Sunday, July 31, 2016

Don't be couch potatoes


“Don’t be couch potatoes.”

போப் பிரான்சிஸ் அப்போது போலந்து நாட்டில் பிரயாணத்தில் இருந்தார்; அங்கு போலந்து மக்களிடம் ஒரு கூட்டத்தில் பேசியபோது இப்படிச் சொல்லி இருக்கிறார்: 

“இளம் தலைமுறையே! சோம்பேறிகளாக இருக்காதீர்கள்; எதையாவது சாதித்து கொண்டிருங்கள்;” என்றார்; 
“Dear young people, we didn’t come into this world to ‘vegetate’, to take it easy, to make our lives a comfortable sofa to fall asleep on. No, we came for another reason. To leave a mark.” 
ஒரு மில்லியன் மக்கள் கூட்டத்தில் (10 லட்சம்) இந்த கோபத்தை வெளிப்படுத்தினார்;
நாம் பிறவி எடுத்திருப்பது, ஏதோ மனிதனாக இந்த உலகில் பிறந்து, சோற்றுக்காக, மரம், செடி, கொடிகளைப் போல வாழ்ந்து, மடிவதற்காக அல்ல! சோம்பேறிகளாக (கவுட்ச் பொடாடோ Couch Potato) வாழ்வதற்கும்,  சோபாவில் படுத்துக் கொண்டு தூங்குவதற்கும் அல்ல! நாம் வேறு ஒரு காரணத்துக்காக இங்கு பிறவி எடுத்திருக்கிறோம்! எதையாவது சாதித்து விட்டுச் செல்ல வேண்டும் என்பதற்காகவே இங்கு பிறந்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் இளைஞர்களே! என்று போப் பிரான்சிஸ் சற்று காட்டமாகவே கூறி உள்ளார்;
கவுட்ச் couch என்றால் சாய்வு நாற்காலி; அதில் படுத்துக் கிடக்கும் பொடாடோ (potato) என்னும் உருளைக் கிழங்கு; எதற்கும் உதவாத சோம்பேறி!
இளைஞர்களே! உங்களை கம்யூட்டரும் அதில் உள்ள விளையாட்டுக்களும் தனிமைப் படுத்தி விட்டது! யாருடனும் பேசுவதில்லை; அதிலேயே மூழ்கிவிட்டீர்கள்! நீங்களும் தனிமைப்பட்டு, உங்களைச் சார்ந்தவரையும் தனிமைப்படுத்தி விட்டீர்கள்! 

சீசஸ் கிறிஸ்து, தன் வாழ்நாளில் ஆபத்துக்களையே எதிர்நோக்கிய இறைவன்; அவர் வசதியில், பாதுகாப்பில், சௌகரியமாக வாழ்ந்த இறைவன் அல்ல; “Jesus is the “Lord of risk…. Not the Lord of comfort, security and ease.”
இந்த உலகம் உன்னத நிலையை அடைய, பொருளாதார வளர்ச்சியில் வளர, நீங்கள், சோம்பேறி என்னும அந்தச் சோபாவை விட்டு எழுந்து வாருங்கள்! உங்களின் அடையாளத்தை இந்த உலகில் பதித்துவிட்டுப் போங்கள்! உங்களைப் பார்த்து யாரும், “இளைய சோம்பேறி என்று சொல்லாமல், பம்பரமாகச் சுற்றும் இளைஞன்” என்று சொல்லும்படி பெயரெடுங்கள் என்று இளைஞர்களின் கரகோசத்துக்கு நடுவில் இந்த வார்த்தைகளை உதிர்த்தார்!
“You want others to decide your future?” No!
“You want to fight for your future?” Yes!
"மற்றவர், உங்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்க அனுமதிக்காதீர்கள்!"

நமக்கு இப்போது வசதிகளின் மேல் ஆசை வந்துவிட்டது; அதில்தான் சந்தோஷம் இருப்பதாகவே உணர்கிறோம்! அதன் உள்ளேதான் நம் வாழ்க்கையை கொண்டு வந்து வைத்துவிட்டோம்! இப்படியே வாழ்ந்து நம் ஒவ்வொருவரின் கர்மாவையும் (fate) இழந்து, வாழ்வை முடித்துக் கொள்கிறோம்!
வாழ்வில், எதையாவது சாதிப்பவராக இருங்கள்!

**

No comments:

Post a Comment