Sunday, May 25, 2014

வேதாங்கம்

வேதாங்கம் (வேதத்துக்கு அங்கம்):
சிக்ஷை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோவிசிதி, ஜோதிடம் ஆகிய ஆறும் வேதத்திற்கு அங்கம்.

1. சிக்ஷை: வேதங்களை இராகத்துடன் ஓத வேண்டும். இல்லை என்றால் உரிய பலன் கிடைக்காது. இதைச் சொல்வது சிக்ஷை.

2. கற்பம்: வேதங்களில் சொல்லி உள்ள செயல்களின் முறைகளை சொல்வது கற்பம்.

3. வியாகரணம்: வேதங்களின் எழுத்து, சொல், பொருள் இவைகளின் இலக்கணங்களைச் சொல்வது வியாகரணம்.

4. நிருத்தம்: வேதப் பொருளை நிச்சயிப்பது நிருத்தம்.

5. சந்தோவிசிதி: வேத மந்திரங்களில் காயத்திரி முதலிய மந்திரங்களின் சந்தங்களின் பெயர்களையும், அவைகளுக்கு எழுத்து எவ்வளவு என்பதையும் சொல்வது சந்தோவிசிதி.


6. ஜோதிடம்: வேதத்தில் விதித்துள்ள கருமங்களை செய்யும் கால நேரங்களைச் சொல்வது ஜோதிடம்.

No comments:

Post a Comment