Friday, December 20, 2013

கர்ப்பத்தின் கருவையும் கொல்க!

கர்ப்பத்தின் கருவையும் கொல்க!
உத்தரை: என்பவள் விராடனின் மகள். உத்தரனின் தங்கை (பாண்டவர்களின் அஞ்ஞாத வாசத்தின் போது, பசுநிரைகளை கவர்ந்த கௌரவர்களுடன் அர்ச்சுனன் தயவில் சண்டையிட்டு மீண்டவன் இந்த உத்தரன்).
இந்த உத்தரை  என்பவள் அபிமன்யூவின் பாரி. இவளின் மகன் தான் ‘பரிக்ஷித்து’. 
அசுவத்தாமன் கோபம் கொண்டு, 'பாண்டவ வம்சம் எங்கிருந்தாலும் கொல்க' என்று விடுத்த பாணம், அபிமன்யூவின் மனைவி உத்திரை அப்போது கர்ப்பமாக இருந்தாள். அசுவத்தாமன் விடுத்த பாணமானது பாண்டவ வம்ச அர்ச்சுனன் மகனான அபிமன்யூவின் மனைவியான இந்த உத்திரையின் கர்ப்பத்திலிருந்த கருவையும் தேடியதாம் (அதாவது உத்திரை வயிற்றில் கரு ஏதும் உருவாகி உள்ளதா எனவும் பரீக்ஷித்து பார்த்ததாம்).

ஆனால் ஸ்ரீகிருஷ்ணனின் தயவால், அந்த பாணத்தால் அந்த கருவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவேதான் அந்த குழந்தைக்கு பரீக்ஷித்து என பெயரும் ஏற்பட்டதாம். 

No comments:

Post a Comment