Monday, August 19, 2019

ஒருவனையே நோக்கும் உணர்வு


ஒருவனையே நோக்கும் உணர்வு

பொய்கையாழ்வாரின் பாடல்



“பெயரும் கருங்கடலே நோக்குமாறு, ஒண்பூ

உயரும் கதிரவனே நோக்கும், உயிரும்

தருமனையே நோக்கும், ஒண் தாமரையாள் கேள்வன்

ஒருவனையே நோக்கும் உணர்வு.”



நதியும் கடலையே நோக்கும்.

தாமரைப்பூவும் சூரியனையே நோக்கும்.

உயிரும் எமனை நோக்கியே செல்லும்.

உணர்வு மட்டும் தாமரையில் விற்றிருப்பவளின் கணவனான நாராயணன் ஒருவனையே சென்றடையும்.

No comments:

Post a Comment