Thursday, December 29, 2016

கந்தரலங்காரம்-17

கந்தரலங்காரம்-17

வேத ஆகம சித்ர வேலாயுதன் வெட்சி பூத்தண்டைப்
பாதார விந்தம் அரணாக அல்லும் பகலும் இல்லாச்
சூதானது அற்ற வெளிக்கே ஒளித்துச் சும்மா இருக்கப்
போதாய் இனி மனமே தெரியாதொரு பூதர்க்குமே!

(வேதமும் ஆகமமும் போல, (சித்திர  = அற்புத) அற்புதமான வேலாயுதத்தை உடைய முருகக் கடவுளது, வெட்சிப் பூவை ஒத்த, தண்டை அணிந்த பாதங்களை அரண் என்னும் காப்பாக, இரவும் பகலும் இல்லாததும், (சூதானது அற்ற= மயக்கம் இல்லாதாகிய) மயக்கமில்லாதும் ஆகிய வெளி என்னும் சிதாகாயத்திலே கலந்து சுகமாக வாழ்வதற்கு இனி என் மனமே போகவாயாக! ஒரு சீவனுக்கு அறியாமலேயே! (மனமே! இனி எந்த வினைகளையும் செய்யாமல், ஞான யோகத்துக்கு செல்வாயாக!)

(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-17)

**

No comments:

Post a Comment