Sunday, May 1, 2016

மூன்றும் ஒன்றாய் முடிய வேண்டும்!

மூன்றும் ஒன்றாய் முடிய வேண்டும்!

"பேசா எழுத்துடன் பேசும் எழுத்துறின் ஆசான பரநந்தி ஆம்". (ஔவை).

பேசாத எழுத்து அறிவு;
பேசும் எழுத்து சிவம்;
இவை இரண்டும் சேர்ந்தால் குருவும், கடஷனாமாகும்;

பேசாத எழுத்து "ம்" இதை வாய்திறந்து உச்சரிப்பதில்லை;

பேசும் எழுத்து "ஓ" இதை வாய் திறந்துதான் சொல்ல முடியும்.

ஓம் என அமைந்தால் ஆசானாகிய பரநந்தி எனப்படும் மூலப்பரம்பொருள் ஆகும்;

அதாவது, ஓம் என்னும் மூலமந்திரமாகிய பிரணவத்தை முறைப்படி ஓதினால் (உச்சரித்தால்) அவ்வாறு உச்சரிப்பவரின் மனம் ஒடுங்கும்;

மனம் ஒடுங்கப் புலன் ஒடுங்கும்;
புலன் ஒடுங்கச் செயல் ஒடுங்கும்;
செயல் ஒடுங்கவே, இடைகலை, பிங்கலை, இடைநாடியாகிய சுழுமுனை ஆகிய மூன்றும் ஒன்றாகி நாடி சுத்தி ஏற்படும்.

இதைத்தான் "மூன்றும் ஒன்றாய் முடிய வேண்டும்" என்று யோகர்சுவாமி பாடினார்;

நாடி சுத்தி ஏற்பட்டால், மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தியானது, ஆதாரங்களை நோக்கிப் பாயும்; பாய்ந்து, பிரமாந்திரத்திற்கு மேலே பன்னிரண்டு விரற்கடை தூரத்தில் விளங்கும் துவாத சாந்தப் பெருவெளியாகிய தில்லை வெளியிலே நடமிடும் பரம்பொருளாகிய பரநந்தியைக் கூடி, ஆன்மா அத்துவிதமாகிப் பரநந்தி ஆகும்.

நன்றி: செல்லத்தம்பி சீறீக்கந்தராசா அவர்களின் "அவ்வையார் காட்டிய வழி" நூலிலிருந்து.


**

No comments:

Post a Comment