Friday, March 28, 2014

வாக்குண்டாம்

வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
 நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார் வார் தமக்கு.

வாக்கு உண்டாம்.
நல்ல மனம் உண்டாம்.
மாமலராள் = தாமரையில் இருக்கும் திருமகள்.
நோக்கு (நல்ல அருள் பார்வை) உண்டாம் .
மேனி (உடல்) நுடங்காது (மெலியாது).
துப்பார் திருமேனி = பவளம் போன்ற சிவந்த உடல்.
தும்பிக்கையான் = விநாயகர்
பாதம் தப்பாமல் (தவறாது) சார்வார் தமக்கு(வணங்குபவருக்கு).

No comments:

Post a Comment