Showing posts with label ஊர்வசி. Show all posts
Showing posts with label ஊர்வசி. Show all posts

Tuesday, October 14, 2014

ஊர்வசி


ஊர்வசியின் கணவர் புரூரவன்.
இவன் தகப்பனார் பெயர் புதன்.
இவனின் தாய் பெயர் இளை.
(வைவசுவத மனுவின் மகள்தான் இந்த இளை).

புரூவரன் மிகப் பெரிய சக்கரவர்த்தி. பிரசித்தி பெற்றவன். இவன் தானம் செய்வதிலும், தெய்வ வழிபாட்டிலும் மிகச் சிறந்து விளங்கியவன்.

இவன் ஒருநாள் ஊர்வசியைப் பார்த்து விட்டான். அவளின் அழகில் மயங்கி, அவளை தனக்கு மனைவியாகும்படி கேட்கிறான்.

அழகிகள் எப்போதும் திருமணத்துக்கு நிபந்தனை விதிப்பது இயல்பு. அதன்படி அவளும் ஒரு நிபந்தனை விதிக்கிறாள்.

"நான் உமக்கு மனைவி ஆக வேண்டும் என்றால், நீர் எப்போதும் என்னைவிட்டு பிரியாமல் என்னுடனேயே இருக்க வேண்டும்." என்ற நிபந்தனையை விதிக்கிறாள். அதற்கு மன்னனும் ஒப்புக்கொண்டு அவளை மனைவியாக்கி வெகுகாலம் வாழ்ந்திருக்கிறான்.

நாராயணன் தன் தொடையிலிருந்து இந்த ஊர்வசியை உருவாக்குகிறார். தவத்தை கெடுக்க வந்த தேவபெண்களின் அழகைக் குறைத்து அவர்களை ஒடவைக்க நினைத்தவர், அவர்களைக் காட்டிலும் அழகான பெண்ணாக ஊர்வசியை உருவாக்கினார். தொடையிலிருந்து வந்ததால் ஊர்வசி என்று பெயராம்.




Saturday, April 12, 2014

அப்சரஸ் அழகிகள்

அப்சரஸ் அழகிகள்
இவர்கள் தேவகணங்கள். (தேவ உலகத்தைச் சேர்ந்தவர்கள், மனித உலகத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர்).
அப்சரஸ் பெண்கள்:
1. மேனகை
2. ரம்பை
3. கிருதாசி (ஊர்வசி)
4. திலோத்தமை
இந்த அப்சரஸ்கள் பாற்கடலில் பிறந்தவர்கள்.  கசியபன் புத்திரிகள் என்றும் சொல்லுவார்கள். இவர்களை கந்தருவ பெண்கள் என்றும் சொல்வார்கள்.
இவர்கள் 14 வகைப்படுவர்.

மேனகை
விசுவாமித்திரன் தவத்தை அழிக்குமாறு இந்திரன் இவளை ஏவிவிட, அவளும் விசுவாமித்திரரிடம் சென்று, அவரின் தவத்தைக் கலைத்து அவருடன் கூடி 'சகுந்தலை' என்ற பெண்ணைப் பெற்றாள்.

ரம்பை
இந்திரன் சபையில் ஆடும் அப்சரப் பெண். இவள் மகா அழகி. இவள் நளகூபரன் மனைவி.

ஊர்வசி
நர-நாராயணர்கள் பதரிகா ஆசிரமத்தில் தவம் செய்யும்போது, அவர்களின் தவத்தைக் கலைக்க நினைத்து தேவதாசிகள் சென்று எவ்வளவோ முயன்றும் முடியவில்லை.
நாராயணன் கோபம் கொண்டு இந்த தேவதாசிகளின் அழகைக் குறைக்க நினைத்து, அவர்களைக் காட்டிலும் பலமடக்கு அழகுள்ள இந்த ஊர்வசியை தனது தொடையிலிருந்து தோற்றுவித்தார். அதைப் பார்த்த அந்த தேவதாசிகள் தங்கள் அழகு, இவள்முன் குறைந்துவிட்டதாக கருதி ஓடிவிட்டனர். தொடையில் பிறந்ததாள் இவளை ஊர்வசி என்றனர்.

திலோத்தமை:

பிரம்மா ஏனையப் பெண்களைச் சிருஷ்டிசெய்து கொண்டிருக்கும்போது, இந்த பெண்ணை சிருஷ்டிக்க நினைத்து அதற்காக திலப் என்னும் பிராமணம் (உறுதி) எடுத்து சிருஷ்டித்ததால் இவளுக்கு திலோத்தமை என்ற பெயர் வந்ததாம். திலோத்தமை பாற்கடலில் பிறந்தவள். 

Thursday, April 3, 2014

காளிதாசனின் விக்கிரமோர் வசியம்

காளிதாசனின் விக்கிரமோர் வசியம்

இது மகாகவி காளிதாசன் செய்த ஒரு நாடக நூல். இதை சமஸ்கிருதத்தில் காளிதாசன் செய்தான்.
இது ஒரு காதல் கதையாம். இதில் புரூரவன், ஊர்வசிமேல் வைத்த காதல் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

புரூரவன்
வைவசுவதமனு புத்திரியாகிய இளையிடம் புதனுக்கு பிறந்த புத்திரன். இவன் பிரசித்தி பெற்ற ஒரு சக்கரவர்த்தி. இவன் ஈகையிலும் தெய்வபக்தியிலும் அழகிலும் சிறந்தவன். இவன் ஒரு நாள் ஊர்வசியைக் கண்டு மயங்கி அவளைத் தனக்கு மனைவியாகும்படி கேட்க, அவளோ, 'நீர், என்னை ஒருநாள்கூட பிரிந்திருப்பதில்லை என்று வாக்குக் கொடுத்தால் மட்டுமே, உம்மோடு கூடி இருப்பேன்' என்று கேட்டாள். அவனும் இதற்கு சம்மதித்து இவரும் கூடி வாழ்ந்தனர். இந்த விபரம் ரிக் வேதத்திலும் கூறப்பட்டுள்ளது.

ஊர்வசி
இவள் ஒரு அப்சரப் பெண். நரநாராயணர்கள் பதரிகா ஆசிரமத்தில் தவம் செய்து கொண்டிருக்கையில், அவர்களின் தவத்தை கலைக்க நினைத்த தேவதாசிகள் அங்கு சென்று எவ்வளவோ முயன்றும் அவர்களின் தவத்தைக் கலைக்க முடியவில்லையாம். இதைக் கண்ட நாராயணன், இவர்களின் அழகைக் குறைக்க நினைத்தார். இவர்களைக் காட்டிலும் மிக அழகான ஒரு பெண்ணை தனது தொடையிலிருந்து தோற்றுவித்து அதைப்பார்த்து அந்த பெண்களே நாணும்படி செய்தார். இந்த ஊர்வசி, நாராயணனின் தொடையில் இருந்து பிறந்தமையால், ஊர்வசி என்று காரணப் பெயர் பெற்றாள்.