Wednesday, June 21, 2017

சண்முக கவசம் பாடல்-20

நமைப் பறு கிரந்தி வீக்கம்
நணுகிடு பாண்டு சோபம்
அமர்த்திடு கருமை வெம்மை
ஆகுபல் தொழுநோய் கக்கல்
இமைக்கு முன் உறுவலிப்போடு
எழுபுடைப் பகந்தர் ஆதி
இமைப் பொழுதேனும் என்னை
எய்தாமல் அருள்வேல் காக்க!

பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் பாடல்-20

சண்முக கவசம் பாடல்-19

தவனமா ரோகம் வாதம்
சயித்தியம் அரோசகம் மெய்
சுவறவே செய்யும் மூலச்
சூடிளைப் புடற்று விக்கல்
அவதிசெய் பேதி சீழ்நோய்
அண்டவா தங்கள் சூலை
எவையும் என் இடத்து எய்தாமல்
எம்பிரான் திணிவேல் காக்க!

பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் பாடல்-19

சண்முக கவசம் பாடல்-18

இணக்கம் இல்லாத பித்த
எரிவு மா சுரங்கள் கைகால்
முணக்கவே குறைக்கும் குஷ்டம்
மூலவெண் முளை தீ மந்தம்
சணத்திலே கொல்லும் சன்னி
சாலம் என்று அறையும் இந்தப்
பிணிக்குலம் எனையாளாமல்
பெருஞ் சத்தி வடிவேல் காக்க!

பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் பாடல்-18

சண்முக கவசம் பாடல்-17

டமருகத் தடிபோல் நைக்கும்
தலை இடி கண்டமாலை
குமுறுவிப் புருதி குன்மம்
குடல்வலி ஈழை காசம்
நிமிரொணாது இருத்தும் வெட்டை
நீர்ப்பிரமேகம் எல்லாம்
எமை அடையாமலே குன்று
எறிந்தவன் கைவேல் காக்க!

பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் பாடல்-17

சண்முக கவசம் பாடல்-16

ஞமலியம் பரியன் கைவேல்
நவக்கிரகக் கோள் காக்க
சுமவிழி நோய்கள் தந்த
சூலையாக் கிராண ரோகம்
திமிர் கழல் வாதம் சோகை
சிரமடி கர்ண ரோகம்
எமையணு காம லோபன்
இருபுயன் சயவேல் காக்க!

பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் பாடல்-16

சண்முக கவசம் பாடல்-15

சலத்திலும் வன் மீன் ஏறு
தண்டுடைத் திருக்கை மற்றும்
நிலத்திலும் சலத்திலும்தான்
நெடுந்துயர் தரற்கே உள்ள
குலத்தினால் நான் வருத்தம்
கொண்டிடாது அவ்வவ் வேளை
பலத்துடன் இருந்து காக்க
பாவகி கூர் வேல் காக்க!

பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் பாடல்-15

சண்முக கவசம் பாடல்-14

ஙகரமே போல் தழீஇ
ஞானவேல் காக்க வன்புள்
சிகரி தேள் நண்டுக் காலி
செய்யனே றாலப் பல்லி
நகமுடை ஓந்தி பூரான்
நளி வண்டு புலியின் பூச்சி
உகமிசை இவையால் எற்கோர்
ஊறிலாது ஐவேல் காக்க!

பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் பாடல்-14

சண்முக கவசம் பாடல்-13

கடுவிடப் பாந்தள் சிங்கம்
கரடி நாய் புலி மா யானை
கொடிய கோணாய் குரங்கு
கோலமார்ச் சாலஞ் சம்பு
நடையுடை எதனாலேனும்
நான் இடர்ப் பட்டிடாமல்
சடிதியில் வடிவேல் காக்க
சானவி முளைவேல் காக்க!

பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் பாடல்-13

சண்முக கவசம் பாடல்-12

ஔவியம் உளர் ஊண் உண்போர்
அசடர் பேய் அரக்கர் புல்லர்
தெவ்வர்கள் எவரானாலும்
திடமுடன் எனை மற்கட்டத்
தவ்விய வருவாராயில்
சராசரம் எலாம் புரக்கும்
கவ்வுடைச் சூர சண்டன்
கையயில் காக்க காக்க!


பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் பாடல்-12

சண்முக கவசம் பாடல்-11

ஓங்கிய சீற்றமே கொண்டு உவணி வில் வேல் சூலங்கள்
தாங்கிய தண்டம் எக்கம் தடி பரசு ஈட்டி ஆதி
பாங்குடை ஆயுதங்கள் பகைவர் என் மேலே ஓச்சின்
தீங்கு செய்யாமல் என்னைத் திருக் கைவேல் காக்க காக்க!


பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் பாடல்-11

Monday, June 19, 2017

சண்முக கவசம் - பாடல்-10

ஒலி எழ உரத்த சத்தத்தொடு வரு பூதப்பிரேதம்
பலிகொள் இராக்கதப் பேய் பலகணத்து எவை ஆனாலும்
கிலிகொள எனை வேல் காக்க!
கெடுபரர் செய்யும் சூன்யம்
வலி உள மந்தர தந்தரம்
வருத்திடாது அயில்வேல் காக்க!


(பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம்) பாடல்-10

சண்முக கவசம் - பாடல்-9

ஐயுரு மலையன் பாதத்து அமர் பத்து விரலும் காக்க,
பையுறு பழநி நாத பரன் அகங்காலைக் காக்க,
மெய் உடல் முழுதும் ஆதி விமல சண்முகவன் காக்க!
தெய்வ நாயக விசாகன் தினமும் என் நெஞ்சைக் காக்க!


(பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம்) பாடல்-9

சண்முக கவசம் - பாடல்-8

ஏரகத் தேவன், என் தாள் இரு முழங்காலும் காக்க,
சீருடைக் கணைக்கால் தன்னைச்
சீர் அலை வாய்த்தே காக்க,
சீரிய குதிக்கால் தன்னைச்
திருச்சோலை மலையன் காக்க!


(பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம்) பாடல்-8

சண்முக கவசம் - பாடல்-7

எஞ்சிடாது இடுப்பை, வேலுக்கு இறைவனார் காக்க காக்க,
அஞ்சுகனம் ஓர் இரண்டும் அரன் மகன் காக்க காக்க,
விஞ்சிடு பொருள் காங்கேயன்
விளர் அடித் தொடையைக் காக்க,
செஞ்சரண் நேச ஆசான்
திமிரும் முன் தொடையைக் காக்க!


(பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம்) பாடல்-7

சண்முக கவசம் - பாடல்-6

ஊண் நிறை வயிற்றை மஞ்சை ஊர்தியோன் காக்க,
வம்புத் தோள் நிமிர் சுரேசன் உந்திச் சுழியினைக் காக்க,
குய்ய நாணினை அங்கி கௌரி நந்தனன் காக்க,
பீஜ ஆணியைக் கந்தன் காக்க,
அறுமுகன் குதத்தைக் காக்க.


(பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம்) பாடல்-6

சண்முக கவசம் - பாடல்-5

உறுதியாய் முன் கை தன்னை
உமை இள மதலை காக்க
தறுகண் ஏறிடவே என் கைத்தலத்தை மா முருகன் காக்க
புறங்கையை அயிலோன் காக்க
பொறிக்கர விரல்கள் பத்தும்
பிறங்கு மால் மருகன் காக்க
பின் முதுகைச் சேய் காக்க!


(பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம்) பாடல்-5

சண்முக கவசம் - பாடல்-4

ஈசனாம் வாகுலேயன் எனது கந்தரத்தைக் காக்க,
தேசுறு தோள் விலாவும் திருமகள் மருகன் காக்க,
ஆசிலா மார்பை ஈராறு ஆயுதன் காக்க
என்றன் ஏசிலா முழங்கை தன்னை
எழில் குறிஞ்சிக் கோன் காக்க!


(பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம்) பாடல்-4

சண்முக கவசம் - பாடல்-3

இரு செவிகளையும் செவ்வேள்
இயல்புடன் காக்க, வாயை
முருகவேள் காக்க, நா பல்
முழுது நல் குமரன் காக்க,
துரிசு அறு கதுப்பை யானைத்
துண்டனார் துணைவன் காக்க,
திருவுடன் பிடரி தன்னை
சிவசுப்பிரமணியன் காக்க.


(பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம்) பாடல்-3

சண்முக கவசம் - பாடல்-2

ஆதியாம் கயிலைச் செல்வன்
அணி நெற்றி தன்னைக் காக்க
தாது அவிழ் கடப்பம் தாரான்
தான் இரு நுதலைக் காக்க
சோதியாம் தணிகை ஈசன்
துரிசு இலா விழியைக் காக்க
நாதனாம் கார்த்திகேயன்
நாசியை நயந்து காக்க.

(பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம்) பாடல்-2

சண்முக கவசம் - பாடல்-1

அண்டமாய் அவனி ஆகி 
அறிய ஒணாப் பொருள் அது ஆகித் 
தொண்டர்கள் குருவும் ஆகித் துகள் அறு தெய்வம் ஆகி
எண்திசை போற்ற நின்ற என் அருள் ஈசன் ஆன
திண் திறல் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க.


(பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம்) பாடல்-1