Tuesday, December 18, 2018

நவாப் பாகப் பிரிவினை வழக்கு


நவாப் பாகப் பிரிவினை வழக்கு
நவாப் நிஜாம் உத் தௌலா என்பவர் ஆந்திராவில் உள்ள பந்தர் பகுதியில் நவாப் ஆக இருந்தார். இவருக்கு ஏராளமான சொத்துக்கள் இருந்தன. இவர் 1898-ல் இறந்து விட்டார். இவருக்கு பல மனைவிகள் குழந்தைகள் இருந்தனர். அதில் ஒரு மகன், நவாப்பின் சொத்துக்களில் பாகம் கேட்டு 1906-ல் வழக்குப் போட்டார்.  குன்டூர் சப் கோர்ட் அவருக்கு சாதமாக பைனல் டிகிரி கொடுத்தது. அந்த வழக்கு 1911-ல் முடிவுக்கு வந்தது. அதில் ஒரு பிரதிவாதியான உசேன் அலி கான் என்ற மகனுக்கு மட்டும் செருவு கிராமத்தில் 124 ஏக்கர் நிலங்கள் அவரின் பாகமாக வந்தன.
அந்த பாக வழக்கில், நவாப்பின் பல மனைவிகளை பார்ட்டிகளாகச் சேர்த்து இருந்தனர். அதில் ஒருவர் பெயர் சாகத் பேகம் என்பவர். ஆனாலும் அவர் முறைப்படி திருமணம் செய்த மனைவி இல்லை என்று கோர்ட்டில் வாதம் செய்தார்கள். அவர் நவாப்புக்கு மனைவியாக இருந்தார் என்பது உண்மைதான். ஆனால் அந்த திருமணம் முட்டா முறைப்படியான உறவு என்றார்கள். முட்டா முறை என்பது தற்காலிமாக திருமணம் செய்து ஒரு குறிப்பிட்ட காலம் வரை வாழ்வது. இது இஸ்லாமிய முறையில் நடந்த திருமணம் அல்ல. (இந்துக்களில் இந்த மாதிரியான முறையை வைப்பாட்டி என்று சொல்வார்கள்). எனவே சாகத் பேகத்தின் திருமணம் முட்டா முறைப்படி என்பதால், அவர் சட்டபூர்வ மனைவி இல்லை என்று கோர்ட் சொல்லி விட்டது. அவருக்கு பாகமும் ஒதுக்கவில்லை.
சாகத் பேகம் இதை எதிர்த்து மசூலிபட்டணம் சப்-கோர்ட்டில் 1914-ல் வழக்குப் போடுகிறார்.  “தான், முறைப்படி திருமணம் ஆன மனைவிதான்” என்றும், கோர்ட்டில் பொய்யான தகவலைச் சொல்லி, ஏமாற்றி டிகிரி வாங்கி விட்டார்கள் என்றும், அவரின் வழக்கில் சொல்கிறார். எனவே நவாப்பின் சொத்தில் முஸ்லீம் சட்ட முறைப்படி இவருக்கு 1/8 பங்கு ஒதுக்கித்தர வேண்டும் என்றும் கேட்கிறார். அவருக்கும் நவாப்புக்கும் பிறந்த ஒரு பெண் இருந்தாள் என்றும் இப்போது அவள் இறந்து விட்டால் என்றும், அவளுக்கு குழந்தைகள் உள்ளன என்றும், ஆக மொத்தம் நாவப் சொத்தில் எல்லோருக்குமாகச் சேர்த்து 103/768 பங்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்கிறார்.
சாகத் பேகம், வழக்கு கோர்ட்டில் நடந்து கொண்டிருந்த காலத்தில் இறந்து விட்டார். அவரின் மகன் சுலைமான் அலி கான் என்பவர் அந்த வழக்கைத் தொடர்ந்து நடத்தி வந்தார். அவரும், வழக்கு நடந்து கொண்டிருக்கும் காலத்தில் இறந்து விடுகிறார். அவரின் மகன்கள் வாரிசுகளாக தொடர்கிறார்கள்.
வழக்கில், சாகத் பேகம் முறைப்படி திருமணம் ஆன மனைவி தான் என்றும், நவாப்பின் மனைவி என்பதால், அவருக்கும் பங்கு உண்டு என்றும், ஏற்கனவே நடந்த பாக வழக்கில் கொடுத்த தீர்ப்பில் இவருக்கு பங்கு கொடுக்கவில்லை என்றும், எனவே அந்த தீர்ப்பு இவரைப் பொருத்தவரை செல்லாது என்றும் இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இறந்த சாகத் பேகத்துக்கு மனைவி என்ற முறையில் 1/8 பாகம் உண்டு என்றும், அவரின் இறந்த மகளுக்கு 7/768 பாகம் உண்டு என்றும், இரண்டையும் கூட்டினால் மொத்தம் 103/768 பாகம் இவர்கள் இருவருக்கும் உண்டு என்றும் தீர்ப்பு.
இதற்கிடையில் முந்தைய பாக வழக்கில், ஒரு பார்ட்டியான உசேன் அலிகானுக்கு 124 ஏக்கர் கிடைத்த நிலத்தில், ஒரு பகுதியான 112 ஏக்கர் நிலத்தை வெளி நபர்களுக்கு அவர் விற்று விட்டார். அப்போது அதன் விலை ரூ.45,000/-. அந்த கிரயப் பத்திரத்தில் இரண்டு பேர்கள் வாங்குபவர் என்று குறிப்பிட்டு இருந்தாலும், அதில் மேலும் ஐந்து பேர்களின் நன்மைக்காக அந்த நிலங்கள் வாங்கப் பட்டது என்று கண்டு உள்ளது.
இதற்கிடையில், சுப்பாராவ் என்பவர், இறந்த நவாப்புக்கும், அவரின் ஒரு மகனான இந்த உசேன் அலிகானுக்கும் புரோ நோட்டு கடன் கொடுத்திருந்தார். அவர்கள் பணத்தைக் கொடுக்காததால், அவர் ஒரு வழக்குப் போட்டு, 1910ல் டிகிரி வாங்கி, அதற்காக, இந்த உசேன் அலிகான் நிலங்களின் மேல் ஜப்தி உத்தரவு பெற்றிருந்தார். அந்த சொத்தைத் தான் வெளி நபர்கள் கிரயம் வாங்கி இருந்தனர்.
இப்போது அந்த நிலங்களை கிரயம் வாங்கியவர்கள், கோர்ட்டில் ஒரு மனுப் போட்டு, ஜப்தி உத்தரவுக்கு முன்னரே நாங்கள் கிரயம் வாங்கி விட்டோம் என்று வாதம் செய்தார்கள். கோர்ட் அதை ஏற்றுக் கொண்டது. ஜப்தி உத்தரவை ரத்து செய்து விட்டது.
இதற்கிடையில், சாகத் பேகத்துக்கும், அவரின் இறந்த மகளுக்கு கிடைத்த பங்கும், அதில் கிடைக்கும் வருமானங்களுக்கும் இந்த விற்பனை செய்த சொத்துக்களை ஜப்தி உத்தரவு பெற்றார்கள். அதிலும், சொத்தை கிரயம் வாங்கியவர்கள் போராடினார்கள். ஆனால் முடியவில்லை. அதை எதிர்த்து மதராஸ் ஐகோர்ட்டுக்கு அப்பீல் வழக்கு வந்தது. (அப்போது ஆந்திராவும் மதராஸ் மாகாண எல்லைக்கு உட்பட்டதே). அதில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது கிரயம் செய்தது Lis pendense சட்டப்படி செல்லாது என்றும், சொத்தை கிரயம் வாங்கியவர்களுக்கு Adverse Possession என்னும் எதிரிடை அனுபவ பாத்தியம் உண்டு என்றும், வாதம் செய்தார்கள். இது எதையும் மதராஸ் ஐகோர்ட் ஏற்றுக் கொள்ளவில்லை. முடிவில் அப்பீல் வழக்கை 1953-ல் தள்ளுபடி செய்து விட்டது.
**







No comments:

Post a Comment