Sunday, December 23, 2018

ஒரே நேரத்தில் இரண்டு ஈபி



ஒரே நேரத்தில் இரண்டு ஈபி மனுக்கள் போட முடியுமா?
Sait Chunilal Moolchand என்பவருக்கு வியாபாரக் கணக்கு வழக்குகளில் வர வேண்டிய பாக்கி உள்ளதாக, Bethia Venkanna and Chundrapu Lovaraju என்ற இரண்டு பிரதிவாதிகள் மீது ஓஎஸ் வழக்கை 1934-ல் காகிநாடா சப் கோர்ட்டில் போட்டு டிகிரி வாங்கி விட்டார். மொத்த டிகிரி ரூ.19,000/-க்கு. அதில் முதல் பிரதிவாதி பெத்தையா வெங்கண்ணா Madras Act IV of 1938 (Madras Agriculturists Relief Act 1938) ன் படி வட்டிப் பணத்தை தள்ளுபடி பெற்று விட்டார். எனவே 1-வது பிரதிவாதி மீது ரூ.15,000/-க்கு (வட்டி இல்லாமல்) மட்டுமே டிகிரி ஆனது. 2-ம் பிரதிவாதி மீது ரூ.19,000/-க்கு (மொத்த அசல், வட்டிக்கு) டிகிரி ஆகிறது. (அதாவது மொத்த டிகிரியான ரூ.19,000-த்தில், ரூ.15,000 என்ற அசல் தொகையை இரண்டு பேர் சேர்ந்தும், ரூ.4,000 ஆன வட்டியை 1-ம் பிரதிவாதி தனியே கொடுக்க வேண்டும் என்றும் கீழ்கோர்ட் தீர்ப்பு).
1956ல் சேட் இந்த டிகிரியை எக்சிகியூட் செய்கிறார். 1-ம் பிரதிவாதி லோவராஜூ மீது ஈபி போட்டு, அவர் சொத்தை அட்டாச் செய்து ஏலத்துக்கு கொண்டு வருகிறார்.
அநத ஈபி நிலுவையில் இருக்கும் போதே, சேட், மற்றொரு ஈபி போட்டு, 2-ம் பிரதிவாதி பெத்தையா வெங்கண்ணா மீது ரூ.19,000/- ஆன முழு டிகிரி பணத்தையும் கேட்டு அவரின் கார்கோ பைபர் பேல்களை (ஏற்றுமதிக்கு வைத்திருந்த சரக்கை) ஜப்தி செய்து விட்டார்.
எனவே 2-ம் பிரதிவாதி பெத்தையா வெங்கண்ணா ஈபி கோர்ட்டில் ஒரு மனுவைப் போடுகிறார். அதில், மொத்த டிகிரியே ரூ.19,000 ம்தான். அதில் 1-ம் பிரதிவாதி மீது ஏற்கனவே ரூ.15,000 க்கு ஈபி போட்டு அவர் சொத்தை அட்டாச் செய்து ஏலத்துக்கு கொண்டு வந்து நிலுவையில் உள்ளது. எனவே மீதி உள்ள ரூ.4,000 க்கு மட்டுமே என் மீது ஈபி போட முடியும் என்று ஆட்சேபனை தெரிவித்து மனு போட்டார். அதை ஈபி கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.
அதை எதிர்த்து, 2-ம் பிரதிவாதி, ஐகோர்ட்டுக்கு அப்பீல் போகிறார். அங்கு ஒரு சிறு விஷயம் மட்டுமே அலசப் படுகிறது. “ஒரே நேரத்தில், ஒரு டிகிரியில் உள்ள இரண்டு பிரதிவாதிகள் மீது, வேறு வேறு ஈபி போட முடியுமா? என்பதே கேள்வி
அதைப்பற்றி இதுவரை ஒரு வழக்குத் தீர்ப்பும் (1957 வரை) முடிவாகவில்லை என்று ஐகோர்ட் சொல்கிறது. எனவே இருக்கும் தீர்ப்புகளை வைத்து ஒரு முடிவுக்கு வரலாம் என்று ஐகோர்ட் நினைக்கிறது.
ஏற்கனவே முதலில் 1-வது பிரதிவாதி மீது போட்ட ஈபி-ல் ரூ.15,000 கேட்டு விட்டதால், மீதி இருக்கும் ரூ.4,000 க்கு மட்டுமே 2-ம் பிரதிவாதி மீது கேட்க முடியும் என்றும், மொத்த டிகிரி தொகையான ரூ.19,000 க்கும் கேட்க முடியாது என்பது 2-ம் பிரதிவாதியின் வாதம்.
பொதுவாக, டிகிரி வாங்கியவர், ஒரே நேரத்தில் இரண்டு பிரதிவாதிகள் மீது வேறு வேறு ஈபி போட முடியும். அதற்காக கோர்ட்டின் முன் அனுமதியும் தேவையில்லை.
சிபிசி ஆர்டர் 21 ரூல் 11(2)(சி)ல் டிகிரி வாங்கியவர் ஒரு தகவலைச் சொல்ல வேண்டும். அதில், “இதுவரை வசூல் செய்த பணம் எவ்வளவு” என்று குறிப்பிட வேண்டும். ஏற்கனவே ஈபி நிலுவையில் இருந்தால், அது வசூல் செய்த பணம் என்று எடுத்துக் கொள்ள முடியாது.
சிபிசி-ல் ஒரே நேரத்தில் இரண்டு ஈபி-கள் போடலாம். சிபிசி ஆர்டர் 21 ரூல் 30-ல் இதைப் பற்றி சொல்லி உள்ளது. ஒரே நேரத்தில் ஒருவர் மீது, அவரை அரஸ்ட் செய்யவும், அவரின் சொத்துக்களை அட்டாச் செய்யவும் தனித் தனி ஈபி மனுக்களைப் போடலாம் தவறில்லை என்று சொல்லி உள்ளது.
Om Prakash v. Tahera Begam, AIR 1955 All 382 என்ற வழக்கில், சிபிசி-ல் தடை இல்லை என்றால், ஒரே நேரத்தில் பல ஈபி-களை ஒருவர் மீதே போடலாம் என்று அந்த தீர்ப்பில் சொல்லப் பட்டுள்ளது.
It is only quite common that not only in suits but also in execution petitions all possible lines of fact and law are explored by parties concerned to gain success for themselves at the cost of the opposite party.
Consequently, if the law were to force a decree-holder to treat an execution petition which he has filed for a certain amount as equivalent to having realised the amount, it would be like forcing him to count the chickens before they are hatched.
எனவே 2-ம் பிரதிவாதியான இந்த அப்பீல் வழக்கைப் போட்டவர், வசூல் ஆகாத பணத்தை, வசூல் ஆன கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைத்து கேட்பதை ஏற்க முடியாது. அவரின் அப்பீல் தள்ளுபடி செய்யப்படுகிறது.
**


No comments:

Post a Comment