Showing posts with label விநாயகர். Show all posts
Showing posts with label விநாயகர். Show all posts

Wednesday, April 2, 2014

வியாசர்

வியாசர்
இவரின் பெயர் கிருஷ்ணத்துவைபாயனர்.

பரசுராமருக்கும் சத்தியவதிக்கும் பிறந்த புத்திரன்.

இவர், வேதங்களை வகுத்ததால் 'வியாசர்' எனப் பெயர் பெற்றவர். இவர் கங்கையில் உள்ள ஒரு தீவில் பிறந்ததால் 'துவைபாயனர்' என்றும் பெயர் பெற்றவர். (துவீபம்=தீவு; அயனர்=அதில் பிறந்தவர்).

வேதாந்த சூத்திரம் செய்தவரும், மகாபாரதத்தை விநாயகரைக் கொண்டு எழுதுவித்தவரும் இவரே.

இவர் புராணங்களை பதினெட்டாக வகுத்தவர்.

இவரே, பாண்டு, திருதராஷ்டிரன் இவர்களுக்கு இயற்கை தந்தையும் ஆவார்.


Friday, March 28, 2014

வாக்குண்டாம்

வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
 நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார் வார் தமக்கு.

வாக்கு உண்டாம்.
நல்ல மனம் உண்டாம்.
மாமலராள் = தாமரையில் இருக்கும் திருமகள்.
நோக்கு (நல்ல அருள் பார்வை) உண்டாம் .
மேனி (உடல்) நுடங்காது (மெலியாது).
துப்பார் திருமேனி = பவளம் போன்ற சிவந்த உடல்.
தும்பிக்கையான் = விநாயகர்
பாதம் தப்பாமல் (தவறாது) சார்வார் தமக்கு(வணங்குபவருக்கு).