Showing posts with label சரஸ்வதி. Show all posts
Showing posts with label சரஸ்வதி. Show all posts

Wednesday, April 23, 2014

நவராத்திரி

நவராத்திரி:
ஆஸ்வயுஜ மாதத்தில் (ஐப்பசி) சுக்கில பிரதமை நாள் முதலாக ஒன்பது ராத்திரிகளை 'நவராத்திரி' என்பர்.

கிருதயுகத்திலிருந்து இது நடந்துவருகிறதாம். கிருதயுகத்தில் வாழ்ந்த சுகேதன் என்னும் ஓர் அரசன் தனது அரச பதவியை இழந்து தனது மனைவிகளுடன் காட்டுக்குச் சென்றான். அங்கே அங்கிரசன் என்னும் ரிஷி தவம் செய்து கொண்டிருந்தார். அவரைச் சந்தித்து தான் இராச்சியத்தை இழந்ததை வருத்தத்துடன் தெரிவித்தான்.

அந்த ரிஷி, சுகேதன் அரசனுக்கு சில பூஜை முறைகளை சொல்லிக் கொடுத்து உபதேசித்தார். அவர் சொல்லிய அந்த பூஜா முறைகள் நவராத்திரி பூஜை எனப்படும். இந்த பூஜையை பக்தியோடு செய்து வந்தால் தனது இழந்த ராச்சியத்தையும், இழந்த செல்வங்களையும் திரும்பப் பெறலாம் என்று அந்த ரிஷி உபதேசித்து அதை செய்யும் முறையையும் சொல்லிதந்தார்.  அந்த அரசனும் அவ்வாறே செய்து இழந்தவைகளை அனைத்தையும் திரும்பப் பெற்றான்.

அதனால், அரசன் கட்டளைப்படி, அப்போதிலிருந்து வருடந்தோறும் இதை கொண்டாடி வருகின்றனர்.


துர்க்கை, லக்ஷூமி, சரஸ்வதி ஆகிய மூவரையும் முறையே ஒருவருக்கு மூன்று நாட்கள் வீதம் மூவருக்கும் ஒன்பது நாட்களும் பூசித்து, ஒன்பதாம் நாள் ஆயுதங்களையும், பூஜை புத்தகங்களையும் ஆராதித்தும், அடுத்த பத்தாவது நாளில் தஜமி திதியை வெற்றிக்காக விஜயதசமியாக கொண்டாடுகின்றனர்.

Tuesday, April 15, 2014

காயத்திரி மந்திரம்

காயத்திரி மந்திரம்

சரஸ்வதி ஒரு யாகத்துக்கு வர நேரமானதால், பிரம்மா, காயத்திரி என்ற இடைக்குல கன்னியை இரண்டாம் மனைவியாக கொண்டார் என்பர்.
வேதசாரமாகிய காயத்திரி சூத்திரமே கன்னிகையாக உருவகம் செய்யப்பட்டது. இதை உதய-அஸ்தமன காலங்களில் ஓதுவர்.

காயத்திரி மந்திரம் சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் பொருந்தும் என்பதால் சைவரும், வைஷ்ணவரும் தமது என்று கூறி ஓதிவருவர்.


காயத்திரி மந்திரம்: வேதம் பசுவாகவும், அதன் சாரம் பாலாகவும், சூத்திரமான அதனை கரப்பது இடைக்குல கன்னியாகவும் உருவகம் செய்துள்ளனர்.