Showing posts with label மதுரா. Show all posts
Showing posts with label மதுரா. Show all posts

Saturday, March 29, 2014

ஜராசந்தன்

ஜராசந்தன்:

ஜராசந்தன் என்பவன் பிருகத்திரதன் புத்திரன்.

பிருகத்திரதன் மன்னன், தனக்கு புத்திரர் இல்லாமையால், தனது நாட்டை தனது மந்திரியிடம் ஒப்படைத்து விட்டு, காட்டுக்குச் சென்று தவம் செய்தான். சண்டகௌசிக முனிவரை வேண்டினான்.

முனிவரும் மனம் இரங்கி, இவனுக்கு ஒரு மாங்கனியை கொடுத்து, இதை மன்னனின் மனைவியை உண்ணுமாறு சொன்னார். அதை அவன் தன் மனைவியிடம் கொடுக்க, அவளோ, அந்த மாங்கனியை இரு கூறுகளாக வெட்டி, அதில் ஒரு துண்டை இவளை உண்டாள். மற்ற துண்டை இவளின் சக்களத்திக்கு கொடுத்து உண்ணச் செய்தாள். இவ்வாறு செய்ததால், அந்த கரு பாதி பாதியாக வளர்ந்து இருவர் வயிற்றிலும் பாதி பாதி குழந்தையாக வளர்ந்து பிறந்தது.

அந்த குறையுடன் பிறந்த இரு குழந்தைகளையும் ஜரை என்னும் ஒரு ராட்ச்சி திருடிச் சென்று ஒரு இடத்தில் வைத்திருந்தாள். அவை இரண்டும் ஒட்டிக் கொண்டு இருந்ததால், ஒரே குழந்தையாக மாறி விட்டது. இந்த அதியசத்தை கண்ட ராட்சசி அந்த குழந்தையை பிருகத்திரதனிடம் கொண்டு போய் கொடுத்தாள். இந்த குழந்தைக்கு 'ஜராசந்தன்' என பெயரிட்டான். சந்தி என்பது கூடுதல் என்பது பொருள்.

கஞ்சனை, கிருஷ்ணன் கொன்றதால், இந்த சராசந்தன், தன் மருகன் கஞ்சனைக் கொன்ற கோபத்தில், கிருஷ்ணனின் மதுராபுரிக்கு படையெடுத்துச் சென்றான். இவ்வாறு 18 முறை படையெடுத்தான். கடைசியாக கிருஷ்ணனை வென்றான்.

பின்னர், தருமர் ராச்சூய யாகம் செய்த போது இவன் வீனமால் கொல்லப்பட்டான். (கிருஷ்ணனின் தூண்டுதலால்). அது ஒரு தனிக்கதை.