Thursday, December 19, 2013

பூமியைத் தாங்கும் ஆதிசேஷன்!

ஆதிசேஷன்: இவனே பூமியை தாங்குபவன்!
கந்துருவை மூத்த மகன் ஆதிசேஷன்: கசியப பிரஜாபதிக்கு கந்துருவையிடத்தில் பிறந்த மூத்த புத்திரன். இவன் தனது தாய் கந்துருவை என்பவள் அவளின் சக்களத்தியான விநதைக்குச் செய்த அக்கிரமத்தை சகிக்காதவனாக திருகோகர்ணம், கந்தமாதனம், முதலிய திவ்விய தேசங்களுக்குச் சென்று மகா தவங்களைச் செய்தான். பிரமா அவன் தவத்தை மெச்சி பூபாரத்தை தாங்கும் பலத்தை அவனுக்கு அநுகிரகித்தார். பின்னர், ஈசுவர பிரசாதத்தால் விஷ்ணுவுக்கு ஆயிரம் பணா முடியுடைய சர்ப்பசயனமும் சர்ப்பங்களுக்கு ராஜாவும் ஆகினான். இவன் பிருகு முனிவரால் சபிக்கப்பட்டு பலராம அவதாரம் பெற்றான்.


விநதை மகன் அநூரு என்கிற அருணன்: இவன் கசியப பிரசாபதிக்கு விநதையிடத்து பிறந்த புத்திரன். கருடன் இவன் தம்பி. இவனைப் பற்றிய ஒரு கதையும் உண்டு. விநதை, தனது சக்களத்தி கந்துருவைக்கு முதலிலேயே புத்திரன் பிறந்துவிட்டான் (அவன் தான் ஆதிசேஷன்) என கோபம் கொண்டு, தனது அண்டம் பரிபக்குவமடைய நாளாயிற்றே என்று அந்த அண்டத்தை (வளராத கருவை) உடைத்துவிட, அதன் காரணமாக அநூரு தொடை முதலிய கீழ் அங்கங்கள் இல்லாமல் பிறந்தான். தனது அங்ககீனத்துக்கு தனது தாயே காரணம் எனத் தெரிந்து, கத்தருவைக்கு (அவளின் சக்களத்திக்கு) அடிமை ஆகும்படி சபித்து விட்டு, சூரியனிடத்தில் சாரதியானான். 

No comments:

Post a Comment