Sunday, May 25, 2014

சிருஷ்டி இரகசியம்

இந்த பிரபஞ்சத்தின் ஒரு ஆயுள்காலம் 43,20,000 மனித வருடங்களை கொண்டது.
இதை மொத்தம் நான்கு பெரும் யுகங்களாகப் பிரிப்பர்.
1, கிருத யுகம் = 17,28,000 மனித வருடங்களைக் கொண்டது.
2, திரேத யுகம் = 12,96,000 மனித வருடங்களைக் கொண்டது.
3, துவாபர யுகம் = 8,64,000 மனித வருடங்களைக் கொண்டது.
4, கலி யுகம்  = 4,32,000 மனித வருடங்களைக் கொண்டது.
ஆக இந்த நான்கு யுகங்களும் சேர்ந்து மொத்தம் 43,20,000 மனித வருடங்களைக் கொண்டது.
இதில் ஒரு விசித்திரமான சிறப்பு என்னவென்றால், இந்த யுகங்களின் வருடங்களின் எண்ணிக்கையின் கூட்டுத்தொகை 9 வரும்.
ஒவ்வொரு யுகங்களின் எண்ணிக்கையை கூட்டினாலும் இந்த 9 எண்ணிக்கை வரும். மொத்த ஆயுளைக் கூட்டினாலும் இந்த 9 எண்ணிக்கைதான் வரும்.
இது 4:3:2:1 என்ற விகிதத்தில் அமைந்திருப்பதையும் பார்க்கலாம்.

இந்த 43,20,000 மனித வருடங்கள் சேர்ந்ததுதான் பிரம்மாவின் ஒரு பகல்பொழுது. இன்னொரு 43,20,000 மனித வருடங்கள் முடிந்தால் பிரம்மாவின் ஒரு இரவுப்பொழுது.
இவ்வாறு 360 பகல், இரவு காலங்கள் கழிந்தால் பிரம்மாவுக்கு ஒருவருடம் முடியும்.
இவ்வாறு நூறு வருடங்கள் கழிந்தால் இப்போதுள்ள பிரம்மாவுக்கு ஆயுள் முடியும்.
இந்த நூறு வருடத்தில் முதல் ஐம்பது வருடங்கள் பாத்தும கற்பம் என்றும்; அடுத்த ஐம்பது வருடங்களை வராக கற்பம் என்றும் சொல்வர்.
அதன்படி இப்போது நடந்து கொண்டிருப்பது வராக கற்பம்.

பிரம்மாவின் ஒரு பகல்பொழுதில், இந்த உலகில் 15 மனுக்கள் அரசு செய்வார்கள். ஒவ்வோரு மனுவும் ஒரு அந்தரம் ஆட்சி செய்யும் காலத்தில், தேவேந்திரன், சப்தரிஷிகள் பிறப்பார்கள்.
பிரம்மாவுக்கு இரவு வரும்போது (அதாவது 43,20,000 மனித வருடம் முடிவில்) ஒரு பிரளயம் வரும். அந்த பிரளயத்தில் மூன்று உலகங்களும் அழிந்துவிடும். பின்னர் மகர் உலகத்தில் உள்ளவர்கள் புதிதாக பிறப்பார்கள்.
இதன்படி இந்த பிரபஞ்சம் நிலையில்லாதது, ஆனால் அழிந்து, பின்னர் தோன்றும் இயல்புடையது.
மனுஎன்பவர் சிருஷ்டியின் ஆரம்ப காலத்தில் பூமியை நிர்வகிக்க தெய்வ உத்தரவால் பிறப்பவர்.
மனுக்கள் மொத்தம் 14 பேர்கள்.
1, சுயாம்புவன்,
2, சுவாரோசிஷன்,
3, உத்தமன்
4, தாமசன்
5, ரைவதன்
6, சாக்ஷூசன்
7, வைவசுவதன்
8, சூரியசாவர்ணி
9, தக்ஷசாவர்ணி
10,பிரம்மசாவர்ணி,
11, ருத்திரசாவர்ணி
12, தர்மசாவர்ணி
13, ரௌசியன்.
14. பௌசியன்
இந்த மனுக்களே ஒவ்வொரு சிருஷ்டியின் போதும் மனித வர்க்கத்தை தோற்றுவிப்பவர்கள். எனவே இவர்களே மனிதர்களுக்கு மூலபிதாக்கள் (அ) மூதாதையர்கள்.
இப்போதுள்ள சிருஷ்டிக்கு மூலபிதாவாக இருப்பவர் வைவசுவத மனு என்பவர். இவர் ஏழாவது மனு.
ஒரு மனுவின் காலம் 43,20,000 மனித வருடங்களைக் கொண்டது.
இவ்வாறு ஆறு மனுவின் காலங்கள் சென்றுவிட்டன. இது ஏழாவது மனுவின் காலம்.


No comments:

Post a Comment