றார்.

இந்த திதியின் வயிற்றில் மற்றொரு பெண் பிறந்தாள். அவள் பெயர் சிங்கிகை. இந்த புத்திரியின் வயிற்றில் பிறந்த ராக்ஷசர்கள் எல்லோரையும் 'தைத்தியர்' என்றே அழைப்பர். திதியின் வழிவந்தோர்.

2.மற்றொரு வகை அரக்கர்கள் (ராக்ஷசர்கள்) தானவர்கள் என்று பெயர்: இவர்கள் கசியபனின் புத்திரர்கள். இவர்களில் முக்கியமானோர்: அயோமுகம், ஏகசக்கரன், புலோமன், கபிலன், அந்தகன், அடிதானவன், அரிஷ்டன், தக்ஷசன், துவிமூர்த்தன், சம்பரன், ஹயக்கிரீவன், வபாவசன், சங்குசிரசு, சுவர்ப்பானன், விரூஷப்ரவன், விப்பிரசித்தி, ராகு, கேது, வாதாபி, இல்லவன், நமுசி, காலநாபன், வந்திரயோதி, திரியம்சன், சல்லியன், நபன், நரகன், பலோமன், கசிறுமன், அந்தகன், தூமிரகேது, விரூபாக்ஷன், துர்ச்சயன், வைசுவாநரன், தாபகன்.

நம் வாழ்வில் எத்தனையோ 'தானவர்களை' சந்தித்திருக்கிறோம், ஆனால் நமக்குத்தான் தெரியாது அவர்கள் "தானவர்கள்" தான் என்று.

.

No comments:

Post a Comment