Thursday, November 26, 2015

மொபைல் போன் பேச்சும் இனி ஆதாரமே!

மொபைல் போன் பேச்சும் ஒரு ஆதாரமே!

மொபைல் போன் பேச்சை மொபைலிலேயே டேப் செய்து வைத்திருந்ததை ஒரு சட்ட ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்ற கேள்வி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கில் எழுந்தது; ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், இந்த பிரச்சனை ஏற்பட்டது;

குற்றவாளிக்கும் அந்த சிறுமி வீட்டாருக்கும் ஏற்கனவே சொத்துப் பிரச்சனை இருந்து வந்தது; அதனால், அந்த குற்றவாளிமீது இந்த பொய் வழக்கை போட்டிருப்பதாக குற்றவாளி சொல்கிறார்; அதற்கு ஆதாரமாக மொபைல் போனில் பேசிய பேச்சை டேப் செய்யப்பட்டு அந்த சீடியை ஆதாரமாக கொடுக்கிறார் குற்றவாளி; அதை கீழ்கோர்ட்டுகள் ஏற்றுக் கொள்ளவில்லை.

சுப்ரீம் கோர்ட், இந்த சீடி ஆதாரத்தை ஏற்றுக் கொண்டது; அது உண்மையான ஆட்கள் பேசிய குரல்தானா என்று மட்டும் பரிசோதித்துக் கொண்டால் போதும்; அதை ஒரு ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட் இந்த வாரம் தீர்ப்பளித்துள்ளது;
குற்றவாளி, இந்த டேப்பை கோர்ட்டுக்கு கொடுத்து, அவர் இந்த வழக்கில் நிரபராதி என்று வாதாடுகிறார்;

எனவே இனி டேப் செய்யப்பட்ட சீடிக்களை ஒரு ஆதாரமாக ஏற்றுக் கொள்ளலாம் என முடிவாகி உள்ளது; இதையே கீழ்கோர்ட்டுகளும் பின்பற்றலாம்;



No comments:

Post a Comment