Saturday, March 29, 2014

சைவ மதம்

சைவ மதம்:

சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டுள்ள ஒரு மதம். இந்த மதத்தை சேர்ந்தோரை சைவர் என்பர்.

பதி, பசு, பாசம், என்னும் மூன்றும் நிலையான (நித்திய) பொருள்கள்.

ஆன்மாக்கள் பசுக்கள். இவைகள் அவை செய்யும் புண்ணியத்தினால் ஞானம் பெற்று சிவனுடன் இரண்டற கலந்து முக்தி அடையும். பற்றை விடுவதே முக்திக்கு வழி.

சிவன், 'சிருஷ்டி, திதி, சங்காரம், திரோபவம், அநுகிரகம்' என்னும்  பஞ்சகிருத்தியங்களையும், ஆன்மாக்களையும் ஈடேற்றுபவர் என்றும் சொல்கிறது இந்த மதம்.


No comments:

Post a Comment