Sunday, March 2, 2014

பாண்டிதேசம்:

பாண்டிதேசம்:
சோழ தேசத்துக்கு தென்மேற்கிலே கன்னியாகுமரி வரை உள்ள தேசம். இதற்கு ராஜதானி மதுரை. பாண்டியர் அரசு செய்தமையின் இஃது இப்பெயர் பெற்றது. இதுவே தமிழ் பிறந்த நாடு. இது மிக்க பழமையும் பெருங்கீர்த்தியும் அநேக சரித்திரங்களும், புண்ணிய க்ஷேத்திரங்களும், நதிகளும் மலைகளும் உடைய நாடு. முச்சங்கம் இருந்ததும், அநேக புலவர்களைத் தந்ததும் இந்நாடே.
பாண்டியனின் பூர்வீகம்
துஷ்யந்தன் தம்பி திஷ்யந்தன்.
திஷ்யந்தனின் பேரன் ஆசிரதன்.
ஆசிரதன் புத்திரன் பாண்டியன்.
இவனே பாண்டி நாட்டின் ஸ்தாபகன்.
இவனது வம்சத்தில் வந்தவர்கள் பல்லாயிரம் பாண்டியர்.

பாண்டியன்:

துஷ்யந்தன் தம்பியாகிய திஷ்யந்தனுக்கு பௌத்திரனாகிய ஆசிரதன் புத்திரன். இவனே பாண்டி தேசத்தின் ஸ்தாபகன். இவன் வம்சத்தில் வந்தோர் பல்லாயிரம் பாண்டியர். இவனே குலசேகர பாண்டியன் போலும். இவன் தென்மதுரையை (தற்போதுள்ள மதுரை அல்ல, கடல்கொண்ட தென்மதுரை) நகராக்கி நான்கு வருணத்து ஜனங்களையும் ஸ்தாபனம் செய்து காசியிலிருந்து ஆதி-சைவர்களையும் கோயிற் பூசைக்காகக் கொணர்ந்து இருத்தி, அகஸ்தியர் அனுமதிப்படி அரசு புரிந்தவன். இவன் மகன் மலையத்துவச பாண்டியன். மலயமலையை தனது கொடியில் தீட்டிக் கொண்டமையால் மலயத்துவசன் என்னும் பெயர் அவனுக்கு உண்டாயிற்று. இவன் அகஸ்தியரை உசாவியே எக்கருமமும் செய்பவன் என்பது அக்கொடியின் குறிப்புப் பொருள். இப்பாண்டியன் காலம் துவாபர காலம்.

No comments:

Post a Comment