Monday, December 7, 2015

தண்டகாரணியம் ஆன சென்னை!

சென்னை தண்டகாரணியம் ஆனது!
இசுவாகுவின் மகனுக்கு தண்டன் என்று பெயர்இவன்தன் தந்தையின் பேச்சைக் கேட்காமல் முரட்டுத்தனமாக திரிந்தான்எனவே இவனின் தந்தை இசுவாகுஇவனைவிந்திய மலைப் பகுதிக்கு ஓடிப் போகுமாறு விரட்டி விட்டான்
அங்கிருந்து விந்திய மலைப் பகுதிக்குச் சென்ற தண்டன்தன்னுடன் வந்தவர்களைக் கொண்டுமதுமந்தம் என்னும் ஒரு பட்டணத்தை உருவாக்கி விட்டான்அதை அவனே ஆண்டும் வருகிறான்
இந்த விந்திய மலைப் பகுதியில்தான் சுக்கிரன் இருக்கிறார்அவரைப் போய்ப் பார்த்த தண்டன்அவருக்கு சீடனாகி விட்டான்இருந்தாலும் தண்டனுக்கு உள்ள கோணல்புத்தி மாறவில்லைசுக்கிரனின் மகள் அரசை என்னும் அழகிஇவளைப் பார்த்து இவள்மீது ஆசை கொள்கிறான்  அதனால் அவளைப் பலவந்தப்படுத்தியும் விட்டான்இதை அறிந்து சுக்கிரனுக்கு அவன்மீது கோபம் வருகிறது
“தந்தைக்கு அடங்காத பிள்ளை எங்கும், யாரிடமும் அடங்க மாட்டான்போல!”
சுக்கிரன் இவனுக்கு சாபம் இடுகிறார்; "உன் பட்டணம் முழுவதும் மண்-மழை பொழிந்து உன் பட்டணமே அழியட்டும்" என்கிறார்அதன்படி மண் மழையாகப் பெய்துஅவனின் பட்டணம் அழிந்து விட்டதுஅதுதான் தண்டகாரணியம் என்று பெயராம்இதை தட்சிண தேசம் என்றும் சொல்கிறார்கள்;
சென்னை மழையும் இப்படி ஏதாவது ஒரு சாபத்தால் வந்ததாக இருக்குமோ?

_______

No comments:

Post a Comment