Sunday, February 7, 2016

திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம்

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடிய தேவாரம்:

பிடியதன் உரு உமை கொள மிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்
கடி கணபதி வர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே!

பெண் யானை உருவத்தை உமாதேவி கொள்ள;
கரிய ஆண் யானை வடிவத்தை சிவபெருமான் கொள்ள;
தன் திருபாதங்களை வழிபடும் அடியார்களின் இடரை நீங்குகின்ற கணபதியாகி விநாயக் கடவுள் வாழ்கிற இறையான சிவபெருமானே!

(திருவலிவலத்தில் வாழும் சிவபெருமானைத் துதித்து திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடிய தேவாரப் பாடல்)
பிடியத னுருவுமை கொளமிகு கரியது 
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர் 
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை 
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே! 
**



No comments:

Post a Comment