Showing posts with label பிரபஞ்சம். Show all posts
Showing posts with label பிரபஞ்சம். Show all posts

Monday, October 13, 2014

நினைவுகள்-46


சிவன் கழுத்தில் ஒரே மண்டையோடுகளாகத் தொங்கும். கடவுள், மனிதனின் மண்டையோட்டைப் போட்டுக் கொண்டு என்ன செய்வார்? ஏதோ கவுண்டிங்காம்! (Counting of numbers!). எதை எண்ணிக் கொண்டிருக்கிறார். மண்டையோட்டில் எண்ணுவதற்கு என்ன விஷயம் இருக்கிறது?

சிவன் இந்த பிரபஞ்சத்தை தன்னுள் ஒடுங்கிக் கொள்வாராம். அதாவது இந்தப் பிரபஞ்சத்தை ஒரு புள்ளி அளவுக்கு கொண்டுவந்து இல்லாமல் செய்துவிடுவார்.

பிரம்மா படைக்கும் கடவுள். இவரே இந்த உலகத்தைப் படைத்தவர். மனித உயிர்களையும் இவரே படைக்கிறார். பல லட்சம் வருடங்களுக்குப் பிறகு இந்த பிரபஞ்சம் சிவனான தன்னுள் ஒடுங்கிவிடும். பிரம்மாவும் அதனுள் ஒடுங்கிவிடுவார். அடுத்த பிரபஞ்சத்தை விஷ்ணு மறுபடியும் உண்டாகுவார். அடுத்த பிரபஞ்சத்தில் வேறு ஒரு பிரம்மா வருவார். அவர் இந்த உலகத்தின் உயிர்களைப் படைப்பார். இப்படியாக படைக்கும் தொழிலை யுகம், யுகமாக ஒவ்வொரு பிரம்மா செய்து வருவார். ஒவ்வொரு பிரம்மாவும் அவர் பிரபஞ்சமும் சிவனுக்குள் ஒடுங்கும்போது அந்த பிரம்மாவின் மண்டையோட்டை சிவன் எடுத்து மலையாகப் போட்டுக் கொள்கிறார். அடுத்த பிரம்மா ஒடுங்கும்போதும் அவரின் மண்டையோட்டையும் மாலையாகப் போட்டுக் கொள்வார். இவ்வாறு ஒவ்வொரு பிரம்மாவின் மண்டையோடும் சிவனின் கழுத்தில் மாலையாக இருக்கும். எத்தனை யுகங்கள் ஒடுங்கின என்ற எண்ணிக்கைக்காகவோ?

எத்தனை பிரபஞ்சத்தை ஏற்படுத்தி அழித்தோம் என சிவன், சுவற்றில் கரிக்கோடு போட்டு கணக்கு வைத்துக் கொள்கிறார். சிவனுக்கு மறந்து விடும் அல்லவா! இது பழைய கதை. இப்போது ipad வைத்திருப்பார்!

பிரம்மா படைக்கும் தொழிலைச் செய்பவர். இந்த பிரபஞ்சத்தையே நான்தான் படைக்கிறேன் என்று ஒருசமயம் அகங்காரம் கொண்டு சிவனை மதிக்காமல் இருந்தாராம். எனவே சிவன் கோபம் கொண்டு வைரவக் கடவுளைத் தோற்றுவித்து ஏவிவிட்டாராம். அவர் சென்று, பிரம்மாவின் ஒரு தலையை வெட்டிவிட்டார். நான்கு முகம் மட்டும் இருப்பதால் பிரம்மாவை  'நான்முகன்' என்றும் அழைக்கின்றனர்.

சிவனின் மகன் சுப்பிரமணியக் கடவுள், ஒருமுறை பிரம்மா, படைக்கும் மந்திரத்தை சொல்ல மறந்துவிட்டதால், அவரைச் சிறையிலிட்டு, சுப்பிரமணியக் கடவுளே கொஞ்சநாள் படைக்கும் தொழிலைச் செய்தார் என்பர். (இது கந்தபுராணக் கதை).

பிரம்மா, விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் உதித்தவர் என்பர்.
பிரம்மாவின் மனைவி சரஸ்வதி.
பிரம்மா, சிவனை வேண்டித் தவம் செய்து சிவனையே மகனாகப் பெற்றார் என்றும் சொல்வர்.

தானே தன் வேலையைச் செய்து கொண்டிருப்பவரை நாம் (மனிதன்) மதிக்க மாட்டோம். நம்மை அழித்துவிடுவார் என்பவரைப் பார்த்து ‘அண்ணே!’ என்று வணக்கம் செய்வோம். நம்மை வாழவைப்பவரைப் பார்த்து சிரித்து வணங்குவோம். இந்த இரண்டையும் சிவனும், விஷ்ணுவும் செய்வார்கள். எனவே அவர்களை நாம் மிகவும் பயத்துடன் மதிக்கிறோம். பிரம்மா படைத்துவிட்டு சென்றுவிடுவார். எனவே அவரால் மனிதனுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. எனவே பிரம்மாவை நாம் மதிக்க மாட்டோம். அவருக்கு கோயில்களே அரிது. கோயில்கள் இல்லை என்றே சொல்லலாம்.

மனிதவர்க்கத்தில்கூட, ஆக்கத் தெரிந்தவன், அழிக்கத்தெரிந்தவன் என இருவரை மட்டுமே மனிதனும் மதிக்கிறான். எனவே நாம் ஒன்று ஆக்குபவனாக இருக்க வேண்டும். அல்லது அழிப்பவனாக இருக்க வேண்டும்.
.




Tuesday, April 15, 2014

பஞ்சீகரணம்

பஞ்சீகரணம்: ஐம்பூதங்களில், ஒவ்வொரு பூதமும் இருகூறாக ஆகி, அதில் ஒரு கூறை நிறுத்திக் கொண்டு, மற்றொரு கூறை நான்கு கூறுகள் ஆக்கி, அந்த நான்கும் மற்ற நான்கு பூதங்களுக்கு கொடுத்தும் வாங்கியும் தம்மில் கலப்பது பஞ்சீகரணம் எனப்படும்.

ஆகாயம் துவாரமாகி மற்ற பூதங்களுக்கு இடம் கொடுக்கும் இயல்பானது. வாயு சலித்து மற்ற பூதங்களை திரட்டும் இயல்பானது. தேயு சுட்டு ஒன்றாக்கும் இயல்பானது. அப்பு குளிர்வித்து பதம் செய்யும் இயல்பானது. பிருதிவி கடினமாய் ஆக்கும் இயல்பானது.

ஆகாயம் வட்டவடிவம்;
வாயு அறுகோணம்;
தேயு முக்கோணம்;
அப்பு பிறை வடிவம்;
பிருதிவி சதுரம்;

ஹ-ய-ர-வ-ல என ஆகாயம் முதல் ஐந்து பூதங்களுக்கும் முறையே இது அக்ஷரமாகும்.

Friday, April 4, 2014

பிரபஞ்ச சிருஷ்டி ரகசியம்

சிருஷ்டி;
மூலப் பிரகிருதியிலிருந்து இந்த பிரபஞ்சம் தோன்றுவதை சிருஷ்டி என்பர். பஞ்சபூதங்களும் தம்மில் கூடி சிருஷ்டியை உண்டுபண்ணும்.
பிரபஞ்சம் அனைத்தும் சித்தும், சடமும் ஆகிய இரு கூறில் அடங்கும். சித்தின்றி சடம் இயங்காது. ஆகவே, தோற்றம், திதி, நாசம். என்னும் மூன்றாய் தோன்றும்.

தோற்றுவிக்கும் சக்திக்கு பிரமா எனப் பெயர்.
திதி செய்யும் சக்திக்கு விஷ்ணு என்று பெயர்.
நாசம் செய்யும் சக்திக்கு ருத்திரன் என்று பெயர்.

ஒவ்வோரு அணுவையும் இந்த மூன்று சக்திகளும் பற்றிக் கொண்டு நின்று தனது தனது முறையில் தமது தமது தொழிலைச் செய்யும். இதைத்தான் ஆங்கிலேய விஞ்ஞானிகள் 'ஆற்றல்' என்கிறார்கள். ஆரியர்கள் இந்த மூன்று சக்திகளையும் தனித்தனி 'கடவுள்' என்கிறார்கள்.

இப்போதுள்ள சிருஷ்டி தொடங்கி 27 சதுர் யுகங்கள் முடிந்து 28-வது சதுர்யுகம் நடந்து வருகிறது. இந்த சிருஷ்டியிலே இதுவரை ஆறு மனுக்கள் இறந்து ஏழாவது மனுவாகிய வைவசுவத மனு அந்தரம் நடக்கிறது.
ஒவ்வொரு மனு அந்தரத்திலும் மனிதரின் வடிவமும், குணமும் வேறுபட்டு உயர்ந்து வருகிறது.

முன் இருந்த மனுவின் காலத்தில், மனிதர்கள் நம்மைக் காட்டிலும் வடிவத்திலும் குணத்திலும் குறைந்தவர். இனி வரப்போகும் சாவர்ணி மனுவின் காலத்தில் வரும் மனிதர்கள் நம்மைவிட சிறந்தவர்கள். மனு என்று சொல்வது மனித கணத்தையே. ஒவ்வொரு மனித காலத்திலும் மனிதனின் தலைவனுக்கு மனு என்று பெயர்.
ஆன்மாக்கள் எல்லாம் தனது செயலுக்கு ஏற்ப மேல்பிறவிகளில் செல்லும். சிருஷ்டியும் ஆன்மாக்களின் பொருட்டாக நிகழ்வதுதான்.

வாயு உலகம் = சனி
தேயு உலகம் = சூரியன்
அப்பு உலகம் = சுக்கிரன்
பிருதிவி உலகம் = பூமி.
ஒவ்வொரு பூதத்திலும் மற்றைய நான்கும் கூடி இருக்கும்.
எனவே இந்த பிரபஞ்சமானது 'தோன்றி, நின்று, ஒடுங்கும், இயல்புடையது.