Tuesday, December 18, 2018

தேர்தல் வழக்கு


தேர்தல் வழக்கு
ஆந்திராவில் 1957-ல் தேர்தல் நடக்கிறது. அப்போது பேகம் பஜார் தொகுதிக்கு தேர்தல். மொத்தம் ஏழு பேர் தேர்தலில் போட்டியிட மனு அளிக்கிறார்கள். அதில் பத்ரிவிசால் பில்லி என்பவரும் ஒருவர். அவருடைய மனு நிராகரிக்கப் படுகிறது. அவர்களின் மனுவை தேர்தல் அதிகாரி பரிசீலிக்கும்போது, அவர்களின் ஏஜெண்டாக அவரவரின் வக்கீல்கள் உடன் இருக்கின்றனர்.
பொதுவாக தேர்தலில் நிற்பவர், அரசாங்கத்தில் எந்த வேலையிலும் இருக்க கூடாது. அரசாங்கத்தில் எந்த கான்டிராக்ட்டு வேலையும் அப்போது செய்து கொண்டு இருக்க கூடாது என்பதும் தேர்தல் விதிமுறை.
இங்கு, பத்ரிவிசால் பில்லி என்பவர், அரசு நிறுவனமான ஹிண்ட் டொபாக்கோ கம்பெனி என்ற நிறுவனத்தில் ஏஜெண்டாக இருக்கிறார் என்றும், அந்த நிறுவனம் அரசு நிறுவனத்துடன் தொழில் உடன்பாட்டில் உள்ளது என்றும் எதிர் பார்ட்டி ஆட்சேபம் தெரிவிக்கிறார். Section 7(d) of the Representation of the People Act ன்படி அவர் தேர்தலில் நிற்க தகுதி அற்றவர் என்று கூறுகின்றனர்.
தேர்தல் அதிகாரிக்கு ஒரு குழப்பம். இந்த நிறுவனம் மத்திய அரசிடம் கான்ட்ராக்ட்டில் உள்ளதா அல்லது மாநில அரசுடன் கான்டிராக்ட்டில் உள்ளதா என்று. அதை சரிபார்ப்பதற்காக விசாரனையை மறுநாளைக்கு ஒத்தி வைக்கிறார். அதற்குறிய கான்டிராக்ட் பத்திரங்களுடன் வரும்படி சொல்கிறார். மறுநாள் வேறு சில ஆட்சேபனைகளையும் எதிர்பார்ட்டி எடுக்கிறது. இதற்கிடையில் மற்ற போட்டியாளர்கள் மனுக்களை வாபஸ் பெற்று விட்டனர். பத்ரி விசால் பில்லி மனு தள்ளுபடி ஆகிறது. ஆக எதிர்பார்ட்டி நரசிங் ராவ் மட்டுமே போட்டியில் உள்ளார். எனவே அவர் ஏகமனதாக தேர்ந்து எடுக்கப் படுவதாக தேர்தல் அதிகாரி அறிவிக்கிறார். இது நடந்தது 1957-ல்.
பத்ரி விசால் பில்லி, தேர்தல் அதிகாரியின் நடவடிக்கை ஒருதலைப் பட்சமானது என்றும், அவர் வேண்டுமென்றே மறுநாள் விசாரனையை வைத்து விட்டார். அது சட்டப்படி தவறு என்றும் வாதம் செய்கிறார். எதிர்பார்ட்டியோ, இவர் அரசு சம்மந்தப்பட்ட நிறுவனத்தில் ஏஜெண்டாக இருப்பதால்தான் தேர்தல் அதிகாரி அவரின் மனுவை தள்ளுபடி செய்தார். எனவே அவரின் நடவடிக்கை சரியே என்று எதிர்வாதம் செய்தார். தேர்தல் நீதிமன்றம் பத்ரி விசால் பில்லியின் வழக்கை தள்ளுபடி செய்து விட்டது.
அதை எதிர்த்து ஆந்திரா ஐகோர்ட்டில் அப்பீல் போடுகிறார். அதில், தேர்தல் அதிகாரி மறுநாளைக்கு விசாரனையை ஒத்தி வைத்தது சட்டப்படி தவறு என்று வாதம் செய்கிறார் அவரின் வக்கீல் எம்.கே.நம்பியார்.
The Representation of the People Act, Section 36ன் படி தேர்தல் அதிகாரி, எந்தவித ஆட்சேபனைகளையும் அன்றே விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும், தகுதி இல்லாதவர் என்றால் அப்போது அவரின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கூறுவதாக வாதம் செய்தார்.
கலவரம் நடந்தால் ஒழிய, மற்ற காரணங்களுக்காக விசாரனையை தள்ளி வைக்க முடியாது என்றும் கூறினார்.
மேலும், சரியான காரணம் இல்லாமல், ஒரு மனுவைத் தள்ளுபடி செய்தால், தேர்தல் முடிவில் வெற்றி பெற்றவரின் வெற்றி செல்லாது என்றும் சட்டம் சொல்வதாக கூறினார்.
ஆந்திரா ஐகோர்ட் இந்த வாதங்களை ஏற்கவில்லை. அவர் அரசு நிறுவனத்துடன் ஏஜெண்ட் வேலையில் இருந்தார் என்பதால், அவரை நிராகரித்த தேர்தல் அதிகாரியின் முடிவு சரியே என்று தீர்ப்பு கூறியது.
இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பு எடுத்துக் காட்டப் பட்டுள்ளது. G.Raja Nainar v. NT Velusamy Thevar and others, (1958) 1 MLJ 124 என்ற வழக்கு:
1957-ல் சென்னை மாகாண தேர்தல் நடக்கிறது. ஆலங்குளம் தொகுதிக்கு வேட்பாளர்கள் போட்டி. ஆறு பேர் போட்டி. வேலுச்சாமி தேவர், ராஜா நயினார், செல்லபாண்டியன், அம்பலவான பிள்ளை, அருணாசலம். மற்றும் ஒருவர்.
அருணாசல நாடார் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். அப்போது அவர் திருச்செந்தூர் தேசிய பயிற்சி பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்க்கிறார்.  அந்த பள்ளி, அரசின் பண உதவியுடன் நடக்கும் பள்ளி என்றும், எனவே அவரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ஆட்சேபனை செய்கிறார்கள். மனுவை பரிசீலனை செய்யும் சமயம், அருணாசலம் அங்கு வரவில்லை. ஏஜெண்டும் அனுப்பவில்லை. எனவே அவர் மனுவை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்கிறார்.
தேர்தலில் வேலுச்சாமி தேவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கிறார்கள்.
அருணாசலம், அதை எதிர்த்து தேர்தல் கோர்ட்டுக்குப் போகிறார். தேர்தல் கோர்ட் அவரின் கோரிக்கையை தள்ளுபடி செய்கிறது. அதை எதிர்த்து ஐகோர்ட் ரிட் வழக்காகப் போகிறார்.  அங்கும் வழக்கு நிற்கவில்லை.
**

No comments:

Post a Comment