Showing posts with label சிவன். Show all posts
Showing posts with label சிவன். Show all posts

Thursday, October 6, 2016

1-வது திருவிளையாடல்

1-வது திருவிளையாடல்:
துவஷ்டாவின் மகனை இந்திரன் கொன்று விடுகிறான்; எனவே துவஷ்டா, இந்திரனைப் பழிவாங்க நினைத்து, ஒரு யாகம் வளர்க்கிறார்; அந்த யாகத்தில் விருத்திகாசுரன் என்னும் ஒரு அசுரனை வரவழைக்கிறார்; இந்திரனைக் கொல்லும்படி அந்த அசுரனிடம் துவஷ்டா கேட்கிறார்; மகனைக் கொன்ற இந்திரனை பழிவாங்க வேண்டுமாம்!
இந்திரனுக்கும் விருத்திகாசுரனுக்கும் பெரிய சண்டை நடக்கிறது; அதில் அந்த விருத்திகாசுரனை, இந்திரன் கொன்று விடுகிறான். தேவர்கள், யாரையாவது கொன்று விட்டால், அவர்களுக்கு “பிரம்மஹத்தி தோஷம்” எற்பட்டுவிடும்; எனவே, அரசுனைக் கொன்ற இந்திரனுக்கும் இந்த “பிரம்மஹத்தி தோஷம்” பிடித்துக் கொண்டது; இந்த தோஷத்திற்கு பரிகாரம் செய்து கொள்ள வேண்டுமாம்; சிவனை வழிபட்டால் அந்த தோஷம் போய்விடுமாம்!
ஆனால், இந்திரனுக்கு இந்தப் பாவம் வந்ததால் அவன் ஒளி இழந்து தெளிவின்றி இருக்கிறான்; எனவே அவ்வாறு தெளிவில்லாமல், சிவனைத் தேடி அலைந்து திரிந்தபோது, வழிதவறி கடம்பவனம் என்னும் பகுதியை அடைகிறான். (இந்தக் கடம்பவனம் தான், பழைய மதுரை என்று பெயர்); அங்கு சிவனை கண்டு அவரிடம் தனக்கு அருள் புரியுமாறு வேண்டுகிறான் இந்திரன்;
சிவனுக்கு அர்ச்சனை செய்வதற்காக பூக்களைத் தேடுகிறான் இந்திரன்; ஒரு பூச்செடியைக்கூட அங்கு பார்க்க முடியவில்லை; எல்லாமே கடம்ப-மரங்களாகவே உள்ளன; சிவனை வணங்க பூக்கள் கிடைக்கவில்லையே என்று வருந்துகிறான்;
ஆனால், ஆச்சரியமாக, அங்குள்ள ஒரு குளத்தில் மட்டும் பொன்னால் செய்யப்பட்ட தாமரை மலர்கள் (பொற்றாமரை) பூத்திருக்கின்றன. அதைக் கொண்டு இந்திரன், சிவனுக்கு பூஜை செய்து மகிழ்கிறான்; அவனின் பிரம்மஹத்தி தோஷம் விலகி விடுகிறது; அந்த பொன்னால் ஆன தாமரை மலர்களை, சிவனே அங்கு அப்போது தோற்றுவித்து, இந்திரனின் கவலை போக்கி இருக்கிறார்;
இப்படி, அந்த பொற்றாமரை மலர்களை சிவனே தோற்றுவித்து, இந்திரனின் பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கி, சிவன் தனது முதல் திருவிளையாடலை நடத்தி இருக்கிறார்;
(இந்திரனுக்கும் விருத்திகாசுரனுக்கும் நடந்த சண்டையின் விபரம்):-
இந்திரனுக்கும் விருத்திராசுரனுக்கும் பெரும் சண்டை நடக்கிறது; இருவரும் மற்போர் புரிகிறார்கள். இந்திரன் தோற்று விட்டான்; எனவே இந்திரன் தப்பித்து ஓடி, விஷ்ணுவிடம் தஞ்சம் புகுந்து விட்டான்; அவரிடம் தன்னை காப்பாற்றும்படி வேண்டுகிறான். ஆனால், விஷ்ணுவோ, “இந்திரா! நீ, கடலில் தவம் செய்யும் ஒரு முனிவரை போய்ப் பார்த்து அவரிடம் வேண்டிக் கேட்டுக் கொள்; உன் உடம்பையும் உயிரையும் காப்பாற்ற அவரால்தான் முடியும்” என்று கூறுகிறார்.
உடனே, கடலுக்கு அடியில் தவம் செய்யும் அந்த முனிவரைச் சென்று இந்திரன் சந்திக்கிறான்; தன்னைக் காப்பாற்றும்படி கெஞ்சுகிறான் இந்திரன்;
முனிவரோ-- "இந்திரா! இந்த உடம்பைக் காப்பாற்றி என்ன செய்யப் போகிறாய்? எதற்காக இப்படி பயந்து சாகிறாய்? இந்த உடம்பில் இருந்து உயிர் பிரிந்து போன பின்னர், இந்த உடலை யாரும் தேடமாட்டார்கள்;”
“இந்த உடல் வீட்டில் கிடந்தால் உன்னைப் பெற்றவர்கள் (தாய், தகப்பன்) இந்த உடல் தங்களுக்குத்தான் சொந்தம் என்று சொந்தம் கொண்டாடுவர்; இந்த உடல் காட்டில் கிடந்தால், நாய், நரிகள் தங்களுக்குத்தான் சொந்தம் என சொந்தம் கொண்டாடும்; இந்த உடல், பிணியால் கிடந்தால் (நோய்வாய்ப்பட்டு கிடந்தால்) யமனும், பேயும் தங்களுக்குச் சொந்தம் என்று சொந்தம் கொண்டாடுவர்;
இப்படிப்பட்ட இந்த உடம்பை, நீ உனக்குச் சொந்தம் என்று சொந்தம் கொண்டாடி அதைக் காப்பாற்ற என்னிடம் வருகிறாயே? உண்மையில் இந்த உடம்பு யாருக்குச் சொந்தம்? சொல் பார்க்கலாம்? என்று கேள்வியை எழுப்புகிறார்.
உண்மையில் இந்த உடம்பானது, துன்பப்படுபவர்களுக்கு உதவுவதற்காக இறைவன் படைத்திருக்கிறான் என்பதைப் புரிந்துகொள்!
எனவே என்னிடம் உள்ள இந்த என் உடம்பும் எதற்கும் பிரயோசனப்படாது; எனவே என் உடம்பை எடுத்துக் கொள்; அதிலுள்ள எலும்புகளைக் கொண்டு சண்டையிட்டு உன் எதிரி விருத்திராசுரனைக் கொன்றுவிடு” என்று முனிவர் இந்திரனிடம் கூறுகிறார்;
அவ்வாறே இந்திரனும் அந்த முனிவரைக் கொன்று, அவரின் உடம்பில் உள்ள எலும்புகளை வைத்துக் கொண்டு, எதிரியான விருத்திகாசுரனை கொன்று அழிக்கிறான். அதனால்தான் அவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுகிறது. அதற்குப் பரிகாரம் தேடிய போதுதான் சிவன் பொற்றாமரை மலர்களை உருவாக்கி, அதைக் கொண்டே, இந்திரன், சிவனை அர்ச்சனை செய்து, வழிபட்டு, அவனின் பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்கிறான்;
(மதுரையில் சிவன் செய்த விளையாட்டுக்கள் “திருவிளையாடல்” எனப்படும்.)
**

Monday, October 13, 2014

நினைவுகள்-46


சிவன் கழுத்தில் ஒரே மண்டையோடுகளாகத் தொங்கும். கடவுள், மனிதனின் மண்டையோட்டைப் போட்டுக் கொண்டு என்ன செய்வார்? ஏதோ கவுண்டிங்காம்! (Counting of numbers!). எதை எண்ணிக் கொண்டிருக்கிறார். மண்டையோட்டில் எண்ணுவதற்கு என்ன விஷயம் இருக்கிறது?

சிவன் இந்த பிரபஞ்சத்தை தன்னுள் ஒடுங்கிக் கொள்வாராம். அதாவது இந்தப் பிரபஞ்சத்தை ஒரு புள்ளி அளவுக்கு கொண்டுவந்து இல்லாமல் செய்துவிடுவார்.

பிரம்மா படைக்கும் கடவுள். இவரே இந்த உலகத்தைப் படைத்தவர். மனித உயிர்களையும் இவரே படைக்கிறார். பல லட்சம் வருடங்களுக்குப் பிறகு இந்த பிரபஞ்சம் சிவனான தன்னுள் ஒடுங்கிவிடும். பிரம்மாவும் அதனுள் ஒடுங்கிவிடுவார். அடுத்த பிரபஞ்சத்தை விஷ்ணு மறுபடியும் உண்டாகுவார். அடுத்த பிரபஞ்சத்தில் வேறு ஒரு பிரம்மா வருவார். அவர் இந்த உலகத்தின் உயிர்களைப் படைப்பார். இப்படியாக படைக்கும் தொழிலை யுகம், யுகமாக ஒவ்வொரு பிரம்மா செய்து வருவார். ஒவ்வொரு பிரம்மாவும் அவர் பிரபஞ்சமும் சிவனுக்குள் ஒடுங்கும்போது அந்த பிரம்மாவின் மண்டையோட்டை சிவன் எடுத்து மலையாகப் போட்டுக் கொள்கிறார். அடுத்த பிரம்மா ஒடுங்கும்போதும் அவரின் மண்டையோட்டையும் மாலையாகப் போட்டுக் கொள்வார். இவ்வாறு ஒவ்வொரு பிரம்மாவின் மண்டையோடும் சிவனின் கழுத்தில் மாலையாக இருக்கும். எத்தனை யுகங்கள் ஒடுங்கின என்ற எண்ணிக்கைக்காகவோ?

எத்தனை பிரபஞ்சத்தை ஏற்படுத்தி அழித்தோம் என சிவன், சுவற்றில் கரிக்கோடு போட்டு கணக்கு வைத்துக் கொள்கிறார். சிவனுக்கு மறந்து விடும் அல்லவா! இது பழைய கதை. இப்போது ipad வைத்திருப்பார்!

பிரம்மா படைக்கும் தொழிலைச் செய்பவர். இந்த பிரபஞ்சத்தையே நான்தான் படைக்கிறேன் என்று ஒருசமயம் அகங்காரம் கொண்டு சிவனை மதிக்காமல் இருந்தாராம். எனவே சிவன் கோபம் கொண்டு வைரவக் கடவுளைத் தோற்றுவித்து ஏவிவிட்டாராம். அவர் சென்று, பிரம்மாவின் ஒரு தலையை வெட்டிவிட்டார். நான்கு முகம் மட்டும் இருப்பதால் பிரம்மாவை  'நான்முகன்' என்றும் அழைக்கின்றனர்.

சிவனின் மகன் சுப்பிரமணியக் கடவுள், ஒருமுறை பிரம்மா, படைக்கும் மந்திரத்தை சொல்ல மறந்துவிட்டதால், அவரைச் சிறையிலிட்டு, சுப்பிரமணியக் கடவுளே கொஞ்சநாள் படைக்கும் தொழிலைச் செய்தார் என்பர். (இது கந்தபுராணக் கதை).

பிரம்மா, விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் உதித்தவர் என்பர்.
பிரம்மாவின் மனைவி சரஸ்வதி.
பிரம்மா, சிவனை வேண்டித் தவம் செய்து சிவனையே மகனாகப் பெற்றார் என்றும் சொல்வர்.

தானே தன் வேலையைச் செய்து கொண்டிருப்பவரை நாம் (மனிதன்) மதிக்க மாட்டோம். நம்மை அழித்துவிடுவார் என்பவரைப் பார்த்து ‘அண்ணே!’ என்று வணக்கம் செய்வோம். நம்மை வாழவைப்பவரைப் பார்த்து சிரித்து வணங்குவோம். இந்த இரண்டையும் சிவனும், விஷ்ணுவும் செய்வார்கள். எனவே அவர்களை நாம் மிகவும் பயத்துடன் மதிக்கிறோம். பிரம்மா படைத்துவிட்டு சென்றுவிடுவார். எனவே அவரால் மனிதனுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. எனவே பிரம்மாவை நாம் மதிக்க மாட்டோம். அவருக்கு கோயில்களே அரிது. கோயில்கள் இல்லை என்றே சொல்லலாம்.

மனிதவர்க்கத்தில்கூட, ஆக்கத் தெரிந்தவன், அழிக்கத்தெரிந்தவன் என இருவரை மட்டுமே மனிதனும் மதிக்கிறான். எனவே நாம் ஒன்று ஆக்குபவனாக இருக்க வேண்டும். அல்லது அழிப்பவனாக இருக்க வேண்டும்.
.




Saturday, May 24, 2014

சங்கரா! சூலபாணியே!

தனதன்நல் தோழா, சங்கரா, சூல
பாணியே, தாணுவே, சிவனே,
கனகநல் தூணே, கற்பகக் கொழுந்தே,
கண்கள் மூன்றுடையதோர் கரும்பே,
அனகனே குமர விநாயக கனக
அம்பலத்து அமரசே கரனே,
உனகழல் இணையென் நெஞ்சினுள் இனிதாத்
தொண்டனேன் நுகருமா நுகரே. -- (திருமாளிகைத் தேவர் திருவிசைப்பா)

"குபேரனது நண்பனே, நன்மை செய்பவனே, சூலத்தை கையிலே ஏந்தியவனே, அழிவற்றவனே. சிவனே, நல்ல பொற்தூண்போல் என்னைத் தாங்கிப் பற்றுக் கோடாயிருப்பவனே, கற்பகத் தளிரே, மூன்று கண்களையுடைய கரும்பு போன்ற இனியவனே, தூய்மையானவனே விநாயகனுக்கும் முருகனுக்கும் தந்தையே பொன்னம்பலத்திலே ஆடும்  தேவர் தலைவ, தொண்டனாகிய நான் உன் திருவடிகள் இரண்டையும் எனது நெஞ்சினுள்ளே இனிமையாக அனுபவிக்குமாறு நீ திருவருள் புரிவாயாக!

Wednesday, April 9, 2014

அம்பலத்து அமர சேகரனே!

அம்பலத்து அமர சேகரனே!
தனதன்நல் தோழா, சங்கரா, சூல
பாணியே, தாணுவே, சிவனே,
கனகநல் தூணே, கற்பகக் கொழுந்தே,
கண்கள் மூன்றுடையதோர் கரும்பே,
அனகனே குமர விநாயக கனக
அம்பலத்து அமரசே கரனே,
உனகழல் இணையென் நெஞ்சினுள் இனிதாத்
தொண்டனேன் நுகருமா நுகரே. -- (திருமாளிகைத் தேவர் திருவிசைப்பா)


"குபேரனது நண்பனே, நன்மை செய்பவனே, சூலத்தை கையிலே ஏந்தியவனே, அழிவற்றவனே. சிவனே, நல்ல பொற்தூண்போல் என்னைத் தாங்கிப் பற்றுக் கோடாயிருப்பவனே, கற்பகத் தளிரே, மூன்று கண்களையுடைய கரும்பு போன்ற இனியவனே, தூய்மையானவனே விநாயகனுக்கும் முருகனுக்கும் தந்தையே பொன்னம்பலத்திலே ஆடும்  தேவர் தலைவ, தொண்டனாகிய நான் உன் திருவடிகள் இரண்டையும் எனது நெஞ்சினுள்ளே இனிமையாக அனுபவிக்குமாறு நீ திருவருள் புரிவாயாக.


Saturday, March 29, 2014

சைவ மதம்

சைவ மதம்:

சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டுள்ள ஒரு மதம். இந்த மதத்தை சேர்ந்தோரை சைவர் என்பர்.

பதி, பசு, பாசம், என்னும் மூன்றும் நிலையான (நித்திய) பொருள்கள்.

ஆன்மாக்கள் பசுக்கள். இவைகள் அவை செய்யும் புண்ணியத்தினால் ஞானம் பெற்று சிவனுடன் இரண்டற கலந்து முக்தி அடையும். பற்றை விடுவதே முக்திக்கு வழி.

சிவன், 'சிருஷ்டி, திதி, சங்காரம், திரோபவம், அநுகிரகம்' என்னும்  பஞ்சகிருத்தியங்களையும், ஆன்மாக்களையும் ஈடேற்றுபவர் என்றும் சொல்கிறது இந்த மதம்.