Showing posts with label Justice Ruth Bader. Show all posts
Showing posts with label Justice Ruth Bader. Show all posts

Sunday, December 18, 2016

இதோபதேசம்—8

இதோபதேசம்—8
பெண்களை ஆண்களுக்கு இணையாக இந்த உலகம் ஒருகாலமும் ஏற்றுக் கொண்டதில்லை; இப்போதுதான் ஒரளவு இதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது; அதுவும் பெண்களே அந்த இடத்தை எடுத்து நிரப்பிக் கொண்டு வருகிறன்றனர்; இதுவரை ஆண்கள் அந்த இடத்தை விட்டுக் கொடுக்காமல் இருந்தனர்; இப்போது வேறு வழியில்லை;
அமெரிக்க சுப்ரீம்கோர்ட் பெண் நீதிபதிகளில் Justice Ruth Bader Ginsburg  நீதிபதி ரத் பேடர் கின்ஸ்பர்க் என்ற பெண்மணியும் ஒருவர்; இவர் ஒரு புத்தகம் எழுதி உள்ளார்; “My Own Words” “என்னுடைய சொந்த வார்த்தைகளில்” என்று அதற்கு பொருள் கொள்ளலாம்; அதில் அவர் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்; அதில் சில,
“1957ல் அமெரிக்க புளோரிடா மாநிலத்தில்ஒரு கணவன் மனைவி இருக்கிறார்கள்; அவளின் கணவன், அந்த மனைவியை கொடுமைப் படுத்திக் கொண்டே இருப்பானாம்; இவளால் பொறுக்க முடியவில்லை; ஒருநாள், பேஸ்பால் மட்டையைக் கொண்டு அவனை அடித்தே கொன்று விட்டாள்; அவள்மீது கொலை வழக்கு சுமத்தப்படுகிறது; அவளுக்கு ஒரு வருத்தம்; “இந்த வழக்கை என் மனநிலையில் இருந்து விசாரிக்க வேண்டும்; நான் ஏன் என் கணவனைக் கொன்றேன் என்றும், என் செயலில் நியாயம் உள்ளது என்றும், அப்போதுதான் தெரியவரும்” என்று கேட்கிறாள்;
அமெரிக்க கோர்ட் விசாரனை முறையில், ஜூரி என்னும் பொதுவானவர்கள் இருந்து அந்த வழக்கை கேட்பர்; அவர்களே இது கொலையா இல்லையா என்று முடிவுக்கு வருவர்; அதன்பின் நீதிபதி தண்டனையை அறிவிப்பார்; விசாரனை முழுவதும் நீதிபதி முன்னர்தான் நடைபெறும்; ஆனால் ஜூரிகள் முன்னால் வழக்கு விசாரனையை வக்கீல்கள் நடத்துவர்;
இந்த பெண்மணியின் வழக்கில், ஒரு பெண் ஜூரி கூட இல்லையாம்; அவள் கேட்கிறாள், “என் வழக்கில், பெண் ஜூரிகளும் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்” என்று கேட்கிறாள்; ஆனால் அங்குள்ள புளோரிடா மாநில சட்டத்தில் பெண்கள் ஜூரிகளாக இருக்க அனுமதி இல்லையாம்; எனவே அவளது கோரிக்கை மறுக்கப்படுகிறது; ஆண்களே ஜூரிகளாக இருந்து விசாரித்து, அவள் கொலைகாரிதான் என்று தீர்ப்பு சொல்கிறார்கள்;  
வழக்கை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு எடுத்துச் செல்கிறாள்; அங்கும் அதே வாதம்தான்; “நான் பெண்; என் மனநிலையை, பெண் ஜூரிகளால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்; ஆண் ஜூரிகள் இந்த வழக்கை விசாரித்தது சரியில்லை; மாநில சட்டத்தில் பெண் ஜூரிகளை நியமிக்க முடியாது என்ற சட்டம், அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது; சட்டத்தில் ஆண் பெண் என்ற பேதம் இருக்கக் கூடாது என்றே அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது” என்று வாதாடுகிறார் அவளின் வக்கீல்;
ஆனாலும், சுப்ரீம் கோர்ட் அந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை; அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் அப்போது நீதிபதிகளாக இருந்தவர்கள் எல்லோருமே ஆண்கள்;”
மற்றொரு வழக்கான ரீட் எதிர் ரீட் வழக்கு Reed vs Reed. அமெரிக்காவின் இடாகோ மாநிலம்; இதில் ஒரு தம்பதியருக்கு ஒரு பையன் இருக்கிறான்; அவன் சிறு வயதாக இருக்கும்போது, அவனின் பெற்றோர் இருவரும் பிரிந்து விட்டனர்; அவன் தந்தையுடன் வாழ்ந்து வருகிறான்; தாய் பிரிந்து சென்று விட்டாள்; அந்தச் சிறுவனுக்கு என்ன மன உளைச்சலோ தெரியவில்லை, தற்கொலை செய்து கொண்டு இறந்து விடுகிறான்; தந்தையின் வீட்டில் இது நடக்கிறது: காரியங்கள் எல்லாம் முடிந்த பின்னர், அந்த சிறுவனின் ஒரு சில பொருள்களை யார் வைத்துக் கொள்வது என்ற பிரச்சனை தாய்,தந்தைக்கு ஏற்படுகிறது; தாய் கேட்கிறாள், “என் மகனின் நினைவாக அவனின் பொருள்கள் எனக்கு வேண்டும்” என்கிறாள்; தந்தை கேட்கிறார், “இந்த இடாகோ மாநில சட்டப்படி, இறந்த மகனின் சொத்து, தகப்பனுக்குத்தான் சேரும் தாய்க்குச் சேராது என்று உள்ளது” என்று வாதம் செய்கிறார்;
வழக்கு அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்கிறது; 1971-ல் தீர்ப்பு; “ஆம், ஆண் பெண் வித்தியாசம் பார்க்கும் சட்டம் இது; எனவே இது அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானதுதான்; எனவே அந்த மாநிலச் சட்டம் செல்லாது; இறந்த சிறுவனின் உடமைகளை அவனின் தாயிடம் அவனின் நினைவாக ஒப்படைக்கவும்” எனத் தீர்ப்பு வருகிறது;
இந்த வழக்கில் இப்படி ஒரு தீர்ப்பு வந்தபின்னரே, அதற்கு பின் வந்த வழக்குகளில் பெண்களின் உரிமைகள் பற்றிய தீர்ப்புகள் அதிகமாக வரத் தொடங்கின” என்று அந்த பெண் நீதிபதி தன் நினைவுகளைப் பகிர்கிறார்;
1950ல் இந்த பெண் நீதிபதி தனது பட்டப்படிப்பை முடித்து டிகிரி வாங்குவதற்கு முதல் நாளில் அவரின் தாயார் இறந்து விடுகிறார்; தன் தாயார் துணிக்கடையில் வேலை செய்து தன்னைப் படிக்க வைத்ததாகவும் கூறுகிறார்: பின்னர் ஒருநாளில், 1993ல் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதி ஆகி, ஏற்புரை நிகழ்த்தும்போது, இதை நினைவு கூர்கிறார்: “The bravest and strongest person I have known, who was taken from me much too soon. I pray that I may be all that she would have been had she lived in an age when women could aspire and achieve and daughters are cherished as much as sons.”
**