கந்தரலங்காரம்-19
சொன்ன கிரௌஞ்ச கிரி ஊடுருவத் துளைத்த வைவேள்
மன்ன கடம்பின் மலர்மாலை மார்ப மௌனத்தை உற்று
நின்னை உணர்ந்து எல்லாம் ஒருங்கிய நிர்க்குணம் பூண்டு
என்னை மறந்திருந்தேன் இறந்தே விட்டது இவ்வுடம்பே!
(சொன்ன=சொர்ண=பொன்) பொன்மயமாகிய கிரௌஞ்ச மலையை ஊடுருவி
துளைத்த வைவேல் என்னும் கூரிய வேலாயுதத்தை உடையவனே! கடம்பம் பூமாலையைத் அணிந்த மார்பை
உடையவனே! மௌனத்தை உற்று நோக்கி உன்னை அறிந்து, என்னுள் எல்லாம் அடங்கி, நிர்குணம் என்னும்
குணங்கள் இல்லாத நிலையை அடைந்து என்னை மறந்து இருந்தேன்; இந்த என் உடம்பு என்னை விட்டு
நீங்கி விட்டது; (இந்த பிரபஞ்சத்தை மறந்து உன் மயமானேன்);
(அருணகிரிநாதர் அருளிய கந்தரலங்காரம் பாடல்-19)
**
No comments:
Post a Comment